திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎போக்குவரத்து: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 56:
விறன்மிண்ட நாயனார் அவதாரத் தலம்.<ref>தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 360,361</ref>
 
திருநீலகண்டம் பதிகம் - [[திருஞானசம்பந்தர்|திருஞானசம்பந்தரால்]] தேவாரம்
==அமைவிடம்==
அர்த்தநாரீசுவரர் கோயில் தமிழ்நாட்டில், [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல் மாவட்டத்தின்]] [[திருச்செங்கோடு]] நகராட்சியில் திருச்செங்கோடு மலையின் மீதுள்ளது. இக்கோயில் [[ஈரோடு|ஈரோட்டிலிருந்து]] 20 கிமீ தொலைவிலும் சேலத்திலிருந்து 45 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. மலையின் அடிவாரத்தில் [[திருச்செங்கோடு கைலாசநாதர் கோயில்]] உள்ளது.
 
'''பண் - வியாழக்குறிஞ்சி'''
 
திருச்சிற்றம்பலம்
 
{| class="wikitable"
|1249
|அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
 
உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே
 
கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ்
 
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
|1.116.1
|-
|1250
|காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்
 
ஏவினை யாலெயில் மூன்றெரித் தீரென் றிருபொழுதும்
 
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
 
தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
|1.116.2
|-
|1251
|முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற் றெவையு மெல்லாம்
 
விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்
 
இலைத்தலைச் சூலமுந் தண்டும் மழுவும் இவையுடையீர்
 
சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
|1.116.3
|-
|1252
|விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்
 
புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே
 
கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம்
 
திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
|1.116.4
|-
|1253
|மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோ ளுடையீர்
 
கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ
 
சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம்
 
செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
|1.116.5
|-
|1254
|மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புருத்திப்
 
பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்
 
பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்
 
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
|1.116.6
|-
|
|(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
|1.116.7
|-
|1255
|கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே
 
உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம்
 
செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே
 
திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
|1.116.8
|-
|1256
|நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து
 
தோற்ற முடைய அடியும் முடியுந் தொடர்வரியீர்
 
தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம்
 
சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
|1.116.9
|-
|1257
|சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும்
 
பாக்கிய மின்றி இருதலைப் போகமும் பற்றும்விட்டார்
 
பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம்
 
தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
|1.116.10
|-
|1258
|பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்
 
இறந்த பிறவியுண் டாகில் இமையவர் கோனடிக்கண்
 
திறம்பயில் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
 
நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே.
|1.116.11
|}
இது திருக்கொடிமாடச் செங்குன்றூரில் அடியார்களுக்குக்
 
கண்ட சுரப்பிணிநீங்க வோதியருளியது.
 
திருச்சிற்றம்பலம்
 
{| class="wikitable"
|இறைவர் திருப்பெயர்:
!அர்த்தநாரீஸ்வரர். (முருகன் - செங்கோட்டு வேலவர்).
|-
|இறைவியார் திருப்பெயர்:
!பாகம்பிரியாள்.
|-
|தல மரம்:
!இலுப்பை.
|-
|தீர்த்தம் :
!தேவ தீர்த்தம்.
|-
|வழிபட்டோர்:
!கேதார கௌரி.
|}
 
== ''தல வரலாறு'' ==
 
* மலை சிவந்தநிறமாக இருப்பதால் செங்கோடு என்று பெயர் பெற்றது. தெய்வத்திருமலை, நாகமலை, உரசகிரி எனப் பல பெயர்களும் உள்ளது.
* மலையேற உள்ள படிகளில் 60 ஆம் படி மிகச் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இங்கு நின்று சத்தியம் செய்தால் அது நீதி மன்றத்திலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நிலை இருந்ததாம்.
* கேதாரகௌரி, மரகத லிங்கத்தைப் பூசித்து, இறைவனின் பாகத்தைப் பெற்றதாக வரலாறு சொல்லப்படுகிறது.
* சம்பந்தர் கொங்கு நாட்டுத் தல யாத்திரையில் முதலில் இப்பதியை வணங்கி, பின்பு சில தலங்களுக்குச் சென்றுவிட்டு திரும்பவும் இங்கு வந்த போது, அவருடன் வந்த அடியார்களை 'நளிர்சுரம்' பற்றி வருத்த 'அவ்வினைக் கிவ்வினை' என்னும் பதிகம் பாடி, 'தீவினைவந்தெம்மைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்' என ஆணையிட்டு அந்நாடு முழுவதும் பிணிதீர்த்தார் என்பது பெரியபுராண வரலாறு.
* இத்தலத்துச் சொல்லப்படும் ஒரு செய்தி :- இங்கு வாழ்ந்த குணசீலர் என்ற புலவருக்காகச் செங்கோட்டுவேலர் மாடு மேய்கும் சிறுவனாக வந்து குணசீலரின் கடைமாணாக்கர் என்று தன்னைக் கூறிக்கொண்டாராம். பாண்டிப்புலவரேறு என்பவர்; "சமரமுகத் திருச்செங்கோடு சர்ப்பசயிலமெனில் அமரிற்படம் விரித்து ஆடாததென்னே" - என்று பாடி அதற்குமேல் எழுதமுடியாது திண்டாடினாராம்; அப்போது, சிறுவனாக வந்த வேலவன் "அஃது குமரன் திருமால் முருகன் மயில்வாகனம் கொத்துமென்றே" - எனப் பாட்டினை முடித்து அப்புலவரைத் திரும்பிப் போகும்படிச் செய்தார் என்ற செய்தி இம்மலையடிவாரத்தில் நிகழ்ந்ததாகுமென்று சொல்லப்படுகிறது.
 
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - வெந்தவெண் ணீறணிந்து
 
=== ''சிறப்புகள்'' ===
 
* சிவத்தலமாகயிருப்பினும் இது முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த தலம்.
* இது அர்த்தநாரித் தலம்.
* இத்தலம் மலைமீது உள்ளது.
* மேலமாட வீதியிலிருந்து பார்த்தால் இம்மலை பார்ப்பதற்கு நாகம் போன்றிருப்பதால் நாகாசலம் நாககிரி என்றும் பெயர் உண்டு.
* கோயிலுக்குச் செல்ல மலைமீது 1200 படிகள் ஏற வேண்டும். படிகட்டுக்களில் பாம்பு உருவங்கள் உள்ளன.
* ஓரிடத்தில் நீளமான (20 அடி) பாம்பு வாடிவத்திலேயே ஏறும் வழி அமைந்துள்ளது.
* இத்தலம் பற்றிய குறிப்புக்கள் சிலப்பதிகாரம், தேவாரம், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம் முதலியவைகளில் உள்ளன.
* செங்கோட்டு வேலவர் "அழகு மிளிரும்" நின்ற திருவுருவம்
* இறைவன் வெள்ளை பாஷாணத்தால் ஆன சுயம்பு மூர்த்தி. உளி படாதது விடங்கம் - அடியில் சதுரபீடம்.
* வேளாளக்கவுண்டர் மண்டபத்தூண் ஒன்றில் வீரபத்திரர் உருவமும், மற்றொன்றில் அர்ச்சுனன் தவக்கோலம், வேடன், குருவிக்காரியின் உருவமும் சிற்பக்கலையழகு நிறைந்தவை.
* அர்த்தநாரீஸ்வரர் மூலவர் - நின்ற திருமேனி. (இலிங்க வடிவமில்லை) பாதி புடவை - பாதி வேஷ்டி அலங்காரம்; இந்த கோலத்திலேயே (மூலவர்) காட்சி தருகிறார். முழு வடிவமும் வெள்ளைப் பாஷாணத்தால் ஆனது.
* திருவடியில் கீழ் குளிர்ந்த நீர் சுரக்கின்றது. இது தேவ தீர்த்தம் எனப்படுகின்றது. இத்தீர்த்தம் நாடொறும் வரும் அன்பர்கட்கு வழங்கப்படுவதைப்போல, அமாவாசை நாள்களில் 3, 4 அண்டாக்களில் சேகரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது.
* மூலவர் முன்னால் மரகத லிங்கமும், பிருங்கி மகரிஷியின் உருவமும் உள்ளது.
* இங்குள்ள ஆதிகேசவ பெருமாள் சந்நிதி, நம்மாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்டதாகும்.
* வீரகவிராஜபண்டிதரால் பாடப்பட்ட தலபுராணம் உள்ளது.
* இத்தலத்தில் முதலாம் இராசராசன், சுந்தரபாண்டியத் தேவர், மைசூர்கிருஷ்ணராஜ உடையார் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன.
 
==அமைவிடம்==
அஞ்சல் முகவரி: அர்த்தநாரீசுவரர் கோயில், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம். அஞ்சல் குறியீட்டு எண்: 637211.
 
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சேலம், ஈரோடு, நாமக்கல் முதலிய ஊர்களிலிருந்து பேருந்தில் செல்லலாம். ஈரோட்டிலிருந்து 18-கி. மீ. , சேலத்திலிருந்து 45 கிமீ தொலைவிலும் மற்றும் நாமக்கல்லிலிருந்து 32-கி.மீ. தொலைவில் உள்ளது. தொடர்பு : 04288 - 255925, 09364229181
 
மலையின் அடிவாரத்தில் [[திருச்செங்கோடு கைலாசநாதர் கோயில்]] உள்ளது.
 
==போக்குவரத்து==