திருநறுங்கொண்டை அப்பாண்டைநாதர் ஜிநாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
திருநருங்கொண்டை, உளுந்தூர்பேட்டையிலிருந்து வடமேற்காக 16 கி.மீ அல்லது திருக்கோவிலூரிலிருந்து 21 கி. மீ தென்கிழக்காகவும் அமைந்துள்ளது. இவ்வூரின் குன்றில் வரலாற்று சிறப்பு மிக்க திகம்பர சமணர்களின் அப்பாண்டைநாதர் கோவில் அமைந்துள்ளது.'''தடித்த எழுத்துக்கள்'''
==பார்சுவநாதர் கோவில்==
 
மலையின் மேற்பரப்பில் கிழக்கு மேற்காக இரு பாறைகளுக்கு நடுவில் அப்பாண்டைநாதர் திருவுருவம் புடைப்புச்சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுகளில் இம்மண்டபம் மேலைப்பள்ளியென குறிப்பிடப்படுகிறது.
''==சந்திர பிரபர் கோவில்==
கி.பி 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இக்கோவிலில், சந்திரபிரபர் திருவுருவம் சுதைச்சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.கல்வெட்டுகளில் இம்மண்டபம் கீழைப்பள்ளியென குறிப்பிடப்படுகிறது.
மேலும் மண்டபத்தின் உள் பகுதியில், தீர்த்தங்கரர் திருவுருவச்சிலைகளூம், தர்மதேவி, பிரம்மதேவர் சிலைகளூம் காணப்படுகின்றன. ஜிநவாணி மற்றும் பத்மாவதி அம்மனுக்கு தனி கோவில்கள் உள்ளன.
==கல்வெட்டுகள்==
கி.பி 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள், முதலாம் இராஜராஜ சோழன், முதலாம் இராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரமசோழன், இரண்டாம் இராஜேந்திர சோழன், இரண்டாம் குலோத்துங்கன், விக்கிரம பாண்டியன் ஆகியோரது கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.
==சமண படுகைகள்==
இக்கோயிலின் தெற்கே 40 அடி நீளமுள்ள குகையில், பன்னிரெண்டிற்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் செதுக்க்ப்பட்டுள்ளன. இக்குகைப்பள்ளியில் வீரசங்கம் என்ற சமணசங்கம் செயல்பட்டதாக கல்வெட்டுகளில் காணப்படுகிறது.
==மேற்கோள்கள்==
மேற்கோள்
#நடுநாட்டில் சமணம் _-ஆசிரியர் முனைவர் த.ரமேஷ், உதவி பேராசிரியர், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, விழுப்புரம் வெளியீடு:www.ncbhpublisher.com