நொய்யல் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
}}
'''நொய்யல் ஆறு''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[கோயம்புத்தூர் மாவட்டம்| கோவை மாவட்டத்தின்]], [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்| மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில்]] அமைந்த, [[வெள்ளியங்கிரி மலை]] அடிவாரத்தில், '''சாடிவயல்''' என்ற பகுதியில் சிற்றோடைகள் இணைந்து உருவெடுக்கிறது. சமவெளிக்கு இறங்கும் நொய்யல் ஆறு, கிழக்கு நோக்கி [[பேரூர்]], [[குனியமுத்தூர்]], கோவை [[வெள்ளலூர்]], [[இருகூர்]] [[சூலூர்]], மங்கலம், [[திருப்பூர்]], [[நொய்யல் ஒரத்துப்பாளையம்|ஒரத்துப்பாளையம்]] என 180 கிலோ மீட்டர் பயணித்து, [[கரூர்]] அருகே '''நொய்யல்''' கிராமத்தில் [[காவேரி ஆறு|காவிரி ஆற்றுடன்]] கலக்கிறது. இந்த ஆற்றின் சங்ககாலப் பெயர் ''காஞ்சிமா நதி'' என்பதாகும்.<ref>[http://tamil.thehindu.com/opinion/columns/நொய்யலை-மீட்போம்-வாருங்கள்/article8384135.ece நொய்யல் ஆறு]</ref>
 
== சிறுவாணி அருவி அல்லது கோவைக் குற்றால அருவி[தொகு] ==
சிறுவாணி மலைகளிலிருந்து உருவாகும் பெரியாறு, தமிழகத்தின் மேற்கு மலைத்தொடர்களின் கிழக்குச்சரிவில் பாய்ந்து மேலும் பல சிற்றாறுகளுடன் இணைந்து நொய்யல் ஆறாக உருவெடுக்கிறது. இவ்வாற்றில் [[சிறுவாணி நீர்வீழ்ச்சி|சிறுவாணி அருவி]] எனவும் அழைக்கப்பட்ட கோவைக் குற்றால அருவி அமைந்துள்ளது . கோவையிலிருந்து 37 கிமீ தொலைவில் அடர்ந்த கானகத்தில் அமைந்துள்ளது. இயற்கை எழிலுக்கும் தெளிவான நீரோட்டத்திற்கும் புகழ் பெற்றது. பாதுகாக்கப்பட்ட கானகப்பகுதியில் அமைந்துள்ளதால் மாலை 5 மணிக்குப் பிறகு பயணிகளுக்கு இங்கு செல்ல அனுமதி கிடையாது.
 
=== '''கொங்கு நாட்டின் அடையாளம்''' ===
வரி 38 ⟶ 41:
 
இக்கழிவுகள் எல்லாம் [[ஒரத்துப்பாளையம் அணை]]யில் தேங்கி அப்பகுதியின் நீர் நிலைகளை மோசமாக மாசுபடுத்தியுள்ளன. அப்பகுதியின் நிலத்தடி நீரும் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. நொய்யல் ஆற்றுப்பாசன விவசாயிகளின் வாழ்வாதாரம் இதனால் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. அவர்கள் தங்களின் இப்பிரச்சனையை நீதிமன்றம் எடுத்துச்சென்று திருப்பூர் சாய பட்டறைகளுக்கு எதிராக உத்தரவு பெற்றுள்ளனர். ஆற்று நீரை மாசுபடுத்தும் ஆலைகளுக்கு எதிராக கடும் நிலைப்பாட்டை எடுத்துள்ள [[இந்திய உச்சநீதி மன்றம்|உச்சநீதி மன்றம்]], சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே ஆற்றினில் கலக்க வேண்டும் என்றும் சுத்திகரிப்பு வசதி இல்லாத ஆலைகளின் உரிமம் பறிக்கப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. போராட்டங்கள், நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரும் சாயப்பட்டறைகள் சாயக்கழிவை ஆற்றில் கலந்துகொண்டுதான் இருக்கின்றன.
 
== சிறுவாணியும் நொய்யலும் ==
உலகில் இரண்டாவது சுவையான குடிநீர் என சிறுவாணி நீர் புகழப்பட்டாலும் அது இன்றைய கேரளத்தில் உள்ளது.அதே பகுதியில் உருவாகி தமிழகத்தில் ஓடும் நொய்யலை சுற்றுச் சூழல் விழிப்புணர்வின்றி சாக்கடை,இரசாயனக் கழிவுகளைக் கலந்து மாசுபடச் செய்து பயனற்ற செத்த ஆறாக மாற்றியுள்ளனர் தமிழர்கள்.
 
=== '''அரசு செய்ய வேண்டியது''' ===
பல்வேறு வகையான ஆக்கிரமிப்புகளால் அழிவின் விளிம்பிற்கு சென்ற நொய்யலை மீட்டெடுக்க கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட இயற்கை ஆர்வலர்கள், விவசாய அமைப்பினரும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தபோதிலும் அரசின் உதவியின்றி ஆற்றை முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்பது அவர்கள் கருத்து. அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
 
நகரப் பகுதிகளின் சாக்கடை ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும், ஆலைகளில் இருந்து நேரடியாக கலக்கும் ரசாயானக் கழிவுகளை தடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. மேலும் நொய்யல் மூலமாக ஏற்படுத்தப்பட்ட நீர் மேலாண்மை கட்டமைப்புகளை சீரமைக்கும் பட்சத்தில் நிலத்தடி நீர் அதிகமாகி நொய்யல் மீண்டும் உயிர் பெறும். நூற்றாண்டுகளாக அண்டை மாநிலங்களோடு தண்ணீருக்காக பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் இருக்கும் நீராதாரங்களை முறைப்படுத்த வேண்டும் என்பது உலக தண்ணீர் தினத்தை கடைபிடிக்கும் இந்த வேளையில் அனைவரும் நினைவில் நிறுத்த வேண்டிய ஒன்றாக உள்ளது.
[[படிமம்:Noyyal, Ungampalayam6.jpg|500px|thumb|300px|right|<center>நொய்யல் ஆறு </center>]]
 
"https://ta.wikipedia.org/wiki/நொய்யல்_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது