கருநாடக இசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
== வரலாற்று பின்னணி ==
தமிழகத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகும்.<ref>{{cite book|last=Rajagopal|first=Geetha|title=Music rituals in the temples of South India, Volume 1|year=2009|publisher=D. K. Printworld|isbn=8124605386, 9788124605387|page=111-112|url=http://books.google.co.uk/books?id=SgVPAQAAIAAJ&q=pannisai&dq=pannisai&hl=en&sa=X&ei=fG2NUamsAaWX1AXg2YEg&ved=0CDUQ6AEwAQ}}</ref> செம்மொழியில் ஏழிசை என: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி மற்றும் தாரம் என அழைக்கப்பட்டதையே தமிழ்மொழியில் வடமொழிக் கலப்பு ஏற்பட்டபோது இந்த ஏழு இசைகளை ‘சுரம்’ என்றனர்.<ref>{{cite web|url=http://www.tamilvu.org/courses/degree/d051/d0513/html/d0513112.htm|title=ஏழிசை|author= தமிழ் இணைய பல்கலைக்கழகம்|date= |website= |publisher=த.இ.ப. |accessdate=8 May 2013}}</ref>
 
[[தியாகராஜ சுவாமிகள்]], [[முத்துசுவாமி தீட்சிதர்]], [[சியாமா சாஸ்திரிகள்]] என்னும் மூவரும் கர்நாடக இசையின் '''மும்மூர்த்திகள்''' எனக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இயற்றிய ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்றுவரை கர்நாடக இசையின் உயிர் நாடியாக உள்ளன. இம்மூவருக்கும் முன்னர் '''ஆதி மும்மூர்த்திகள்''' என [[முத்துத் தாண்டவர்]], [[அருணாசலக் கவிராயர்]], [[மாரிமுத்துப் பிள்ளை]] என்னும் முப்பெரும் இசை அறிஞர்கள் சீர்காழியில் வாழ்ந்து கருநாடக இசையை செப்பமுற வளர்த்தனர். இவர்கள் தியாகராஜ சுவாமிகள் போன்றோருக்கு வழிகாட்டிய முன்னோடிகள். ஆதி மும்மூர்த்திகள் பாடிய இசைப்பாடல்கள் புகழ்பெற்ற தமிழ்ப்பாடல்கள்.
வரிசை 11:
== நாதம் ==
{{Main|நாதம்}}
[[செவி]]க்கு இனிமை கொடுக்கும் த்வனி '''நாதம்''' எனப்படும். சங்கீதத்தில் மூலாதாரமாக விளங்குவது நாதம் ஆகும். ஒழுங்கான முறையில் எழுப்பப்படும் ஒலி [[நாதம்]] எனப்படுகிறது. ஒழுங்கற்ற முறையில் எழுப்பப்படும் [[ஒலி]] இரைச்சல் எனப்படுகிறது. [[நாதம்|நாதத்திலிருந்து]] [[சுருதி]]யும், [[சுருதி]]யிலிருந்து [[ஸ்வரம்|ஸ்வரமும்]], ஸ்வரத்திலிருந்து [[இராகம்|இராகமும்]] உண்டாகிறது. [[நாதம்|நாதத்தில்]] இரு வகை உண்டு அவையாவன;.
* ஆகதநாதம் - மனித முயற்சியினால் உண்டாக்கப்படும் நாதம் '''ஆகத நாதம்''' எனப்படும்.
* அநாகதநாதம் - மனித முயற்சி இல்லாமல் இயற்கையாக உண்டாகும் நாதம் அநாகத நாதம் எனப்படும்.
 
== சுருதி ==
{{Main|சுருதி}}
[[பாட்டு|பாட்டைத்]] தொடங்குவதற்கு அடிப்படையாக உள்ள விசேட [[ஒலி]]யே '''சுருதி''' எனப்படும். இதுவே இசைக்கு ஆதாரமானது. இது கேள்வி என்றும், அலகு என்றும் அழைக்கப்படும்.[[நாதம்|நாதத்திலிருந்து]] சுருதி உற்பத்தியாகிறது. சுத்தமாக இசைக்கப்படும் சங்கீதம் அதாவது சுருதி தான் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். சுருதி [[சங்கீதம்|சங்கீதத்திற்கு]] மிகப் பிரதானம் என்பதால் [[சுருதி]] [[தாய்|மாதா]] என அழைக்கப்படும். சுருதி இரண்டு வகைப்படும், அவையாவன...
*பஞ்சம சுருதி - மத்திமஸ்தாயி ஸட்ஜத்தை ஆதாரமாகக் கொண்டு பாடப்படுவது பஞ்சம சுருதி எனப்படும். ஸபஸ் எனப் பாடுவது.
*மத்திம சுருதி - மத்திமஸ்தாயி மத்திமத்தை ஆதாரமாகக் கொண்டு பாடப்படுவது மத்திம சுருதி எனப்படும். ஸமஸ் எனப் பாடுவது.
 
சாதாரண [[உருப்படி]]கள் யாவும் பஞ்சம சுருதியிலேயே பாடப்படுகிறது. நிஷாதாந்திய, தைவதாந்திய, பஞ்சமாந்திய [[இராகம்|இராகங்களில்]] அமைந்த [[பாடல்கள்]] மத்திம [[சுருதி]]யில் பாடப்படுகின்றன.அனேகமான [[நாட்டார் பாடல்]]கள் மத்திம சுருதியில் தான் பாடப்படுகிறது. சுருதி சேர்க்கப்படும் [[ஸ்வரங்கள்]] ஸபஸ் (ஸா பாஸாபாஸா).
வரிசை 51:
 
== லயம் ==
பாட்டின் வேகத்தை ஒரே சீராகக் கொண்டு செல்வது லயம் எனப்படும். சுருதி இல்லாமல் பாட்டு எப்படி மதிப்பில்லையோ அதே போல் லயம் இல்லாத பாட்டிற்கும் மதிப்பில்லை எனவே இது பிதா எனப்படுகிறது. லயம் மூன்று வகைப்படும்.

அவையாவன,
 
*விளம்பித லயம்
*மத்திமவிளம்பித லயம்;
*துரிதமத்திம லயம்;
*துரித லயம்.
 
== ஆவர்த்தம் ==
ஒரு தாளத்தில் அங்கங்கள் முழுவதையும் ஒரு முறை போட்டு முடிப்பது ஓர் ஆவர்த்தம் எனப்படும். இது ஆவர்த்தனம், தாளவட்டம் என்றும் அழைக்கப்படும். இதன் குறியீடு // உதாரணமாக [[ஆதி தாளம்|ஆதி தாளத்தை]] எடுத்துக்கொண்டால் ஒரு லகுவையும் 2 துருதங்களையும் போட்டு முடித்தால் ஒரு ஆவர்த்தனம் எனப்படும்.
 
== தாளம் ==
"https://ta.wikipedia.org/wiki/கருநாடக_இசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது