தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தமிழ் ஒலிப்புமுறை: remove the second (duplicate) copy of audio files
→‎வட்டார மொழி வழக்குகள்: add audio files for literary vs colloquial contrast.
வரிசை 110:
=== வட்டார மொழி வழக்குகள் ===
''முதன்மைக் கட்டுரை: [[தமிழ் வட்டார மொழி வழக்குகள்]]''
{{Listen
| type = speech
| header =
| filename = Thiruppugazh - Umbartharu - Hamsadhwani.wav
| title = திருப்புகழ் பாடல்.
| description = இலக்கிய தமிழில், (ஹம்ஸத்வனியில்) விநாயக பெருமானை துதித்து பாடல்.
| filename2 =Ta - குளிர் காய நேரமில்லை - அறிவுக் கதைகள் - ம.பொ.சிவஞானம்.ogg
| title2 = ம.பொ.சிவஞானம் எழுதிய 'அறிவுக் கதைகள்'
| description2 = செந்தமிழ் பலுக்கல்.
| filename3 = Oppaari Song.ogg
| title3 = பேச்சுத் தமிழில் ஒப்பாரி (பாடல்).
| description3 = ஒப்பாரி என்பது இறப்புக்கு பின் வருந்தி பாடுவது.
| filename4 =Ta-ponnagaram.ogg
| title4 = புதுமைப்பித்தன் எழுதிய 'பொன் நகரம்' சிறுகதை.
| description4 = கதை வாசிப்பு. (பிற மொழியில் இருந்து பெறப்பட்ட சில 'கடன் சொற்களையும்' கேட்கலாம்.)
}}
 
தமிழில் வட்டாரமொழி வழக்குகள், பெரும்பாலும் சொற்களை ஒலிப்பதிலேயே மாறுபடுகின்றன. மற்றும் பல வேறு பழைய செந்தமிழ்ச்சொற்களினின்றும் பிறந்தவையாகும். எடுத்துக்காட்டாக, "இங்கே" என்ற சொல் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்ட]]த்தில் பரவலாக "இஞ்ச" என்றும், [[தஞ்சாவூர்]] பகுதிகளில் "இங்க" என்றும், [[யாழ்ப்பாணம்]] (இலங்கை) பகுதிகளில் "இங்கை" என்றும் வழங்கப்படுகின்றது. ஆயினும் [[திருநெல்வேலி]] பகுதிகளில் "இங்கனெ" என்றும், [[இராமநாதபுரம்]] பகுதிகளில் "இங்குட்டு"/"இங்கிட்டு" என்றும் வழங்கும் சொற்கள் "இங்கே" என்ற சொல்லில் கிளைத்தவை அல்லாமல் வேறு செந்தமிழ்ச்சொற்களினின்றும் பிறந்தவையாகும். இங்கனெ என்பது "இங்கணே" அல்லது "இங்கனே" என்பதன் மாற்றமும் "இங்குட்டு"/"இங்கிட்டு" என்பது "இங்கட்டு" என்னும் செம்மொழிச்சொல்லின் மாற்றமும் ஆகும். "கண்" என்னும் சொல்லின் பொருள் இடம் ஆகும். சான்றாகச் சென்னைத் தமிழகராதி: "Place, site; இடம். ஈர்ங்கண்மா ஞாலம் (குறள், 1058)". கட்டு என்னும் சொல்லும் கண் என்பதோடு து-விகுதி சேர்ந்து வழங்கும் சொல்லாகும். கொங்குநாட்டார் இன்றும் "அக்கட்டாலே போய் உட்கார்" என்று சொல்வதைக் கேட்கலாம். "இங்கன்" அல்லது "ஈங்கன்" என்பதும் பழைய இலக்கியங்களில் காண்பவை (சென்னைப்பல்கலைக் கழகத் தமிழகராதி காண்க). இது ஒரே சொல்லே பலவாறு சிதைந்ததாகக் கருதும் கோட்பாட்டைத் திருத்த உதவும்; மேலும் வட்டாரவழக்குகள் பழைய இலக்கியச்சொற்கள் உண்மையிலேயே பேச்சில் வழங்கியதற்கு நல்ல சான்றாகவும் இருப்பதைக் காட்டும்.
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது