இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
|||
வரிசை 149:
[[படிமம்:Sigiriya.jpg|thumb|left|சிகிரியா, குன்றுக் கோட்டை.]]
கிமு 380இல் [[பண்டுகாபயன்]] ஆட்சியின் போது இலங்கை அரசு அனுராதபுரத்துக்கு நகர்ந்தது. அன்றிலிருந்து சுமார் 1400 ஆண்டுகளுக்கு நாட்டின் தலைநகராக அனுராதபுரம் விளங்கியது.<ref>{{cite web | url = http://www.worldheritagesite.org/sites/anuradhapura.html | title = World Heritage site: Anuradhapura | work = worldheritagesite.org | accessdate = 15 July 2014}}</ref> பண்டைய இலங்கையர் குளங்கள், தாகபைகள் மற்றும் மாளிகைகள் போன்ற கட்டுமானங்களை அமைப்பதில் சிறந்து விளங்கினர்.<ref>{{cite web | url = http://mysrilankaholidays.com/ancient-sinhalese-irrigation.html | title = Waterworld: Ancient Sinhalese Irrigation | work = mysrilankaholidays.com | accessdate = 15 July 2014}}</ref> [[தேவநம்பிய தீசன்]] ஆட்சிக்காலத்தில் இந்தியாவிலிருந்து பௌத்த சமயத்தின் வருகையால் இலங்கையின் சமூகக் கட்டமைப்பு பாரிய மாற்றமடைந்தது. கிமு 250ல்,<ref>{{cite web | url = http://www.accesstoinsight.org/lib/authors/perera/wheel100.html#preface | title = Buddhism in Sri Lanka: A Short History | work = Perera H. R. | work = accesstoinsight.org | accessdate = 15 July 2014}}</ref> மௌரியப் பேரரசர் அசோகனின் புதல்வனான [[மகிந்தன்|மகிந்த தேரர்]] ({{lang-sa|महेन्द्र}}; மகேந்திர) பௌத்த சமயத்தைப் பரப்பும் நோக்குடன் மிகிந்தலைக்கு வந்தார்.<ref name="Macmillan1">{{cite book | author = Holt, John Clifford | contribution = Sri Lanka | year = 2004 | title = Macmillan Encyclopedia of Buddhism | editor = Buswell, Robert E., Jr. | pages = 795–799 | place = USA | publisher = Macmillan Reference USA | isbn = 978-0-8160-5459-6}}</ref> இவரது முயற்சியால் தேவநம்பியதீசன் பௌத்த சமயத்தைத் தழுவியதோடு ஏனைய
சூரதீச மன்னனின் காலத்தில் இலங்கை மீது முதல் வெளிநாட்டுப் படையெடுப்பு நிகழ்ந்தது. தென்னிந்தியாவிலிருந்து வந்த குதிரை வணிகர்களான சேனன் மற்றும் குத்திகன் ஆகியோர் சூரதீசனைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டனர்.<ref name="mahav1" /> கிமு205ல் சோழ மன்னனான [[எல்லாளன்]] இலங்கையைக் கைப்பற்றிக் கொண்டான். இவன் அசேலனைத் தோற்கடித்து 44 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். விசிதபுர போரில் [[துட்டகைமுனு]] எல்லாளனைத் தோற்கடித்தான். இவன் தென் பகுதி அரசான உறுகுணையின் அரசனான கவந்தீசனின் மூத்த மகனாவான். துட்டகைமுனு இலங்கையின் இரண்டாவது தாதுகோபமான ருவன்வெலிசாயவையும் லோவமகாபாயவையும் அமைத்தான்.<ref>{{cite web | url = http://www.beyondthenet.net/Saddha/ruvan.pdf| page = 4 | title = Ruvanveli Seya – The Wonderous Stupa Built by Gods and Men | work = beyondthenet.net | accessdate = 15 July 2014}}</ref> இலங்கை அரசு அதன் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டு கால வரலாற்றில் அதன் தென்னாசிய அயல் அரசுகளான சோழ, பாண்டிய, சேர, பல்லவ அரசுகளால் குறைந்தது எட்டு முறை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இவ் ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரும் தொடர்ச்சியாக விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.<ref>{{cite web | url = http://www.rootsweb.ancestry.com/~lkawgw/usurpation.html | title = Distortion of history for political purposes | work = De Silva, Harris | work = [[Ancestry.com]] | accessdate = 15 July 2014}}</ref> மேலும் கலிங்க நாடு (இன்றைய ஒடிசா) மற்றும் மலாயத் தீபகற்பம் ஆகியவற்றிலிருந்தும் படையெடுப்புகள் நிகழ்ந்துள்ளன. [[தாதுசேனன்]] ஆட்சியின்போது ''கலா வாவி'' மற்றும் அவுக்கண புத்தர் சிலை என்பன அமைக்கப்பட்டன.<ref name="sarachchandra">{{cite book | author = Sarachchandra, B. S. | title = අපේ සංස්කෘතික උරුමය | trans_title = Our Cultural Heritage | publisher = Silva, V. P. | pages = 121–122 | year = 1977 | language = Sinhala}}</ref>
|