மங்கோலியர்களின் குவாரசமியப் படையெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 104:
==குராசான் படையெடுப்பு==
ஊர்கெஞ்ச் நகரத்திற்குள் இடித்துக்கொண்டு மங்கோலியர்கள் முன்னேற, செங்கிஸ் தனது இளைய மகன் டொலுய் தலைமையில் ஒரு ராணுவத்தை குவாரசமியாவின் மேற்கு மாகாணமான குராசானுக்கு அனுப்பினார். குராசன் ஏற்கனவே மங்கோலிய ராணுவத்தின் பலத்தை உணர்ந்து இருந்தது. போரின் முந்தைய பகுதியில் செபே மற்றும் சுபுதை ஆகிய தளபதிகள் இந்த மாகாணத்தின் வழியாக தப்பி ஓடிய ஷாவை வேட்டையாட பயணித்திருந்தனர். எனினும் இப்பகுதியானது அடிபணிய வைக்கப்படவில்லை. பெரும்பாலான முக்கிய நகரங்கள் மங்கோலிய ஆட்சிக்கு உட்படாமல் இருந்தன. ஷாவின் மகன் ஜலாலுதீன் மங்கோலியர்களுடன் போரிட ராணுவத்தை சேர்க்கிறார் என்ற வதந்தி காரணமாக இப்பகுதியில் இருந்த குறைந்த எண்ணிக்கையிலான மங்கோலிய படைகளுக்கு எதிராக கிளர்ச்சி ஏற்பட்டது.
 
===பால்க்===
டொலுயின் இராணுவமானது சுமார் 50,000 வீரர்களை கொண்டிருந்தது. இந்த ராணுவத்தின் நடுப்பகுதி மங்கோலிய வீரர்களை உள்ளடக்கியிருந்தது (மங்கோலிய வீரர்களின் எண்ணிக்கை சுமார் 7,000 என சில மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன<ref name=Stubbs>Stubbs, Kim. ''Facing the Wrath of Khan.''</ref>{{full citation needed|date=March 2018}}) இந்த ராணுவத்தில் பெரும்பாலானவர்கள் துருக்கியர்கள், சீனா மற்றும் மங்கோலியாவில் வெல்லப்பட்ட மக்கள் என அயல்நாட்டு வீரர்களாக இருந்தனர். மேலும் இந்த ராணுவத்தில் "நெருப்பைக் கக்கும் கனரக அம்புகளை செய்யக்கூடிய 3,000 இயந்திரங்கள், 300 கவண்கள், நாப்தாவால் நிரப்பப்பட்ட பானைகளை எரியக்கூடிய 700 மங்கோநெல்கள், 4,000 ஏணிகள், அகழிகளை மூடுவதற்காக 2,500 மண் மூட்டைகள்" ஆகியவை இருந்தன.<ref name="Prawdin"/> முதலில் வீழ்ந்த முதல் நகரங்கள் தெர்மெஸ் மற்றும் பிறகு பால்க் ஆகும்.
 
==உசாத்துணை==