கீழ்வெண்மணிப் படுகொலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
 
== வரலாறு ==
[[தஞ்சாவூர்]] மாவட்டம் மிகுந்த செழுமையான மாவட்டமாக இருந்தது அங்கு பாசன வசதி மிகுந்து, விளைநிலங்கள் செழுமையாகவும் அதிக விளைச்சலைத் தருபவை ஆக இருந்தன. தமிழ்நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் முப்பது சதவிகித விளைநிலங்கள் தஞ்சை மாவட்டத்தின் கீழ் இருந்தது. தஞ்சையில் பல நிலங்களில் வேலை செய்யும் வேளாண் தொழிலாளர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் [[மள்ளர்|பள்ளர்தேவேந்திர குுல வேளாளர்]] <nowiki/>சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே இருந்தனர். அங்கு இருந்த நிலக்கிழார்கள் அவர்களை அடிமையாக நடத்திவந்தனர். அங்கு இருந்த பண்ணை ஆட்கள் அராஜக போக்கால் அவர்கள் மிகக் குறைந்த ஊதியம் மிகக் குறைந்த வேளை உணவு வழங்கப்பட்டது. கூலி ஆட்களுக்கு கொடுக்கப்பட்ட குறைந்த சம்பளம் அவர்கள் வாழ்க்கை முறை வெகுவாக மன உளைச்சலை ஏற்படுத்தியது. அவர்கள் நல்ல வாழ்க்கை முறை அடைய பல முறை முயற்சி செய்தும், அவர்கள் அடிமை நிலையும் குறைந்த ஊதியமும் அவர்களை முன்னேற விடவில்லை. அவர்கள் நியாயமான கோரிக்கைகள் எவற்றையும் அவர்களை பணி அமர்த்தியவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 1960 ஆம் ஆண்டு இந்திய - சீனா போரால், எங்கும் ஏற்பட்ட பஞ்சம் இவர்களைப் பெரிதும் வாட்டியது.
தஞ்சை மண்ணில் "பண்ணையாள் முறை" ஆழமாக வேரூன்றியிருந்த காலம். சாணிப்பால், சாட்டையடி என்பதெல்லாம் சர்வ சாதாரணமான தண்டனைகளாக இருந்தன.<ref name="வெண்மணி தியாகிகள்">{{cite news | title=வெண்மணி தியாகிகள் வீர வணக்க நாள் ஞாபகங்கள் தீ மூட்டும்! | work=[[தீக்கதிர்]] | date=25 டிசம்பர் 2013 | accessdate=25 திசம்பர் 2013 | author=ஜி.ராமகிருஷ்ணன் | pages=4}}</ref> கம்யூனிஸ்ட் தலைவர்களான மணியம்மையும், [[பி. சீனிவாசராவ்]]வும் சங்க உணர்வை உருவாக்கினார்கள். விவசாயிகள் பலரும் ஒன்று சேர்ந்து விவசாயிகள் சங்கத்தை உருவாக்கினார்கள். நிலச்சுவான்தார்களும் ஒன்றுகூடி நெல் உற்பத்தியாளர் சங்கத்தை உருவாக்கினார்கள். உழைப்புக்கு‍ ஏற்ற கூலியைக் கேட்டார்கள் விவசாயிகள். இதனை ஒப்புக் கொள்ளாமல் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதற்குள் கீழ்வெண்மணியை சேர்ந்த இருவரை நிலச்சுவான்தார்கள் கட்டி வைத்து அடித்ததும் கலவரம் மூண்டது. கோபாலகிருஷ்ண நாயுடு மற்றும் நில உடமையாளர்கள் அவர்களின் அடியாட்கள், விவசாயத் தொழிலாளர்களை ஒடுக்குவதற்காகவே அமைக்கப்பட்ட கிஷான் போலீஸ் துணையுடன் படுகொலையை அரங்கேற்றினார்கள்.<ref name="வெண்மணி தியாகிகள்" />
"https://ta.wikipedia.org/wiki/கீழ்வெண்மணிப்_படுகொலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது