[[ஸ்ரீசைலம்]] மகாபாரதத்திலும், புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. [[கந்த புராணம்|கந்த புராணத்தில்]] சிறீசைல காண்டம் என்னும் அத்தியாயம் ஒன்று உண்டு. இது இக் கோயில் மிகப் பழங்காலத்திலேயே தோன்றியதற்குச் சான்றாக அமைகின்றது. அத்துடன் கிபி 7 - 9 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தமிழ் [[நாயனார்|நாயன்மார்]]கள் இக் கோயிலைப் பாடியுள்ளனர். [[ஆதிசங்கரர்]] இங்கு வந்ததாகவும் இங்கேயே தனது [[சிவானந்த லகரி]] என்னும் சமஸ்கிருத நூலை எழுதியதாகவும் சொல்லப்படுகிறது. பிரம்மராம்பிகை அம்மன் கோவிலின் கோபுரத்தை மராட்டிய மன்னர் வீர சிவாஜி கட்டினார், எனவே இன்றளவும் அதனை சிவாஜி கோபுரம் என்றே அழைக்கின்றனர்.