'''சாலமன்சொலமன் வெஸ்ட் ரிச்வேரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா''' ({{lang-en|SalamanSolomon West Ridgeway Dias Bandaranaike}}, {{lang-si|සොලමන් වෙස්ට් රිජ්වේ ඩයස් බණ්ඩාරනායක}}, சுருக்கமாக, '''எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா''', ''S. W. R. D. Bandaranaike'', [[ஜனவரி 8]], [[1899]] - [[செப்டெம்பர் 26]], [[1959]]) [[இலங்கை]]யின் நான்காவது பிரதமர் ஆவர். இவர் பிரதமராக பதவி வகித்த போது [[பௌத்தம்|பௌத்த]] பிக்கு ஒருவரால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
== குடும்பம் ==
பிறப்பால் பண்டாரநாயக்கா ஓர் [[அங்கிலிக்கன் திருச்சபை|அங்கிலிக்கன்]] [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவராவார்]]. இவரது மூதாதையர் கண்டியை ஆண்ட தெலுங்கு [[கண்டி நாயக்கர்]] வம்சத்தை சார்ந்தவர்.சர் சாலமன்சொலமன் டயஸ் பண்டாரநாயக்க இவரது தந்தையாவார். சிறுவயதில் ஏற்பட்ட நோய்கள் காரணமாக பாடசாலை செல்லாத இவர் வீட்டில் இருந்தபடியே கல்வி கற்றார். 15 வயதில் பாடசாலை செல்லத் தொடங்னார். பின்னர் [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் சட்டத்தரணியாகக் கல்வி கற்று முடித்த பின்னர் இலங்கை அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். பண்டாரநாயக்க இலங்கையில் அரசியல் செல்வாக்கு மிகுந்து காணப்பட்ட இரத்வத்தை பரம்பரையைச் சேர்ந்த [[சிறிமாவோ பண்டாரநாயக்கா|சிறிமாவோ]] திருமணம் செய்து கொண்டார். தனது கணவரின் மரணத்துக்குப் பின்னர் [[சிறிமாவோ பண்டாரநாயக்கா|சிறிமாவோ]] கணவரின் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்றதன் மூலம் உலகின் முதல் பெண் பிரதமரானார்.<ref>{{cite web|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/964914.stm|title=Sirimavo Bandaranaike: First woman premier|publisher=BBC News}}</ref> இவர் இலங்கையின் பிரதமரும் அதிபருமான [[சந்திரிகா குமாரத்துங்க]], அனுரா பண்டாரநாயக்கா மற்றும் சுனேத்திரா பண்டாரநாயக்காவின் தகப்பனாரும் ஆவர்.