ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
திருத்தம்
வரிசை 124:
 
 
 
"என்னை பொறுத்தவரை ஒரே விஷயம்தான் எனக்கு முக்கியமாகப் படுகிறது. அது என்னவெனில், மனிதனை எந்தவொரு வரையறைக்கும் உட்படாமல், முழுமையாக விடுவிப்பதே; சுதந்திரமாக்குவதே -- எல்லாவிதமான பந்தங்களிலிருந்தும், பயத்திலிருந்தும் அவனை விடுவிப்பதே. மாறாக, புதிய மதத்தையோ, புதிய பிரிவையோ, புதிய கோட்பாடுகளையோ, புதிய தத்துவங்களையோ உருவாக்குவதல்ல என் நோக்கம்."
"என்னை பொறுத்தவரை ஒரே விஷயம்தான் எனக்கு முக்கியமாகப் படுகிறது. அது என்னவெனில், மனிதனை எந்தவொரு வரையறைக்கும் எல்லைக்கும் உட்படுத்தாமல், பரிபூரணமாக விடுதலை அடையச்செய்வதே; சுதந்திரமாக்குவதே – எல்லாவிதமான பந்தங்களிலிருந்தும், பயத்திலிருந்தும் அவனை விடுவிப்பதே. மாறாக, புதிய மதத்தையோ, புதிய பிரிவையோ, புதிய கோட்பாடுகளையோ, புதிய தத்துவங்களையோ உருவாக்குவதல்ல என் நோக்கம்."
 
அதன் பிறகு 60 ஆண்டுகளாக தன் வாழ்நாள் முழுவதும் உலகப்பயணம் மேற்கொண்டு உலகிற்கு இந்த சத்தியத்தை பற்றி பறை சாற்றி வந்தார்.
வரி 139 ⟶ 140:
சென்னையில் ஆற்றிய கடைசி சொற்பொழிவிற்கு ஆறு வாரங்களுக்குப் பிறகு, தனது 91-ஆம் (17.02.1986) வயதில் ஓஹாயில் கிருஷ்ணமூர்த்தி அமரரானார்.
 
 
'''''உலகத்திற்கோர் ஒளி'''''
 
இறுதி நாட்கள் வரையிலும், உலகின் பற்பல நாடுகளுக்கும் நகரங்களுக்கும் பயணித்து சொற்பொழிவுகள் செய்து வந்தார். மும்முரமான நிகழ்ச்சி நிரலாக இருந்த அவர் பயணங்களில், பொது கூட்டங்களில் பேசினார்; நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் நடத்தினார். அவரின் வாழ்வியல் சிந்தனைகளை கைப்பட எழுதி வைத்தார். துக்கத்தை சுமந்துகொண்டு தன்னை நாடி வரும் ஆண்களோடும் பெண்களோடும் ஆறுதலாக மௌனத்தில் அமர்ந்திருக்கவும் செய்தார். படிப்பறிவின் அடிப்படையில் பிறந்ததல்ல அவரின் போதனைகள். வாழ்வைப் பற்றிய அவரின் உள்ளார்ந்த உணர்வில், அக நோக்கில் மலர்ந்தவை அவை.
 
அக்காரணத்தினால்தான் அவரின் அனைத்து கலந்துரையாடல்களும், புத்துணர்சியூட்டுவதாகவும் நேரடித்தொடர்பை அக்கணத்திலேயே ஏற்படுத்துவதாகவும் மிளிர்ந்தன. தனிப்பட்ட முறையில், அவரைச் சந்திக்க வருபவர்களுடன் அவர் நிகழ்த்திய உரையாடல்களில், அவர் ஒரு காருண்ய மிக்க ஆசானாக இருந்தார். அவருடைய அறிவுரையை நாடி வருபவர்களின் பேச்சை உன்னிப்பாகக் கவனித்து கேட்டபின், அவர்கள், தங்களையன்றி வேறொன்றையும் சாராமல் இருப்பதின் அவசியத்தை அவர்களுக்கு வலியுறுத்துவார். வேதாந்திகள், புத்த மதத்தலைவர்கள், மத சாஸ்திர விற்பன்னர்கள், தத்துவவாதிகள், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், சீர்திருத்தவாதிகள், சுற்றுசூழல் ஆர்வலர்கள், உளவியல் நிபுணர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், போர்வீரர்கள், தொழிலதிபர்கள், சினிமா நடிகர்கள், இல்லத்தரசிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கோடீஸ்வரர்கள், சந்நியாசிகள் என்று இந்தப் பட்டியலுக்கு முடிவே இல்லை எனலாம். அனைத்துத் தரப்பு மக்களுடனும் அவர் கலந்துரையாடினார்.
 
பெரும் பொதுக்கூட்டங்களில் அவர் உரை நிகழ்த்தியபோது, அவையில் இருந்தவர்கள், தங்களின் குறிப்பிட்ட பிரச்சினையைப் பற்றி தங்களுடன் தனிப்பட்ட முறையில் அவர் பேசுவதாகவே உணர்ந்தனர். கிருஷ்ணமூர்த்தியின் உரையை கேட்டபின் புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியர் ஆல்டஸ் ஹக்ஸ்லீ, ‘இது நான் விரும்பிக்கேட்ட சொற்பொழிவுகளிலேயே என்னை மிகவும் ஈர்த்த ஒன்று. புத்தபிரானின் பிரசங்கத்தை கேட்டது போலிருந்தது – அத்தனை சக்தி, அத்தனை உள்ளார்ந்த மகிமை’ என்று கூறினார்.
 
தன்னை நாடி வந்தவர்களின் செல்வத்தையோ வழிபாட்டினையோ கிருஷ்ணமூர்த்தி ஏற்றுக்கொண்டதில்லை. அவர்களுக்கு குரு என்ற ஸ்தானத்தில் இருக்கவும் மறுத்தார். தங்களை தெளிவாகக் காட்டும் நிலைக்கண்ணாடியாக தன்னை உபயோகித்துக் கொள்ளும்படி, அவர்களிடம் வலியுறுத்திக் கூறினார். அவ்வாறு செய்வதால் அதிலிருந்து வரும் விழிப்புணர்வே, விலங்கிட்டிருக்கும் அவர்களின் தளைகளிலிருந்து, அவர்களை விடுவிக்கும் என்றும் எடுத்துரைத்தார்.
 
அவரைப் பற்றியோ அல்லது அவரின் மேன்மையான புரிதலின் ரகசியத்தைப் பற்றியோ கேட்கப்படும் கேள்விகளை, சில சமயம் அவற்றை வினவியவர்களின் மீதே திருப்பி விடுவார். ஒருமுறை ஒரு பொதுக்கூட்டத்தில், ஒருவர், ‘நீங்கள் யார்?’ என்று கிருஷ்ணமூர்த்தியை நோக்கிக் கேட்டார். அக்கேள்விக்கு, அவருக்கே உரித்தான பாணியில், கிருஷ்ணமூர்த்தி பதிலளித்தார்: ‘இதுவா முக்கியமான கேள்வி? இல்லை, கேள்வி கேட்டவர், ‘நான் யார்?’ என்று தன்னையே கேட்டுக்கொண்டிருக்க வேண்டுமா? நீங்கள் யார் என்ற தன்னறிவு பெறுவது தான் மிகவும் முக்கியம். நீங்கள் யார் என்று கண்டறிய, நீங்கள் சுயவிசாரனை செய்ய வேண்டும்’.
 
ஆசானாகிய(Teacher) அவர் முக்கியமில்லை, அவர் நிறுவிய ஸ்தாபனங்கள் முக்கியமல்ல, அவரின் நூல்களோ, ஒலிப்பதிவு நாடாக்களோ கூட முக்கியமல்ல என்று பல சந்தர்ப்பங்களில், பல விதங்களில் அவர் தமது உறுதியான கருத்தை திரும்ப திரும்ப வலியுறுத்தி வந்தார். அவர் ஆற்றிய சொற்பொழிவுகளை கேட்க ஆவலுடன் வந்தவர்கள், அவர் நூல்களைப் படித்தவர்கள், அவர் பெயரில் இயங்கிய நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் போன்ற ஆயிரமாயிரம் நபர்களிடமிருந்து கிருஷ்ணமூர்த்தி எதிர்ப்பார்த்த ஒரே ஒரு விஷயம், அவர்கள், தன் போதனைகளை வாழ்க்கையாகவே வாழ வேண்டும் என்பதே. போதனை வாசகங்களின்படி வெறுமனே நடப்பது என்பது மேம்போக்கான, ஆழமற்றச் செயல்.
 
அவர் வாழ்ந்த காலத்தின் நெருக்கடி நிலைமைகளைப் பற்றி மட்டும் அலசி ஆராய்ந்து தீர்வு காண்பதுடன் அவர் நின்று விடவில்லை. பிற்காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகளையும் அவருடைய தீர்க்க தரிசனத்தால் அறிந்து, நம்மை எச்சரித்து உள்ளார்.
 
இரண்டு உலகப் போர்களுக்கும் காரணமாக இருந்த தேசியவாதம்; அணு ஆயுத பிரயோகத்தால் விளைந்த பெரும் நாசம்; அரசியல் சித்தாந்தங்களின் முரண்பாட்டால் வெடித்த வன்முறை; பூமியை காட்டுமிராண்டித்தனமாக அழித்தது; வேகமாக வளர்ந்து வரும் தீவிர மத அடிப்படைவாதம்; தகவலறிவின் அதீத வளர்ச்சி; அளவுக்கு மீறிய அறிவாற்றல்; இன்ப களியாட்டங்களின் பாதையில் செல்ல மனிதனுக்கு உதவும் கணினியும் தானியங்கிகளும்; மரபணு மாற்ற தொழில்நுட்பத்தின் அச்சுறுத்தல்; கல்விமுறையின் சீர்குலைவு; தலை விரித்தாடும் புலனின்ப கலாச்சாரம்; பண்புகளின் வீழ்ச்சிஇவை போன்ற பிரச்சினைகளும் மற்றும் பலவும் அவரின் மைய அக்கறையாக இருந்தன.
 
இருந்தபோதிலும் கிருஷ்ணமூர்த்தியால் அழுத்தமும் முக்கியத்துவமும் கொடுத்து சொல்லப்பட்டவை, சமுதாய சீர்த்திருத்தங்களோ சமுதாய நற்பணிகளோ அல்ல. சுயவிசாரணை மற்றும் தன்னறிவின் மூலம் சத்தியத்தைத் தேடும் மனிதனின் தொன்மைமிக்க தேடலிற்கே, நாட்டத்திற்கே அவர் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வலியுறுத்தி பேசினார். தனது தெளிவான, ஆழ்ந்த கண்ணோட்டத்தில் பிறந்த கருத்தான மனிதனின் எந்தவொரு பிரச்சினையையும் எண்ணத்தால் தீர்த்துவைக்க முடியாது. ஏனெனில், ‘எண்ணம், தானே தனக்குள் ஒரு பிரச்சினையாக இருக்கிறது’ என்ற வாசகத்தை அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார்.
 
இதுவரை மனிதன் புரிந்து வந்தச்செயல்கள் அனைத்தும் அழிவையும் இன்னல்களையுமே பெற்றுத்தந்தன. எனவே, முற்றிலும் வேறுபட்ட செயல் தேவைப்படுகிறது. ஏற்கனவே அறிந்திருக்கும் தீர்வுகளை அடிப்படையாக கொண்டதாக அச்செயல் இருத்தல் ஆகாது என்ற கருத்தை அவர் மாணவர்களுக்கு ஆற்றிய உரை ஒன்றில், மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார்.
 
மனிதனின் உண்மையான பணி எது என்று அவரிடம் கேட்டபோது, அவர் கூறினார்: ‘சத்தியம்/கடவுளைக் கண்டுபிடிப்பதுதான், நிச்சயமாக மனிதனின் உண்மையான பணியாகும். அன்புடனிருப்பதும், தன்னை சிறைப்படுத்தும் சுயநல செயல்பாடுகளில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதுமாகும். சத்தியம் என்றால் என்ன என்ற புரிதலில், அன்பு குடிகொண்டிருக்கிறது. அந்த அன்புடன் மனிதர்கள் தங்களுக்குள் கொள்ளும் தொடர்பு, ஒரு மாறுபட்ட புதிய நாகரீகத்தை, ஒரு புதிய உலகை உருவாக்கும்.’
 
கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வசீகரத்தோற்றப்பொலிவு, அமைதி நிறைந்த அவரின் சன்னிதானம், தெளிவான அவர் பேச்சில் இருந்த லயம், கேட்பவரை வசியப்படுத்தி மகிழ்ச்சியடைய வைத்தது. ஆனால், அவர் விடுத்த சவால்களோ நம்மை அதிரவைப்பவை. மனிதன் மேற்கொள்ளும் அனைத்து விதமான முயற்சிகளைப் பற்றி தொடர்பாக விசாரனை செய்து அவர் விளக்கம் தந்தார்.
 
கடவுள் நம்பிக்கை குறித்து அவரிடம் கேட்டபோது, ‘ஹிரோஷிமா மீது அணுகுண்டை வீசியவர்கள், கடவுள் தங்களோடு இருப்பதாகச் சொல்லிக்கொண்டார்கள். ஜெர்மனியை அழிப்பதற்காக, இங்கிலாந்திலிருந்து விமானப் பயணம் மேற்கொண்டவர்களோ, கடவுள் தான் தங்கள் சக விமானி என்று கூறினார்கள்’ என்று பதிலளித்தார். ஐக்கியநாடுகள் சபையில் நிகழ்த்திய உரையில், தேசங்களாக பிரிந்து கிடக்கும் உலக நாடுகள் ஒருபோதும் ஒன்றிணையாது என்றும், உலக அமைதியை, நிறுவனங்களின் செயல்பாட்டால் மட்டுமே கொண்டுவர ஒருக்காலும் இயலாது என்றும் உறுதிபட கூறினார்.
 
கணினியும் கேளிக்கைத்துறையும் சமுதாயத்தை ஆக்கிரமித்து கொண்டுவிட்டால், மனிதனின் மூளைக்கு என்ன வேலை மிஞ்சும், அதன் நிலைமை என்னவாகும் என்று அவர் விஞ்ஞானிகளிடமும் வினவினார். பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் கலந்துரையாடல்கள் நிகழ்த்தியபோது, ‘கொடூரம், பல வழிகளில் இழைக்கப்படுகிறது, கொடூரத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடு தான், கல்விச்சாலைகளில் நடத்தப்படும் தேர்வுகள், பரீட்சைகள்’ என்றார். போட்டா போட்டிகளும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற பேரவாவும், ஒருவரை இரக்கமற்றவராகவும் மேன்மை குன்றிய சாமானியராகவும் ஆக்கிவிடும் என்று மாணவர்களுக்கு அவர் விளக்கிக் கூறினார்.
 
கணவனை இழந்த இளம்பெண்ணிடம், அவளின் அழுகை, தன்னிரக்கத்தின் காரணமாகவேயன்றி, கணவன்பால் கொண்ட அன்பினால் அல்ல என்பதை மிகவும் மென்மையாக சுட்டிக் காட்டினார். அறிவே மனிதனின் முதல் எதிரி என்று எடுத்துக் காட்டினார். ‘உங்கள் பிரச்சினைகளை நான் தீர்த்து வைப்பேன் என்று எதிர்ப்பார்க்காதீர்கள். அத்தகைய உதவிகளை நான் செய்யப்போவதில்லை’ என்று உறுதியாக உரைத்ததின் மூலம் அவர் போதனைகளில் ஆர்வம் மிக்கவர்கள் தாங்கிப் பிடித்துகொண்டிருந்த கடைசி ஊன்றுகோலையும் அகற்றிவிட்டார்.
 
வெறுமனே அவர் உரைகளைக் கேட்பதும், அவர் நூல்களை படிப்பதும் மட்டும் எந்தப் பயனையும் பெற்றுத்தராது என்பதை விளக்கிச் சொன்னார். அவரின் போதனைகள், ஆழமானவை, கண்டிப்பானவை.
 
கிருஷ்ணமூர்த்தியால் நிறுவப்பட்ட பள்ளிகள், இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ளன. கல்வியைக் குறித்த தனித்துவம் மிக்க அவரின் சிந்தனைகள், அப்பள்ளிகளில் சிறப்பாக வெளிப்படுகின்றன. ‘ஒருவர் கற்றுக்கொள்ளும் இடமாக, பள்ளிக்கூடம் உள்ளது. மானுடப் பிரயத்தனங்களை முழுமையாகப் பார்ப்பதற்கும், அழகினை, சத்தியத்தினை நாடிச்செல்லும் அவன் தேடலை அறியவும், முரண்பாடின்றி வாழும் வாழ்வு நெறிக்கான அவன் முயற்சியை புரிந்துகொள்ளவும் ஏற்ற இடமாக பள்ளி இருக்கிறது. தொன்றுதொட்டே, உலகாயத விஷயங்களைத் தாண்டி அப்பாலிருக்கும் அந்த ஒன்றை, அளவிடற்கரியதை, தெய்வீகத்தை, சத்தியத்தை மனிதன் தேடுகிறான். அந்த ஒன்று இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிவதற்கான விசாரணையை மேற்கொள்வதே இப்பள்ளிகளின் நோக்கமாகும்’ என்று மிகத் தெளிவாகக் கல்வியின் தலையாயப் பணியை அவர் விளக்கியுள்ளார்.
 
கிருஷ்ணமூர்த்தி பள்ளிகளுக்கு, வருடம் ஒருமுறை சென்று, அங்கு பயிலும் மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் அவர் கலந்துரையாடுவார். அக்கலந்துரையாடல்கள், உலகின் கல்விக்கு கிடைத்த புதுமையான செல்வம்.
 
1980-களில் கிருஷ்ணமூர்த்தி, அவருடைய நெருங்கிய நண்பர்களிடம், சிறப்பு வாசக மையங்கள்(Study Centres) அமைக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினார். தங்களின் பணிச்சுமைகளாலும், குடும்ப நெருக்கடிகளாலும் சிரமப்படும் பலர், போதனைகளுக்குள் ஆழமாகச் சென்று பார்க்க இயலாமல் கஷ்டப்படுகிறார்கள் என்று அவர் உணர்ந்தார். அப்படிப்பட்டவர்கள், தங்களின் வழக்கமான அன்றாட வேலைகளிலிருந்து சில நாட்களுக்கு விடுபட்டு வந்து, வாசக மையத்தில் தங்கியிருந்து சீரிய விஷயங்களைப் பற்றியும், தான் வாழும் வாழ்க்கையைப் பற்றியும் சீர்தூக்கிப் பார்க்க, இந்த மையங்கள் உதவும் என்று கிருஷ்ணமூர்த்தி எண்ணினார். அவர் எண்ணியபடி, இன்று, கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன், அமெரிக்காவிலுள்ள ஓஹாய், இங்கிலாந்திலுள்ள ப்ராக்வுட் பார்க், இந்தியாவில் சென்னையிலும் மற்றும் கிருஷ்ணமூர்த்தி பள்ளிகள் அனைத்திலும் வாசக மையங்களை நடத்தி வருகின்றது.
 
போதனைகளை தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடாமல், எப்படி பற்றற்று அவர் பிரிந்து நின்றார் என்பதை, போதனைகள் தொடர்பாக, கிருஷ்ணமூர்த்தி பலமுறை பேசியதிலிருந்து நம்மால் காணமுடிகிறது. ‘இந்தப் போதனைகள், மானுட வாழ்க்கை முழுவதையும் உள்ளடக்கியதாய் உள்ளன. உன்னதமான, அற்புதமான ஒன்றாய் நான் இதைப் பார்க்கிறேன். அதனை நான் வெளியிட்டேன் என்பதால், போதனைகளை அற்புதம் என்று புகழவில்லை. சக்தியை பிரமிப்பூட்டும் வகையில், அது அள்ளி வழங்குவதால் அதனை அற்புதம் என்றேன்’ என்று கூறியுள்ளார். போதனைகள் எனும் புனித பொக்கிஷத்தை, தங்கச் சுரங்கத்தை, வற்றாத நீர்ச்சுனையை, நமக்காக விட்டுச் செல்வதாக அவர் சொல்லியிருக்கிறார். ‘அவை, போதனைகள்(teachings) என் போதனைகள் அல்ல.’ என்றார்.
 
கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பயண ஏற்பாடுகளை கவனிக்கவும் சொற்பொழிவுகள் மற்றும் அவர் பங்கு பெறும் மற்ற நிகழ்ச்சிகளை வடிவமைக்கவும், அவரின் சொற்பொழிவு பதிவுகளைக் கொண்டிருக்கும் ஒலி, ஒளி நாடாக்களை வெளியிடவும், நூல்களை பிரசுரிக்கவும் அவரின் சிந்தனை களஞ்சியமாக இருக்கும் எண்ணற்ற ஆவணங்களை வரும் தலைமுறையினருக்கு பாதுகாத்து கொடுக்கவும், அவர் வாழ்ந்த காலத்திலேயே, இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் லத்தீன் அமெரிக்காவிலுமாக கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் ( <nowiki>https://www.kfionline.org/</nowiki> ) என்ற பெயரில் நான்கு நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.
 
தற்சமயம், சுமார் ஐம்பது மொழிகளில் அவருடைய படைப்புகள் வெளிவந்துள்ளன. கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன், பள்ளிகள் மற்றும் வாசக மையங்களை நிறுவி நடத்தி வருவதோடு, நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்களையும் பாதுகாத்து வருகின்றது. பவுண்டேஷன்கள், முழுவதுமாக நிர்வாகப் பணிக்காக மட்டுமே உள்ளன என்பதை கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தி கூறி வந்தார். பிரசாரகர்களையும் விமர்சகர்களையும் பல இடங்களுக்கு அனுப்பி விளம்பரப்படுத்திக்கொள்ளும் மதரீதியான அமைப்புகளைப் போன்றதல்ல கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்.
 
பள்ளிகள், வாசக மையங்கள், ஒலி, ஒளி நாடாக்கள், நூல்கள் போன்றவை அவர் நமக்கு விட்டுச் சென்ற ஒரு பெரிய பொக்கிஷம். வாழ்க்கையைப் பற்றிய ஆழ்ந்த புரிதலும், மனதில் அளப்பரிய கருணையும் கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி, பலருடைய வாழ்க்கையில் பரிபூரண மாற்றத்தை கொண்டு வந்தார். மாற்றம் அடைந்த எண்ணற்ற மக்களின் இதயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் அவரின் உயிர்த்துடிப்புள்ள போதனைகள், அவர் நமக்கு அளித்த அருட்கொடையாகும்.
 
அவருடைய இறுதி நாட்களில், அவருடைய போதனைகளின் சாரத்தைக் கூறும்படி கேட்டுக்கொண்டதற்கு, அவருடைய அழகான இரத்தினச் சுருக்கமாக பதில் இதோ: “ ‘தான்’ என்ற உணர்வு இருக்குமிடத்தில் ‘அது’ இல்லை”.
 
புனிதத்தை ‘அது’ என்று அவர் குறிப்பிடுவது வழக்கம். ‘அது’, கிருஷ்ணமூர்த்தியின் வாழ்விலும் போதனைகளிலும் ஊடுருவி நின்றிருந்தது.
 
 
வரி 550 ⟶ 499:
 
ஜார்ஜ் பெர்னார்ட் ஷா கிருஷ்ணமூர்த்தியை "இவர் தனித்துவம் வாய்ந்த ஒரு மேன்மையான ஆன்மீக தன்மையுடையவர்" என்று அழைத்தார், மேலும் அவர், "நான் இதுவரை பார்த்ததிலேயே மிகவும் அழகான மனிதர் இவர்." என்றார்.
 
 
'''''உலகத்திற்கோர் ஒளி'''''
 
இறுதி நாட்கள் வரையிலும், உலகின் பற்பல நாடுகளுக்கும் நகரங்களுக்கும் பயணித்து சொற்பொழிவுகள் செய்து வந்தார். மும்முரமான நிகழ்ச்சி நிரலாக இருந்த அவர் பயணங்களில், பொது கூட்டங்களில் பேசினார்; நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் நடத்தினார். அவரின் வாழ்வியல் சிந்தனைகளை கைப்பட எழுதி வைத்தார். துக்கத்தை சுமந்துகொண்டு தன்னை நாடி வரும் ஆண்களோடும் பெண்களோடும் ஆறுதலாக மௌனத்தில் அமர்ந்திருக்கவும் செய்தார். படிப்பறிவின் அடிப்படையில் பிறந்ததல்ல அவரின் போதனைகள். வாழ்வைப் பற்றிய அவரின் உள்ளார்ந்த உணர்வில், அக நோக்கில் மலர்ந்தவை அவை.
 
அக்காரணத்தினால்தான் அவரின் அனைத்து கலந்துரையாடல்களும், புத்துணர்சியூட்டுவதாகவும் நேரடித்தொடர்பை அக்கணத்திலேயே ஏற்படுத்துவதாகவும் மிளிர்ந்தன. தனிப்பட்ட முறையில், அவரைச் சந்திக்க வருபவர்களுடன் அவர் நிகழ்த்திய உரையாடல்களில், அவர் ஒரு காருண்ய மிக்க ஆசானாக இருந்தார். அவருடைய அறிவுரையை நாடி வருபவர்களின் பேச்சை உன்னிப்பாகக் கவனித்து கேட்டபின், அவர்கள், தங்களையன்றி வேறொன்றையும் சாராமல் இருப்பதின் அவசியத்தை அவர்களுக்கு வலியுறுத்துவார். வேதாந்திகள், புத்த மதத்தலைவர்கள், மத சாஸ்திர விற்பன்னர்கள், தத்துவவாதிகள், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், சீர்திருத்தவாதிகள், சுற்றுசூழல் ஆர்வலர்கள், உளவியல் நிபுணர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், போர்வீரர்கள், தொழிலதிபர்கள், சினிமா நடிகர்கள், இல்லத்தரசிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கோடீஸ்வரர்கள், சந்நியாசிகள் என்று இந்தப் பட்டியலுக்கு முடிவே இல்லை எனலாம். அனைத்துத் தரப்பு மக்களுடனும் அவர் கலந்துரையாடினார்.
 
பெரும் பொதுக்கூட்டங்களில் அவர் உரை நிகழ்த்தியபோது, அவையில் இருந்தவர்கள், தங்களின் குறிப்பிட்ட பிரச்சினையைப் பற்றி தங்களுடன் தனிப்பட்ட முறையில் அவர் பேசுவதாகவே உணர்ந்தனர். கிருஷ்ணமூர்த்தியின் உரையை கேட்டபின் புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியர் ஆல்டஸ் ஹக்ஸ்லீ, ‘இது நான் விரும்பிக்கேட்ட சொற்பொழிவுகளிலேயே என்னை மிகவும் ஈர்த்த ஒன்று. புத்தபிரானின் பிரசங்கத்தை கேட்டது போலிருந்தது – அத்தனை சக்தி, அத்தனை உள்ளார்ந்த மகிமை’ என்று கூறினார்.
 
தன்னை நாடி வந்தவர்களின் செல்வத்தையோ வழிபாட்டினையோ கிருஷ்ணமூர்த்தி ஏற்றுக்கொண்டதில்லை. அவர்களுக்கு குரு என்ற ஸ்தானத்தில் இருக்கவும் மறுத்தார். தங்களை தெளிவாகக் காட்டும் நிலைக்கண்ணாடியாக தன்னை உபயோகித்துக் கொள்ளும்படி, அவர்களிடம் வலியுறுத்திக் கூறினார். அவ்வாறு செய்வதால் அதிலிருந்து வரும் விழிப்புணர்வே, விலங்கிட்டிருக்கும் அவர்களின் தளைகளிலிருந்து, அவர்களை விடுவிக்கும் என்றும் எடுத்துரைத்தார்.
 
அவரைப் பற்றியோ அல்லது அவரின் மேன்மையான புரிதலின் ரகசியத்தைப் பற்றியோ கேட்கப்படும் கேள்விகளை, சில சமயம் அவற்றை வினவியவர்களின் மீதே திருப்பி விடுவார். ஒருமுறை ஒரு பொதுக்கூட்டத்தில், ஒருவர், ‘நீங்கள் யார்?’ என்று கிருஷ்ணமூர்த்தியை நோக்கிக் கேட்டார். அக்கேள்விக்கு, அவருக்கே உரித்தான பாணியில், கிருஷ்ணமூர்த்தி பதிலளித்தார்: ‘இதுவா முக்கியமான கேள்வி? இல்லை, கேள்வி கேட்டவர், ‘நான் யார்?’ என்று தன்னையே கேட்டுக்கொண்டிருக்க வேண்டுமா? நீங்கள் யார் என்ற தன்னறிவு பெறுவது தான் மிகவும் முக்கியம். நீங்கள் யார் என்று கண்டறிய, நீங்கள் சுயவிசாரனை செய்ய வேண்டும்’.
 
ஆசானாகிய(Teacher) அவர் முக்கியமில்லை, அவர் நிறுவிய ஸ்தாபனங்கள் முக்கியமல்ல, அவரின் நூல்களோ, ஒலிப்பதிவு நாடாக்களோ கூட முக்கியமல்ல என்று பல சந்தர்ப்பங்களில், பல விதங்களில் அவர் தமது உறுதியான கருத்தை திரும்ப திரும்ப வலியுறுத்தி வந்தார். அவர் ஆற்றிய சொற்பொழிவுகளை கேட்க ஆவலுடன் வந்தவர்கள், அவர் நூல்களைப் படித்தவர்கள், அவர் பெயரில் இயங்கிய நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் போன்ற ஆயிரமாயிரம் நபர்களிடமிருந்து கிருஷ்ணமூர்த்தி எதிர்ப்பார்த்த ஒரே ஒரு விஷயம், அவர்கள், தன் போதனைகளை வாழ்க்கையாகவே வாழ வேண்டும் என்பதே. போதனை வாசகங்களின்படி வெறுமனே நடப்பது என்பது மேம்போக்கான, ஆழமற்றச் செயல்.
 
அவர் வாழ்ந்த காலத்தின் நெருக்கடி நிலைமைகளைப் பற்றி மட்டும் அலசி ஆராய்ந்து தீர்வு காண்பதுடன் அவர் நின்று விடவில்லை. பிற்காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகளையும் அவருடைய தீர்க்க தரிசனத்தால் அறிந்து, நம்மை எச்சரித்து உள்ளார்.
 
இரண்டு உலகப் போர்களுக்கும் காரணமாக இருந்த தேசியவாதம்; அணு ஆயுத பிரயோகத்தால் விளைந்த பெரும் நாசம்; அரசியல் சித்தாந்தங்களின் முரண்பாட்டால் வெடித்த வன்முறை; பூமியை காட்டுமிராண்டித்தனமாக அழித்தது; வேகமாக வளர்ந்து வரும் தீவிர மத அடிப்படைவாதம்; தகவலறிவின் அதீத வளர்ச்சி; அளவுக்கு மீறிய அறிவாற்றல்; இன்ப களியாட்டங்களின் பாதையில் செல்ல மனிதனுக்கு உதவும் கணினியும் தானியங்கிகளும்; மரபணு மாற்ற தொழில்நுட்பத்தின் அச்சுறுத்தல்; கல்விமுறையின் சீர்குலைவு; தலை விரித்தாடும் புலனின்ப கலாச்சாரம்; பண்புகளின் வீழ்ச்சிஇவை போன்ற பிரச்சினைகளும் மற்றும் பலவும் அவரின் மைய அக்கறையாக இருந்தன.
 
இருந்தபோதிலும் கிருஷ்ணமூர்த்தியால் அழுத்தமும் முக்கியத்துவமும் கொடுத்து சொல்லப்பட்டவை, சமுதாய சீர்த்திருத்தங்களோ சமுதாய நற்பணிகளோ அல்ல. சுயவிசாரணை மற்றும் தன்னறிவின் மூலம் சத்தியத்தைத் தேடும் மனிதனின் தொன்மைமிக்க தேடலிற்கே, நாட்டத்திற்கே அவர் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வலியுறுத்தி பேசினார். தனது தெளிவான, ஆழ்ந்த கண்ணோட்டத்தில் பிறந்த கருத்தான மனிதனின் எந்தவொரு பிரச்சினையையும் எண்ணத்தால் தீர்த்துவைக்க முடியாது. ஏனெனில், ‘எண்ணம், தானே தனக்குள் ஒரு பிரச்சினையாக இருக்கிறது’ என்ற வாசகத்தை அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார்.
 
இதுவரை மனிதன் புரிந்து வந்தச்செயல்கள் அனைத்தும் அழிவையும் இன்னல்களையுமே பெற்றுத்தந்தன. எனவே, முற்றிலும் வேறுபட்ட செயல் தேவைப்படுகிறது. ஏற்கனவே அறிந்திருக்கும் தீர்வுகளை அடிப்படையாக கொண்டதாக அச்செயல் இருத்தல் ஆகாது என்ற கருத்தை அவர் மாணவர்களுக்கு ஆற்றிய உரை ஒன்றில், மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார்.
 
மனிதனின் உண்மையான பணி எது என்று அவரிடம் கேட்டபோது, அவர் கூறினார்: ‘சத்தியம்/கடவுளைக் கண்டுபிடிப்பதுதான், நிச்சயமாக மனிதனின் உண்மையான பணியாகும். அன்புடனிருப்பதும், தன்னை சிறைப்படுத்தும் சுயநல செயல்பாடுகளில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதுமாகும். சத்தியம் என்றால் என்ன என்ற புரிதலில், அன்பு குடிகொண்டிருக்கிறது. அந்த அன்புடன் மனிதர்கள் தங்களுக்குள் கொள்ளும் தொடர்பு, ஒரு மாறுபட்ட புதிய நாகரீகத்தை, ஒரு புதிய உலகை உருவாக்கும்.’
 
கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வசீகரத்தோற்றப்பொலிவு, அமைதி நிறைந்த அவரின் சன்னிதானம், தெளிவான அவர் பேச்சில் இருந்த லயம், கேட்பவரை வசியப்படுத்தி மகிழ்ச்சியடைய வைத்தது. ஆனால், அவர் விடுத்த சவால்களோ நம்மை அதிரவைப்பவை. மனிதன் மேற்கொள்ளும் அனைத்து விதமான முயற்சிகளைப் பற்றி தொடர்பாக விசாரனை செய்து அவர் விளக்கம் தந்தார்.
 
கடவுள் நம்பிக்கை குறித்து அவரிடம் கேட்டபோது, ‘ஹிரோஷிமா மீது அணுகுண்டை வீசியவர்கள், கடவுள் தங்களோடு இருப்பதாகச் சொல்லிக்கொண்டார்கள். ஜெர்மனியை அழிப்பதற்காக, இங்கிலாந்திலிருந்து விமானப் பயணம் மேற்கொண்டவர்களோ, கடவுள் தான் தங்கள் சக விமானி என்று கூறினார்கள்’ என்று பதிலளித்தார். ஐக்கியநாடுகள் சபையில் நிகழ்த்திய உரையில், தேசங்களாக பிரிந்து கிடக்கும் உலக நாடுகள் ஒருபோதும் ஒன்றிணையாது என்றும், உலக அமைதியை, நிறுவனங்களின் செயல்பாட்டால் மட்டுமே கொண்டுவர ஒருக்காலும் இயலாது என்றும் உறுதிபட கூறினார்.
 
கணினியும் கேளிக்கைத்துறையும் சமுதாயத்தை ஆக்கிரமித்து கொண்டுவிட்டால், மனிதனின் மூளைக்கு என்ன வேலை மிஞ்சும், அதன் நிலைமை என்னவாகும் என்று அவர் விஞ்ஞானிகளிடமும் வினவினார். பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் கலந்துரையாடல்கள் நிகழ்த்தியபோது, ‘கொடூரம், பல வழிகளில் இழைக்கப்படுகிறது, கொடூரத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடு தான், கல்விச்சாலைகளில் நடத்தப்படும் தேர்வுகள், பரீட்சைகள்’ என்றார். போட்டா போட்டிகளும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற பேரவாவும், ஒருவரை இரக்கமற்றவராகவும் மேன்மை குன்றிய சாமானியராகவும் ஆக்கிவிடும் என்று மாணவர்களுக்கு அவர் விளக்கிக் கூறினார்.
 
கணவனை இழந்த இளம்பெண்ணிடம், அவளின் அழுகை, தன்னிரக்கத்தின் காரணமாகவேயன்றி, கணவன்பால் கொண்ட அன்பினால் அல்ல என்பதை மிகவும் மென்மையாக சுட்டிக் காட்டினார். அறிவே மனிதனின் முதல் எதிரி என்று எடுத்துக் காட்டினார். ‘உங்கள் பிரச்சினைகளை நான் தீர்த்து வைப்பேன் என்று எதிர்ப்பார்க்காதீர்கள். அத்தகைய உதவிகளை நான் செய்யப்போவதில்லை’ என்று உறுதியாக உரைத்ததின் மூலம் அவர் போதனைகளில் ஆர்வம் மிக்கவர்கள் தாங்கிப் பிடித்துகொண்டிருந்த கடைசி ஊன்றுகோலையும் அகற்றிவிட்டார்.
 
வெறுமனே அவர் உரைகளைக் கேட்பதும், அவர் நூல்களை படிப்பதும் மட்டும் எந்தப் பயனையும் பெற்றுத்தராது என்பதை விளக்கிச் சொன்னார். அவரின் போதனைகள், ஆழமானவை, கண்டிப்பானவை.
 
கிருஷ்ணமூர்த்தியால் நிறுவப்பட்ட பள்ளிகள், இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ளன. கல்வியைக் குறித்த தனித்துவம் மிக்க அவரின் சிந்தனைகள், அப்பள்ளிகளில் சிறப்பாக வெளிப்படுகின்றன. ‘ஒருவர் கற்றுக்கொள்ளும் இடமாக, பள்ளிக்கூடம் உள்ளது. மானுடப் பிரயத்தனங்களை முழுமையாகப் பார்ப்பதற்கும், அழகினை, சத்தியத்தினை நாடிச்செல்லும் அவன் தேடலை அறியவும், முரண்பாடின்றி வாழும் வாழ்வு நெறிக்கான அவன் முயற்சியை புரிந்துகொள்ளவும் ஏற்ற இடமாக பள்ளி இருக்கிறது. தொன்றுதொட்டே, உலகாயத விஷயங்களைத் தாண்டி அப்பாலிருக்கும் அந்த ஒன்றை, அளவிடற்கரியதை, தெய்வீகத்தை, சத்தியத்தை மனிதன் தேடுகிறான். அந்த ஒன்று இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிவதற்கான விசாரணையை மேற்கொள்வதே இப்பள்ளிகளின் நோக்கமாகும்’ என்று மிகத் தெளிவாகக் கல்வியின் தலையாயப் பணியை அவர் விளக்கியுள்ளார்.
 
கிருஷ்ணமூர்த்தி பள்ளிகளுக்கு, வருடம் ஒருமுறை சென்று, அங்கு பயிலும் மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் அவர் கலந்துரையாடுவார். அக்கலந்துரையாடல்கள், உலகின் கல்விக்கு கிடைத்த புதுமையான செல்வம்.
 
1980-களில் கிருஷ்ணமூர்த்தி, அவருடைய நெருங்கிய நண்பர்களிடம், சிறப்பு வாசக மையங்கள்(Study Centres) அமைக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினார். தங்களின் பணிச்சுமைகளாலும், குடும்ப நெருக்கடிகளாலும் சிரமப்படும் பலர், போதனைகளுக்குள் ஆழமாகச் சென்று பார்க்க இயலாமல் கஷ்டப்படுகிறார்கள் என்று அவர் உணர்ந்தார். அப்படிப்பட்டவர்கள், தங்களின் வழக்கமான அன்றாட வேலைகளிலிருந்து சில நாட்களுக்கு விடுபட்டு வந்து, வாசக மையத்தில் தங்கியிருந்து சீரிய விஷயங்களைப் பற்றியும், தான் வாழும் வாழ்க்கையைப் பற்றியும் சீர்தூக்கிப் பார்க்க, இந்த மையங்கள் உதவும் என்று கிருஷ்ணமூர்த்தி எண்ணினார். அவர் எண்ணியபடி, இன்று, கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன், அமெரிக்காவிலுள்ள ஓஹாய், இங்கிலாந்திலுள்ள ப்ராக்வுட் பார்க், இந்தியாவில் சென்னையிலும் மற்றும் கிருஷ்ணமூர்த்தி பள்ளிகள் அனைத்திலும் வாசக மையங்களை நடத்தி வருகின்றது.
 
போதனைகளை தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடாமல், எப்படி பற்றற்று அவர் பிரிந்து நின்றார் என்பதை, போதனைகள் தொடர்பாக, கிருஷ்ணமூர்த்தி பலமுறை பேசியதிலிருந்து நம்மால் காணமுடிகிறது. ‘இந்தப் போதனைகள், மானுட வாழ்க்கை முழுவதையும் உள்ளடக்கியதாய் உள்ளன. உன்னதமான, அற்புதமான ஒன்றாய் நான் இதைப் பார்க்கிறேன். அதனை நான் வெளியிட்டேன் என்பதால், போதனைகளை அற்புதம் என்று புகழவில்லை. சக்தியை பிரமிப்பூட்டும் வகையில், அது அள்ளி வழங்குவதால் அதனை அற்புதம் என்றேன்’ என்று கூறியுள்ளார். போதனைகள் எனும் புனித பொக்கிஷத்தை, தங்கச் சுரங்கத்தை, வற்றாத நீர்ச்சுனையை, நமக்காக விட்டுச் செல்வதாக அவர் சொல்லியிருக்கிறார். ‘அவை, போதனைகள்(teachings) என் போதனைகள் அல்ல.’ என்றார்.
 
கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பயண ஏற்பாடுகளை கவனிக்கவும் சொற்பொழிவுகள் மற்றும் அவர் பங்கு பெறும் மற்ற நிகழ்ச்சிகளை வடிவமைக்கவும், அவரின் சொற்பொழிவு பதிவுகளைக் கொண்டிருக்கும் ஒலி, ஒளி நாடாக்களை வெளியிடவும், நூல்களை பிரசுரிக்கவும் அவரின் சிந்தனை களஞ்சியமாக இருக்கும் எண்ணற்ற ஆவணங்களை வரும் தலைமுறையினருக்கு பாதுகாத்து கொடுக்கவும், அவர் வாழ்ந்த காலத்திலேயே, இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் லத்தீன் அமெரிக்காவிலுமாக கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் ( <nowiki>https://www.kfionline.org/</nowiki> ) என்ற பெயரில் நான்கு நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.
 
தற்சமயம், சுமார் ஐம்பது மொழிகளில் அவருடைய படைப்புகள் வெளிவந்துள்ளன. கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன், பள்ளிகள் மற்றும் வாசக மையங்களை நிறுவி நடத்தி வருவதோடு, நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்களையும் பாதுகாத்து வருகின்றது. பவுண்டேஷன்கள், முழுவதுமாக நிர்வாகப் பணிக்காக மட்டுமே உள்ளன என்பதை கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தி கூறி வந்தார். பிரசாரகர்களையும் விமர்சகர்களையும் பல இடங்களுக்கு அனுப்பி விளம்பரப்படுத்திக்கொள்ளும் மதரீதியான அமைப்புகளைப் போன்றதல்ல கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்.
 
பள்ளிகள், வாசக மையங்கள், ஒலி, ஒளி நாடாக்கள், நூல்கள் போன்றவை அவர் நமக்கு விட்டுச் சென்ற ஒரு பெரிய பொக்கிஷம். வாழ்க்கையைப் பற்றிய ஆழ்ந்த புரிதலும், மனதில் அளப்பரிய கருணையும் கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி, பலருடைய வாழ்க்கையில் பரிபூரண மாற்றத்தை கொண்டு வந்தார். மாற்றம் அடைந்த எண்ணற்ற மக்களின் இதயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் அவரின் உயிர்த்துடிப்புள்ள போதனைகள், அவர் நமக்கு அளித்த அருட்கொடையாகும்.
 
அவருடைய இறுதி நாட்களில், அவருடைய போதனைகளின் சாரத்தைக் கூறும்படி கேட்டுக்கொண்டதற்கு, அவருடைய அழகான இரத்தினச் சுருக்கமாக பதில் இதோ: “ ‘தான்’ என்ற உணர்வு இருக்குமிடத்தில் ‘அது’ இல்லை”.
 
புனிதத்தை ‘அது’ என்று அவர் குறிப்பிடுவது வழக்கம். ‘அது’, கிருஷ்ணமூர்த்தியின் வாழ்விலும் போதனைகளிலும் ஊடுருவி நின்றிருந்தது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜிட்டு_கிருஷ்ணமூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது