பனிமய மாதா பேராலயம், தூத்துக்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை |
|||
வரிசை 30:
==வரலாறு==
முத்துக்குளித்துறையில் 1535-37-ம் ஆண்டுகளிலேயே பலர் கத்தோலிக்க மறையைத் தழுவியிருந்தனர்
முத்துக்குளித்துறையில் 1535-37-ம் ஆண்டுகளிலேயே பலர் கத்தோலிக்க மறையைத் தழுவியிருந்தனர். ஆனால் இவர்கள் மத்தியில் ஆன்மீகப் பணி புரியவும், வழிபாடுகள் நிறைவேற்றவும் குருக்கள் எவருமே இருக்கவில்லை. திருத்தந்தை 3-ம் சின்னப்பரால் [[இயேசு சபை]] குருக்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இக்குருக்கள் 1579-ஆம் ஆண்டில் தூத்துக்குடியில் ஐந்து அறைகளைக் கொண்டு ஒரு புதிய தலைமை இல்லத்தைக் கட்டியெழுப்பினர். தூத்துக்குடியில் ஏற்கனவே [[பேதுரு (திருத்தூதர்)|புதிய பேதுருவுக்கு]] அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் ஒன்று இருந்தது. இந்த ஆலயத்தை அருட்தந்தை பேதுரு கொன்சால்வஸ் என்பவர் 1538-ம் ஆண்டில் கட்டினார். இவ்வாலயம், கொச்சி மறைமாவட்டம் 1600-ம் ஆண்டில் உருவாகும் வரை, கோவா மறைமாவட்ட ஆயரின் ஆளுகையின் கீழ் இருந்தது. புனித இராயப்பர் ஆலயமே தூத்துக்குடி வாழ் கிறிஸ்தவர்களுக்கு முதல் பங்கு ஆலயமாக விளங்கிற்று. சுவாமி பேதுரு கொன்சால்வஸ்தான் இந்த ஆலயத்தின் முதல் பங்குக் குருவாக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பிறகு அவர் கொச்சிக்கு மாற்றலாகி சென்றுவிட்டார்.▼
முத்துக்குளித்தலில் சிறந்து விளங்கி, வளர்ந்து செழித்திருந்த பரதவ மக்களுக்கு எதிராக நாட்டை ஆண்ட குறுநில மன்னர்களும், 'மூர்கள்' எனப்பட்ட அரேபிய முஸ்லீம்களும் எழுந்தனர். பாண்டிய நாட்டின் அரசியல் குழப்பத்தால் பாண்டிய நாட்டிற்குப் படையெடுத்து வந்து சேர்ந்தவர்களே மூர்கள் என்ற முஸ்லீம்கள். இந்த ஆபத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள பரதவர்களுக்கு வழி இல்லை. இதனை அறிந்த 'ஜான் டி குருசு' என்ற போர்த்துகல் குதிரை வியாபாரி, பரதவர்களுக்குக் கை கொடுத்து உதவினார். கி.பி. 1535- இல் கிராமத் தலைவர்கள் பத்துப் பேரை, கொச்சியிலிருந்த போர்த்துக்கீசிய தளப்தி 'பெரோவாஸ்' என்பவரிடம் அழைத்துச் சென்று அவர்களுக்கு உதவ வேண்டினார். போர்த்துக்கிசியப் படைகள் மூர்களை ஒடுக்கினால் பரதவர்கள் அனைவரும் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவ வேண்டும் என்பதே நிபந்தனை. இந்த நிபந்தனையை பரதவர் ஏற்றனர். பெரோவாஸ் ஒரு பெரும்படையை 1536-இல் அனுப்பி முகமதியரை வென்றார். அதன் நன்றியாக 18 ஊர் பரதவர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாகத் திருமுழுக்குப் பெற்றனர்.
▲
==முதல் ஆலயம்==
ஆரம்பத்தில் இயேசு சபைக் குருக்கள் புனித இராயப்பர் ஆலயத்தின் பங்குப் பொறுப்பில் இருக்கவில்லை. இதன் காரணமாக அவர்கள் தங்களின் சொந்த வழிபாடு மற்றும் ஆன்மீகக் காரியங்களுக்கென தங்களுக்கென்றே தங்களின் தலைமை இல்லத்தோடு இணைந்தபடி ஓர் ஆலயத்தை உருவாக்கினர். இவ்வாலயம் ஆரம்பத்தில் இரக்கத்தின் மாதா (Senhora da Piedade) ஆலயம் என்று அழைக்கப்பட்டுது.
|