அற்புதத் திருவந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 190:
மயனாகி நின்றானும் வந்து.......................................21
வந்திதனைக் கொள்வதே ஒக்குமிவ் வாளரவின்
சிந்தையது தெரிந்து காண்மினோ - வந்தோர்
இராநீர் இருண்டனைய கண்டத்தீர் எங்கள்
பிரான்நீர் உம்சென்னிப் பிறை.....................................22
பிறையும் புனலும் அனல் அரவும் சூடும்
இறைவர் எமக்கிரங்கா ரேனும் - கறைமிடற்ற
எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே
எந்தையா வுள்ள மிது............................................23
இதுவன்றே ஈசன் திருவுருவ மாமாறு
இதுவன்றே என்றனக்கோர் சேமம் - இதுவன்றே
மின்னுஞ் சுடருருவாய் மீண்டாய்என் சிந்தனைக்கே
இன்னும் சுழல்கின்ற திங்கு........................................24
இங்கிருந்து சொல்லுவதென் எம்பெருமான் எண்ணாதே
எஙகும் பலிதிரியும் எத்திறமும் - பொங்கிரவில்
ஈமவனத் தாடுவதும் என்னுக்கென் றாராய்வோம்
நாமவனைக் காணலுற்ற ஞான்று....................................25
ஞான்ற குழற்சடைகள் பொன்வரை போல் மின்னுவன
போன்ற கறைமிடற்றான் பொன்மார்பி்ன் - ஞான்றெங்கும்
மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே
அக்கயலே தோன்றும் அரவு......................................26
அரவமொன் றாகத்து நீநயந்து பூணேல்
பரவித் தொழுதிரந்தோம் பன்னாள் -முரணழிய
ஒன்னாதார் மூவெயிலும் ஓரம்பால் எய்தானே
பொன்னாரம் மற்றொன்று பூண்.....................................27
பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின்
நாணாக மேல்மிளிர நன்கமைத்துக் - கோள்நாகம்
பொன்முடிமேற் சூடுவதும் எல்லாம் பொறியிலியேற்கு
என்முடிவ தாக இவர்...........................................28
இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம்
இவரை யிகழ்வதே கண்டீர் - இவர்தமது
பூக்கோல மேனிப் பொடிபூசி என்பணிந்த
பேய்க்கோலம் கண்டார் பிறர்.....................................29
பிறரறிய லாகாப் பெருமையரும் தாமே
பிறரறியும் பேருணர்வும் தாமே - பிறருடைய
என்பே அணிந்திரவில் தீயாடும் எம்மானார்
வன்பேயும் தாமும் மகிழ்ந்து.......................................30
மகிழ்தி மடநெஞ்சே மானிடரில் நீயும்
திகழ்தி பெருஞ்சேமம் சேர்ந்தாய் - இகழாதே
யாரன்பே யேனும் அணிந்துழல்வார்க் காட்பட்ட
பேரன்பே இன்னும் பெருக்கு......................................31
|