கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 104:
 
திரு.திருமதி.கந்தையா அவர்கள் காலத்தின் கட்டளையின் பேரில் 20.07.2008 இல் ஓய்வு பெற இக்கல்லூரியின் புதிய அதிபராக 03.11.2008 இல் திரு.வல்லிபுரம் நடராசா அவர்கள் கடமையை ஏற்றுக்கொண்டார்.திரு.வ.நடராசா அதிபர் காலத்தில் 2009 ஆம் ஆண்டு “திருஞானம்” என்னும் செய்திமடல் மாதாந்தம் வெளியிடப்பட்டது. இது இக்கல்லூரியின் மாணவர்களின் சாதனைகளையும் திறன்களையும் வெளிப்படுத்தும் வகையில் பாடசாலை நிகழ்வுகள் சம்பந்தமான முக்கிய தகவல்களையும் வெளிப்படுத்துகின்றன.2009 ஆம் ஆண்டு கல்லூரியின் '''அருணாசலம் அரங்கு''' புனரமைக்கப்பட்டமை,கல்லூரியின் கிழக்கே முகவாசல் மதில் புனரமைப்பு பணிகள் திரு.வ.நடராசா அதிபர் காலத்தில் ஆகும்.2003 ஆம் ஆண்டு இடம்பெற்ற பரிசில் நாளைக் கடந்து ஆறு வருடங்களின் பின்னர் 19.09.2009 இல் பரிசில் விழா அனைவரும் விரும்பக்கூடிய வகையில் நடைபெற்றது.
 
திரு.வ.நடராசா அதிபர் காலத்தில் முன்னாள் அதிபர் திரு.த.கந்தையா ,யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ட பதிவாளர் திரு. ந. இராசவிசாகன் ஆகியோரின் அணுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்ட ”கந்தையா புலமைப்பரிசில் நிதியம்” மாணவரை ஊக்குவிக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது கல்லூரியின் சிறப்பாகும். இக்கல்லூரியின் வளாகத்தை அழகூட்டும் வகையில் திரு.வ.நடராசா அதிபர் காலத்தில் சரஸ்வதி சிலையுடன் கூடிய தடாகம் ஒன்று அமைக்கப்பட்டது. இப் பணியில் கல்லூரியின் பழைய மாணவன் திரு.து.குமரநாதன் அவர்கள் சரஸ்வதி சிலையை இலவசமாக வடிவமைத்து கொடுத்துள்ளமை பாராட்டுக்குரியது.
 
=== கல்லூரியின் பழைய மாணவர்கள்===