| title = வரதட்சணை வெறுப்போம்! மனிதர்களாய் நடப்போம்! | publisher = தீக்கதிர் | url = http://www.theekkathir.in/Dowry%20Abolition%20Conference | accessdate = 14 அக்டோபர் 2013
}}</ref>
"திருவாரூர் மாவட்டம் சேரன்குளத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ கார்த்திகேயன் மகள் திவ்யா. இவரை, மன்னார்குடியைச் சேர்ந்த முத்தழகன்-ராணி தம்பதியின் மகனான திருச்சி அப்போலோவில் மருத்துவராகப் பணியாற்றும் இளஞ்சேரனுக்கு, கடந்த 2011-ம் ஆண்டில் திருமணம் செய்துவைத்தனர். முத்தழகன் யார் என்றால், மன்னார்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.பாலகிருஷ்ணனின் மகனாவார். மேலும், முத்தழகனின் சகோதரி வளர்மதியை, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைபெற்று, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள இளவரசியின் அண்ணன் வடுகநாதன் திருமணம் முடித்துள்ளார். இப்படி அரசியல் செல்வாக்குள்ள குடும்பத்தில் 100 பவுன் நகை, 10 லட்சம் ரூபாய் வரதட்சணையாகக் கொடுத்து, அந்தக் குடும்பத்தில் வாக்கப்பட்டார் திவ்யா. பல்வேறு வண்ணக் கனவுகளோடு புகுந்தவீடு சென்ற திவ்யாவின் கனவுகள் சில வருடங்களிலேயே நிர்மூலமாக்கப்பட்டது. ஆம், புது மலராகச் சென்ற திவ்யாவை பிணமாகத்தான் திருப்பி அனுப்பியது முத்தழகன் குடும்பம். 'சந்தேக மரணம்' என்று வழக்குப்பதிவுசெய்து முத்தழகன், ராணி, இளஞ்சேரன் மூவரையும் கைதுசெய்து சிறையிலடைத்தது மன்னார்குடி காவல்துறை. இந்நிலையில், இந்த வழக்கில் திடீர்த் திருப்பமாக, சந்தேக மரணமாக இருந்த திவ்யா வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட திவ்யாவின் கணவர் உள்ளிட்ட மூவரையும், ஜூலை 27 முதல் 29-ம் தேதிவரை மூன்று நாள்கள், மன்னார்குடி போலீஸார் கஸ்டடியில் எடுத்து விசாரித்துள்ளனர். விசாரணையின்போது கிடைத்தத் தகவல்கள், இந்த வழக்கில் புதிய திருப்பத்தைக் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர், விசாரணையை அறிந்த போலீஸ் உயரதிகாரிகள்.
முத்தழகன் குடும்பத்தினரின் வாக்குமூலம் என்ன?
"திவ்யாவிடம் மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டு 17.7.17 அன்றும் சண்டை ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் அதிகரித்து, திருவாரூரில் உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவில் எஸ்.எஸ்.ஐ-யாக இருக்கும் ராணியின் அண்ணன் சிவக்குமாரை வரவழைத்துள்ளனர். அவர், கரூரைச் சேர்ந்த லாரி டிரைவர் செந்திலைக் கூட்டி வந்துள்ளார். அவர்களும் சேர்ந்து திவ்யாவை மிரட்ட, ஒரு கட்டத்தில் சண்டை உச்சம் அடைந்து, திவ்யாவைத் தாக்கியுள்ளார் முத்தழகன். அதன்பிறகு அங்கிருந்த சிவகுமார், கரூர் செந்தில் ஆகியோர் சேர்ந்து, திவ்யாவின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொன்றுள்ளனர். வீட்டுக்கு வெளியே பேரனுக்கு சோறூட்டிக்கொண்டிருந்த ராணி, அவரைக் காரில் வைத்து பூட்டிவிட்டு, வீட்டிற்குள் வந்தவர் தடயங்களை எல்லாம் அழித்துள்ளார். இந்தக் கொலைக்கு இரண்டு லட்சம் ரூபாய் பேசப்பட்டு, ஒரு லட்சம் ரூபாயை சிவகுமாருக்கு முத்தழகன் முன்பணமாகக் கொடுத்துள்ளார். இதன்பிறகே, இந்தக் கொலை அரங்கேறியுள்ளது" என்றனர் போலீஸ் அதிகாரிகள் விரிவாக.
==References==
http://m.dailyhunt.in/news/india/tamil/vikatan-epaper-vika/oviyavukkakak+kural+kodukkum+neengal+tivyavai+kandu+kollavillaiye+kalangum+tivya+kudumbathinar-newsid-71323107
http://www.vikatan.com/news/coverstory/97547-confession-of-divya-killers.html
https://www.youtube.com/watch?v=Go_edyOqpN8
==இந்திய அரசின் சட்டங்கள்==
|