காவிரி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary |
||
வரிசை 11:
| watershed = -
}}
'''காவிரி ஆறு (''Cauvery river'')''' அல்லது '''காவேரி ஆறு''' [[இந்தியா|இந்தியத்]] தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது. அது [[கர்நாடகம்|கர்நாடக மாநிலத்திலுள்ள]] [[மேற்குத் சம மலை|மேற்குத் தொடர்ச்சி மலை]]யில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது. இதன் நீளம் 800 கிமீ. கர்நாடகத்தில் [[குடகு]], [[ஹாசன்]], [[மைசூர்]], [[மாண்டியா மாவட்டம்|மாண்டியா]], [[பெங்களூர்]] ரூரல், [[சாமராசநகர் மாவட்டம்|சாம்ராஜ் நகர்]] மாவட்டங்கள் வழியாவும் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[தர்மபுரி மாவட்டம்|தர்மபுரி]], [[சேலம் மாவட்டம்|சேலம்]], [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]], [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]], [[கரூர் மாவட்டம்|கரூர்]], [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சி]] , [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]], [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] மாவட்டங்கள் வழியாகச் சென்று [[பூம்புகார்]] என்னும் இடத்தில் [[வங்காள விரிகுடா]]க் கடலில் கலக்கிறது.
[[படிமம்:River Cauvery TA.png|thumb|காவிரி ஆற்றின் வரைபடம்]]
வரிசை 44:
மிகக் குறுகிய அகலமுடைய, ஆனால் மிக ஆழமான ஆடு தாண்டும் காவிரியிலிருந்து தமிழகம் வரும் காவிரியானது [[பிலிகுண்டுலு]] வழியாக [[ஒகேனக்கல் அருவி]]யை அடைகிறது. பின் காவிரியானது [[மேட்டூர் அணை]]யை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. இங்கிருந்தே தமிழக காவிரிப் பாசனம் தொடங்குகிறது. மேட்டூரிலிருந்து வெளிவரும் காவிரியுடன் [[பவானி]] என்னுமிடத்தில் [[பவானி ஆறு]] கலக்கிறது. [[ஈரோடு]] நகரைக் கடந்து செல்லும் காவிரியுடன் [[கொடுமுடி]] அருகேயுள்ள நொய்யல் என்னுமிடத்தில் [[நொய்யல் ஆறு]] கலக்கிறது. அமராவதி ஆறானது [[கரூர்]] அருகேயுள்ள கட்டளை என்னுமிடத்தில் காவிரியுடன் கலக்கிறது. [[கரூர்]],[[திருச்சி]] மாவட்டங்களில் பாயும் காவிரி அகண்டு காணப்படுவதால் அங்கு பாயும் காவிரியை அகண்ட காவிரி என்பர். [[முசிறி]], [[குளித்தலை]] நகரங்களை தாண்டிச்செல்லும் காவிரி [[முக்கொம்பு]] என்னும் இடத்தில் [[மேலணை]]யை அடைகிறது. இங்கு காவிரி இரண்டு கிளைகளாக பிரிகிறது.
வட கிளை கொள்ளிடம் என்றும் தென் கிளை
தொடர்ந்து காவிரி என்றும் அழைக்கப்படுகிறது. வெள்ளக் காலத்தில் பெருகி வரும் நீரானது கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டாப்பகுதி பாதுகாக்கப்படுகிறது. [[கொள்ளிடம்]] காவிரியின் வெள்ள வடிகாலாக இருப்பதால் பெரும்பாலும் வறண்டே காணப்படும். கொள்ளிடம்,
[[படிமம்:Mouth of River Cauvery.JPG|900px|thumbnail|centre|காவிரி ஆற்றின் முகத்துவாரம், இப்படத்தில் இடது பக்கம் வங்காள விரிகுடா, இடம்: பூம்புகார்]]
|