பாவலர் சரித்திர தீபகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Mayooranathanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''பாவலர் சரித்திர தீபகம்''' என்பது [[தமிழ் மொழி]]யில் எழுதப்பட்ட தமிழ்ப் புலவர் [[வரலாறு|வரலாற்று]]த் தொகுப்புநூல் ஆகும். The Galaxy of Tamil Poets என்ற [[ஆங்கிலம்|ஆங்கில]]த் துணைத்தலைப்பு ஒன்றும் இதற்குக் கொடுக்கப்பட்டுள்ளது. 1859 ல் [[சைமன் காசிச்செட்டி]] என்பரால் எழுதி வெளியிடப்பட்ட [[தமிழ் புளூட்டாக்]] என்னும் நூலினைத் தழுவி எழுதப்பட்டதே இந்த நூல். தமிழ் மொழியில் வெளிவந்த முதலாவது தமிழ்ப் புலவர் வரலாற்று நூல் இதுவே. இது [[யாழ்ப்பாணம்]], [[மானிப்பாய்|மானிப்பா]]யிலிருந்த "ஸ்ட்ரோங் அண்ட் அஸ்பரி" அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்டு 1888 ஆம் ஆண்டில் வெளிவந்தது.
 
==பின்னணி==
இந் நூலின் ஆசிரியர் [[இலங்கை]], [[யாழ்ப்பாணம்]], [[நவாலி]] என்னும் ஊரைச் சேர்ந்த [[அ.ஆணல்ட் சதாசிவம்பிள்ளை]] (ஜே. ஆர். ஆர்னோல்ட்) என்பவராவார். இவர் அக்காலத்தில் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்திலிருந்து]] வெளிவந்த [[உதயதாரகை (பத்திரிகை)|உதயதாரகை]] என்னும் பத்திரிகையின் ஆசிரியரும், [[வட்டுக்கோட்டை]], [[யாழ்ப்பாணக்வட்டுக்கோட்டை கல்லூரி, வட்டுக்கோட்டை|யாழ்ப்பாணக் கல்லூரி]]யின் தமிழ் ஆசிரியருமாவார். [[சைமன் காசிச்செட்டி]]யின் [[தமிழ் புளூட்டாக்]] நூலைத் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்ய ஆரம்பித்த சதாசிவம்பிள்ளை அதைப் புதிய தகவல்களுடன் விரிவு படுத்தினார்.
 
==உள்ளடக்கம்==
[[தமிழ் புளூட்டாக்]] நூலில் குறிப்பிடப்பட்ட 202 புலவர்களில் 201 புலவர்கள் பாவலர் சரித்திர தீபகத்திலும் இடம் பெறுகின்றனர். இவர்களைவிட மேலதிகமாக 209 புலவர்களைச் சேர்த்து 410 புலவர்கள் பற்றிய தகவல்கள் தரும் நூலாகப் பாவலர் சரித்திர தீபகம் ஆக்கப்பட்டுள்ளது. காசிச் செட்டியவர்களின் நூலில் 202 புலவர்களில் 13 பேர் மட்டுமே [[இலங்கை]]யைச் சேர்ந்தவர்கள். சதாசிவம்பிள்ளை அவர்கள் மேலும் 69 இலங்கைப் புலவர்களைச் சேர்த்து [[ஈழம்|ஈழ]]த்துப் புலவர்களின் எண்ணிக்கையை 82 ஆக உயர்த்தினார்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/பாவலர்_சரித்திர_தீபகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது