சமசுகிருதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தவறான தொகுப்புகளை நீக்குகிறேன் |
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2593891 Gowtham Sampath உடையது. (மின்) அடையாளம்: Undo |
||
வரிசை 54:
வடமொழியே [[இந்தோ-ஆரிய மொழிக் குடும்பம்|இந்தோ-ஆரியனின்]] ஒரு கிளையான [[இந்தோ-ஈரானியன் மொழிக் குடும்பம்|இந்தோ-ஈரானியனின்]] மிக மூத்த உறுப்பு மொழியாகும்.
வேதங்களும், தொன்மையான வடநூல்களும் எழுதப்பட்ட வேதகால வடமொழியே இம்மொழியின் மிகப்பழைய வடிவமாகும். மிகப் பழைய வேதமான [[இருக்கு வேதம்]] கி.மு இரண்டாவது ஆயிரவாண்டின் இடையில் இயற்றப்பட்டது
[[பாணினி]]யின் c. கி.மு 500 [[அஷ்டாத்தியாயி]] ("8 அத்தியாய இலக்கணம்"). காப்பிய வடமொழி என்று அழைக்கப்படும் ஒரு வடமொழி வடிவத்தை [[மகாபாரதம்]] மற்றும் ஏனைய [[இந்து சமயம்|இந்து]]க் [[காப்பியம்|காப்பியங்க]]ளில் காணலாம்.
வரிசை 68:
=== நவீன இந்தியா ===
சமஸ்கிருதத்தின் சொற்தொகுதியையும், இலக்கண அடிப்படையையும் கொண்டு உருவான தற்காலத்து மொழிகள் மீதான அம் மொழியின் தாக்கம் மிகவும் பெரியது. சிறப்பாக, இந்தியச் சமுதாயத்தில் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் மத்தியில், சமஸ்கிருதம், இந்து சமய நூல்களின் களஞ்சியமாகவும், வழிபாட்டுக்குரிய மொழியாகவும் போற்றப்படுகின்றது. வழிபாடுகளில் நாட்டார் மற்றும் பிரதேச வழக்காறுகளும் பரவலாகக் காணப்பட்டபோதிலும், பல இந்துக்கள் சம்சுகிருத மந்திரங்களை ஓதி வருவதுடன், பெரும்பாலான கோயில்களில் கிரியைகளும் சமஸ்கிருத மொழியிலேயே இன்றும் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் பிரதேச மொழிகளான வங்காளி, [[குசராத்தி]], [[இந்தி]] முதலியவற்றின், தூய நிலை எனக் கருதப்படும், உயர்நிலை வடிவங்கள் பெருமளவில் சமஸ்கிருதப் படுத்தப்பட்டவையாகக் காணப்படுகின்றன. தற்கால இந்திய மொழிகளில், இந்தி பேச்சு வழக்கில் [[அரபு மொழி|அரபி]] மற்றும் [[பாரசீக மொழி]]களின் தாக்கத்தைப் பெருமளவில் கொண்டிருந்தபோதும், வங்காளி, [[மராத்தி]] போன்ற மொழிகள் கூடிய அளவில் சமஸ்கிருத சொல் மூலங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. இந்தியாவின் தேசியப் பாடலாக கருதப்படும் ''ஜன கண மன'', என்ற பாடல் பெருமளவில் சமஸ்கிருதப் படுத்தப்பட்ட வங்காள மொழியின் உயர்நிலை வடிவில் இயற்றப்பட்டது. ''வந்தே மாதரம்'' என்ற சுதந்திரப்பாடல் முழுமையாக சமஸ்கிருததில் இயற்றப்பட்டதாகும். இந்து சமயம் தொடர்பான கல்வியைப் பொறுத்தவரை, சமுதாயத்தின் உயர்மட்டத்திலுள்ள படித்தவர்கள் மத்தியில் சமஸ்கிருதம் இன்னும் கற்கை மொழியாகப் போற்றப்பட்டது.
சீன மொழியிலும், பண்பாட்டிலும் கூடச் சமஸ்கிருத மொழியின் தாக்கங்கள் காணப்படுகின்றன. [[பௌத்த சமயம்]] சீனாவுக்குப் பரவியபோது சமஸ்கிருதம் கலந்த [[பிராகிருத மொழி]] நூல்களூடாகவே பரவியது. பௌத்த நூல்கள் சீன மொழியில் எழுதப்பட்டபோது, சமஸ்கிருதச் சொற்களை ஒலிமாற்றம் செய்தே எழுதினர். இதனால் பல சமஸ்கிருத மொழிச் சொற்கள் சீன மொழியிலும் கலந்தன.
|