மக்கள் ஜனநாயகம் (மார்க்சியம்-லெனினியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
'''ஜார்ஜ் லூகஸ்''' என்பவர் முதன் முதலில் ஜனநாயக குடியரசை செயல்படுத்த முன்வந்தவர்கள் கம்யூனிஸ்டுகளே என்று 1929-ல் வெளியான தன்னுடைய '''ப்ளம் தீஸிஸ்''' -ல் பரிந்துரைத்துள்ளார். [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப்போரின்]] முடிவில் சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த [[ஜோசப் ஸ்டாலின்]], அனைத்து கிழக்கு ஐரோப்ப கம்யூனிஸ்ட் கட்சிகளும் மக்கள் ஜனநாயகத்திற்க்கு ஆதரவாக இருக்க வேண்டும் என அறிவித்தார். [[நாஸி ஜேர்மனி|நாஸி ஜெர்மணி]] கிழக்கு ஐரோப்பாவில் தோல்விகண்ட பிறகு மார்க்ஸிச-லெனினிய கோட்பாட்டாளர்கள் சோசியலிஸத்தை சோவியத் சிகப்பு படையின் உதவியுடன் அமைதியான முறையில் அங்கு பரப்ப ஆரம்பித்தார்கள். பல கிழக்கு ஐரோப்ப நாடுகளில் கம்யூனிஸ்டுகள் நேரடியாக ஆட்சிக்கு வரவில்லை, மாறாக பல முற்போக்குக் கட்சிகளுடன் சேர்ந்து பணியாற்றினர். மற்ற ஐரோப்ப மாநிலங்கள், தொழிலாளர்களாலோ அல்லது பொதுவுடைமைக் கட்சிகளாலோ ஆட்சிசெய்யப்பட்டன. இதுபோல [[மா சே துங்]], '''அனைத்துவர்க்க ஜனநாயகம்''' என்று ஒரு கருத்தை 1940ல் ''On New Democracy'' என்ற கட்டுரை மூலம் முன்வைத்தார்.
 
[[File:Coat of arms of the USSR.png|thumb|right|200px|சோவியத் ஒன்றியம்]]
== கருத்து ==
மக்கள் ஜனநாயக செயல்பாடு ஆரம்ப நிலையில் பாட்டாளிவர்க்க [[சர்வாதிகாரம்|சர்வாதிகாரத்தின்]] வெளிப்பாடு போல தோன்றினாலும், விவசாயிகள், சிறுமுதலாளிகள் போன்ற வர்க்கங்களும் இதில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். மக்கள் ஜனநாயகத்திற்க்கும், சோவியத் ஜனநாயகத்திற்க்கும் இருக்கின்ற வித்தியாசமே, [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தை]] மாபெரும் தொழிலாளர் ஜனநாயக கூட்டமைப்பாக பிரதிபலித்தது.