'''ஏஞ்சல் நீர்வீழ்ச்சிஅருவி''' உலகில் மிக உயரமான தடையின்றி விழுகின்ற [[அருவி]]யாகும். [[வெனிசுலா]] நாட்டிலுள்ள, [[கனைமா தேசியப் பூங்கா]]வில் 5°58′03″வ, 62°32′08″மே இல் அமைந்துள்ள இந்த அருவி 979 [[மீட்டர்]] (3,212 அடி) உயரமானது. இது 807 மீட்டர் (2,648 அடி) தடையின்றி விழுகின்றது. இது சுருன் [[ஆறு|ஆற்றில்]] அமைந்திருக்கிறது. இந்த அருவியின் முன்பு முதன்முதலில் பறந்தவர் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த ஜிம்மி ஏஞ்சல் என்பவர் ஆவார். அவரது அஸ்தி ஏஞ்சல் அருவியில் கரைக்கப்பட்டது.