வானூர்தியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
[[File:Leonardo da Vinci helicopter and lifting wing.jpg|thumb|right|[[லியொனார்டோ டா வின்சி]] வடிவமைத்த பறக்கும் இயந்திரங்களின் வடிவங்கள், 1490]]
முந்தைய காலங்களில்
புத்திசாலித்தனமான சில ஆய்வறிஞர்கள் பறவைகளின் பறத்தல் செயலை ஆராய்வதன் மூலம் பறத்தல் குறித்த புரிதல்களைக் காண முயன்றனர். இத்தகைய முறைமையிலான ஆய்வுகளை இடைக்கால இசுலாமிய விஞ்ஞானிகள் மேற்கொண்டிருக்கின்றனர். நவீன வானியலாளர்களான [[லியொனார்டோ டா வின்சி]] மற்றும் 1799ஆம் ஆண்டுவாக்கில் [[ஜார்ஜ் கேலி|கெய்லி]] போன்றோர் பறவைகளின் பறத்தலை ஆய்வுசெய்தல் மூலமே அவர்களது பறத்தலுக்கான ஆராய்ச்சிகளைத் துவக்கினர்.
ஐரோப்பாவில் பறத்தல் குறித்து அறிவியல் பூர்வமான விவாதங்களை ஆரம்பித்தவர் "ரோஜர் பேக்கன்" என்பவர் ஆவார். அவர், பிற்காலத்தில் செயல்படுத்தப்படும் என்று அவர் நம்பிய இறக்கைகள்-அடித்துப்-பறக்கும் "ஆர்னிதோப்டர்" வானூர்தி மற்றும் காற்றைவிட-இலேசான ஊதுபை பறத்தல் போன்றவற்றின் செயல்பாடுகளை அறிவியல் முறையில் விளக்க முனைந்தார். அவரது ஊதுபை பறத்தலுக்கு, ஈதர் எனும் பொருள் மூலம் வளிமண்டலத்தில் ஏற்றம் பெறலாம் என்ற கருதுகோளை முன்வைத்தார், ஆனால், ஈதர் என்பதன் கூறுகளை அவர் அறிந்திருக்கவில்லை.{{sfn|Wragg|1974|pp=10–11}}
பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் லியானொர்டோ டா வின்சி பறவைகளின் பறத்தல்களை ஆய்வு செய்ததுடன், முன்மாதிரியான பறக்கும் இயந்திரங்களின் வடிவமைப்புகளையும் செய்தார். இறக்கைகள்-அடித்துப்-பறக்கும் "ஆர்னிதோப்டர்" வானூர்தி மற்றும் சுழலும்-இறக்கைகள் கொண்ட [[உலங்கு வானூர்தி]] ஆகியவற்றின் வடிவமைப்புகளின் வரைபடங்களை உருவாக்கினார். அவரது வடிவமைப்புகள் பகுத்தறிந்த ஆய்வாளருடையதாக இருந்தாலும், அடிப்படையில் சிறந்த அறிவியலைக் கொண்டிருக்கவில்லை.{{sfn|Wragg|1974|p=11}} அவரது வடிவமைப்புகளில் பெருத்த குறைபாடுகள் உண்டெனினும், அவர் பறக்கும் இயந்திரத்துக்கு காற்று எந்த அளவுக்கு தடையை உண்டுபண்ணுகிறதோ அதே அளவுக்கு அவ்வியந்திரமும் காற்றுக்கு எதிர்வினை ஆற்றும் என்பதை உணர்ந்திருந்தார்.{{sfn|Fairlie|Cayley|1965|p=163}} ([[ஐசாக் நியூட்டன்|நியூட்டன்]] தனது [[நியூட்டனின் இயக்க விதிகள்|மூன்றாவது இயக்க விதி]]யை 1687ஆம் ஆண்டுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.) அவரது ஆராய்ச்சிகள் மூலம் மனித-ஆற்றலால் மட்டுமே தொடர்ச்சியான பறத்தலை செயல்படுத்த இயலாது என்பதை உணர்ந்தார்; அவரது பிற்கால வடிவமைப்புகளில் [[சுருள்வில்]] போன்ற பலவித இயந்திரவியல் ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்தியிருந்தார். பிற்காலத்தில் பறத்தல் துறையில் [[ஜார்ஜ் கேலி]]யின் ஆராய்ச்சிகள் முன்னேற்றங்களை ஏற்படுத்த ஆரம்பிக்கும் வரை டாவின்சியின் ஆராய்ச்சிகளும் அவரது மறைவுக்குப் பின்னர் மறக்கப்பட்டன.
===மேலும் பார்க்க===
|