கே. ஆர். வேணுகோபால் சர்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:K.R. Venugopal sharma.jpg|thumb|கே. ஆர். வேணுகோபால் சர்மா]]
'''கே. ஆர். வேணுகோபால் சர்மா''' தமிழக அரசாலும், மக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட [[திருவள்ளுவர்]] படத்தை வரைந்தவர் ஆவார்.<ref>{{cite web|url=http://www.oocities.org/nvkashraf/kur-trans/Kural-Int.htm|title=An introduction to Thirukkural and its author|work=www.oocities.org}}</ref> இவர் 17.12.1908 இல் அன்றைய [[சேலம்]] ஜில்லா காமாட்சிப்பட்டி கிராமத்தில் பிறந்தவர். இன்று அது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடங்கியுள்ளது. இவரால் வரையப்பட்டு சட்டசபையில் இடம்பெற்றிருக்கும் மற்ற சாதனையாளர்களின் திருவுருவங்கள் [[முத்துராமலிங்கத் தேவர்]], [[காயிதே மில்லத்]] ஆகியோரது ஆகும் .<ref>{{cite news |title=40 ஆண்டுகள் ஆய்வு செய்து திருவள்ளுவர் படத்தை வரைந்தவர் வேணுகோபால் சர்மா: தமிழறிஞரின் மகன் விநாயக் வே.ஸ்ரீராம் தகவல் |url=https://www.hindutamil.in/news/tamilnadu/523542-thiruvalluvar-image.html |accessdate=5 November 2019 |agency=இந்து தமிழ் திசை}}</ref> [[தமிழ்த்தாய் வாழ்த்து|தமிழ்த்தாய்]] திருவுருவுக்கு இலக்கியங்களில் வடிவம் ஒன்று சொல்லப்படவேயில்லைசொல்லப்படவில்லை. எனினும்,1979 ல் அன்றைய அரசாங்கத்தின் வேண்டுகோளின் படி தனது நீண்ட தமிழ் ஆராய்ச்சி கொண்டு இவர் வரைந்து கொடுத்தமுடித்த [[தமிழ்த்தாய் வாழ்த்து|தமிழ்த்தாய்]] திருவுருவம் இன்றும் வெளிவராமலேயே இருக்கின்றதுநிற்கின்றது.
 
==தொழில்==
மைசூர் சமஸ்தானத்தில் பால விகடகவியாக தன் வாழ்க்கையை துவங்கியவர் . காந்திய வழியில் வந்த குடும்பத்தை சேர்ந்த இவர், "ஸ்வதேச டிராமா பார்ட்டி" என்ற பெயரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தன் நண்பர்களோடு சேர்ந்து நாடகங்களை நடத்தி வந்தார். தலைமறைவு வாழ்க்கையில் [[பம்பாய்]]க்கு சென்று, அங்கு பிரபல திரைப்பட இயக்குநரான பகவான் தாதாவிடம் சினிமா கலையினைக் கற்றுக்கொண்டார். [[சென்னை]]க்கு திரும்பி 'கிரீன் பிக்சர்ஸ்' என்ற திரைப்பட நிறுவனத்தைத் துவக்கி, நாத விஜயம், தெய்வீகம், மை சன் ஆகிய படங்களைத் தயாரித்து இயக்கினார். சமஸ்தானத்தில் சம்பாதித்த பொருள் அனைத்தையும் இழந்தார். சென்னையில், மிச்சமிருந்த ஒரு சிறிய பங்களாவையும் விற்று - தமிழக ஓவியக் கலைஞர்களின் திறமையை உலகுக்கு எடுத்து சொல்லும் முயற்சியில் ஓவியக் கலைக்கூடம் ஒன்றை ' பொன்னி ஆர்ட்ஸ் ' என்ற பெயரில் சென்னை லாயட்ஸ் ரோட்டில் அமைத்தார். அதுவும் எடுபடாமல் தோற்றார்.
 
==திருவள்ளுவரின் படத்தை வரைதல்==
"https://ta.wikipedia.org/wiki/கே._ஆர்._வேணுகோபால்_சர்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது