சேர்மன் சாமிநாத முதலியார் நகராட்சி ஆரம்பப் பள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Reference added
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
மேற்கோள்களுடன் வரலாறு சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 46:
 
ஐந்தாம் வகுப்பிற்கு பிறகு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயில, இதே தெருவில் சேர்மன் சாமிநாத முதலியார் நகராட்சி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆரம்ப காலத்தில் பிள்ளையார் பாளையம் பகுதி மாணவ மாணவியர் மட்டுமே பயின்று வந்தனர். அதன் பின் தற்போது பக்கத்து காலனிகளில் இருந்தும் மாணவர்கள் வந்து பயிலுகின்றனர்.<ref>https://m.dinamalar.com/detail.php?id=980538</ref>
==சாமிநாத முதலியார் வாழ்க்கை வரலாறு==
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் வாழ்ந்த தணிகைமலை முதலியார் - மனோன்மணி அம்மையார் தம்பதியருக்கு திருமகனாக ம. த. சாமிநாத முதலியார் 17.11.1880 இல் பிறந்தார். இவருக்கு ஒரு தம்பி மற்றும் இரு தங்கைகள்.
 
சாமிநாத முதலியார் தானது 19-வது வயதிலிருந்தே, பொதுதொண்டுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
 
காஞ்சிபுரம் மகாநாடு 72 கிளை நாடுகளை தன்னகம் கொண்டது காஞ்சிபுரம் மகாநாடு. செங்குந்தர் குலத்தின் நாட்டாண்மைத் தலைவர் 'ஆண்டவர்' என்றும் சொல்லத்தக்க மாபெரும் தலைவராக சாமிநாத முதலியார் அவர்கள் 1911-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். தலைநாட்டிலும், கிளைநாட்டுகளிலும் செங்குந்த வாழ் உறவினர்களுக்குள்ளே உண்டான பல கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமைப்படுத்தினார். நல்லறங்களுடனும், நற்பண்புகளுடனும், பெருமான நோக்குடனும் குலத்தொண்டுகள் புரிந்தார்.
 
[[காஞ்சி சீறி நாகலிங்க முனிவர்|காஞ்சி நாகலிங்க முனிவர்]] அவர்கள் ஆலோசனைப்படி காஞ்சிபுரம் கச்சபேசர் ஆலயத்தில் செங்குந்த மகாஜன சங்கத்தை 1912ம் ஆண்டில் உருவாக்கினார். 1929-ல் ஈரோட்டில் நடந்த முதல் செங்குந்தர் மாநாட்டில் முதன்முதலில் செங்குந்தர் குல கொடியை ஏற்றினார். 1931 யில் நடைபெற்ற செங்குந்தர் இரண்டாவது மாநாட்டை காஞ்சி கச்சபேஸ்வரர் ஆலயத்தில் தலைவராக மிகவும் சிறப்பாக நடத்தினார். 1936-ல் நடைபெற்ற மூன்றாவது மாநாட்டை அம்பாசமுத்திரத்தில் நடத்தினார்.
 
இவர் காஞ்சிபுரம் நகரமன்ற உறுப்பினராக 24 ஆண்டுகள் பணியாற்றினார். காஞ்சிபுரம் நகர்மன்றத் தலைவராக 9 ஆண்டுகள் பதவி வகித்தார். காஞ்சிபுரம் நகர் மன்றத்தின் முன்னேற்றத்துக்கு பல வகையிலும் சிறப்பாக தொண்டு புரிந்தார்.
 
நகரமன்ற தலைவராக இருந்த சமயத்தில் அப்பகுதி சிறுவர்களுக்கு கட்டாய ஆரம்பக் கல்விக்கு அடிகோலினார்.
 
ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து இந்தியத் திருநாடு விடுதலை பெற அண்ணல் மகாத்மா காந்தியடிகள் தமிழகம் தழுவிய சுற்றுப் பயணம் மேற்கொண்ட பொழுது, 1934-ம் ஆண்டு காஞ்சிபுரம் இரயிலில் வருகை தந்தார். அதுசமயம் நகர மன்றத் தலைவராக இருந்த சாமிநாத முதலியார், ரயில் நிலையம் சென்று அண்ணல் மகாத்மா காந்தியடிகள் அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பளித்தார்.
 
காஞ்சிபுரம் மைய பகுதியில் (காந்தி மைதானம்) அண்ணல் மகாத்மா காந்தியடிகள் சொற்பொழிவாற்ற மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்து தலைமை வகித்தார். அன்னியர் ஆட்சிகாலத்தில் நகரமன்றத் தலைவராக இருந்து சுதந்திர போராட்ட கூட்டத்தை துணிந்து நடத்திய பெருமை இவரை மட்டுமே சாரும்.
 
இவரால் பாதுகாக்கப்பட்ட, எண்ணற்ற தமிழ் சுவடுகளை, தமிழ்தொண்டிக் நிமித்தம் இவர் இல்லம் வருகை தந்த [[உ. வே. சாமிநாதையர்]] ஒப்படைத்தார் என்பது பெருமைக்குரியது.
 
அனைத்து பெருமைகளின் நிமித்தமாக, பிற்காலத்தில் அவர் குடியிருந்த தெருவிற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. அவர் வாழ்ந்த பிள்ளையார் பாளையத்தில் அவரது பெயரால் மேல்நிலைப்பள்ளி உருவாகி சிறப்பாக நடந்து வருகிறது.
 
21.04.1949 அன்று இவ்வுலகை விட்டு மறைந்தார்.<ref>[https://archive.org/details/kancheepuram-sengundhar-sangam-book/page/57/mode/1up காஞ்சிபுரம் செங்குந்தர் சங்க சிறப்பு மலர் பக்கம் 56]</ref>
 
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகள்]]