விளக்கம் : கர்ணன் பாண்டவர்களோடு இருந்தால் ஆறிலும் சாவு அதேபோல் கெளரவர்களோடு இருந்தால் நூறிலும் சாவு.
விளக்கம் : கர்ணன் பாண்டவர்களாகிய ஐந்து பேரோடு தானும் இணைந்து ஆறு பேராக இருந்தாலும் (ஆறிலும்) சாவு, அதேபோல் கெளரவர்களான நூறு பேரோடு இணைந்தாலும் (நூறிலும்) மகாபாரத போரில் சாவு என்பது ஒரு பொருள். அதை முன்வைத்து இறப்பு என்பது யாவருக்கும் பொதுவானது. அது எந்த வயதில் என்பது நிச்சயம் இல்லாதது.எனவே, எந்த வயதில் இருந்தால் நாம் இருந்தால் என்ன? ஒரு செயலை துணிந்து செய்ய வேண்டும் என்று ஊக்கத்தையும் வீரத்தையும் மனிதருள் விளைவிக்க சொல்லப்பட்ட பழமொழி.
#ஈயார் தேட்டை தீயார் கொள்வார்.
விளக்கம்: தமிழ்மொழியை பொறுத்த வரையில் அஃறிணையும் உயர்திணையாய் கொண்டு சிறப்பிக்கின் மரபு வாய்ந்தது.ஈக்கள் எனும் தேனீக்கள் (தேன்+ஈ=தேனீ) (ஈயார்) தமக்குத் தாமே அருந்திக் கொள்ள தேன்கூட்டை கட்டுகின்றன. அந்த தேன்கூட்டை வேடர்கள் தீ (தீயார்) கொண்டு அழித்து தேனை பெற்றுக் கொள்வார்கள். இதனை முன்வைத்து இப்பழமொழி சொல்லப்பட்டது. இருந்தபோதும். ஈகைக்குணம் இல்லாதர்களின் (ஈயார்) தேடுதலாகிய சொத்துக்களை தீயவர்களாகிய (தீயார்) திருடர்கள் அபகரிப்பார்கள் என்பதே இதன் விளக்கம் ஆகும்.