விஷூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 70:
"கனி" பார்வைக்காக சராசரி அளவுள்ள உருளி உபயோகப்படுத்தப்படுகின்றது. உருளி பாத்திரம் வட்டமாகவும் வாய் திறந்தும் இருக்கும். பொதுவாக வெங்கலத்தினால் ஆன உருளியையே இதற்கு பயன்படுத்துகின்றனர். இது எல்லா அளவுகளிலும் கிடைக்கின்றது. இதன் விட்டம் சில இஞ்சுகளிலிருந்து 10-12 அடி வரை இருக்கும்! இதன் பெரிய வடிவம் சரக்கு, ஓடு போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன. பாரம்பரிய வழக்கமாக உருளி பஞ்சலோகத்தால் செய்யப்பட்டு வந்தது. ஐந்து உலோகங்கள் சூட்சுமமாக அண்டத்தைக் குறிக்கின்றது அதாவது அதன் ஐந்து தத்துவங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்ற ஐம்பெரும் தத்துவங்களைக் குறிப்பனவாக அமைகின்றது.
கொல்லம் சார்ந்த பகுதிகளில் அக்ஷதம் எனப்படும் அரிசி, மஞ்சள் கலவை உபயோகப்படுத்தப்படுகின்றது. இது நெல்லாகவும் அரிசியாகவும் கலக்கப்பட்டு உருளியில் வைக்கப்படுகின்றது. ஆனால் கேரளாவின் மற்ற பகுதிகளில் உனக்கலரியை (அரிசி) உருளிக்குள் செல்லும் முதற்பொருளாக உபயோகப்படுத்துகின்றனர். இது உருளிக்குள் மற்ற பொருட்களை வைப்பதற்கு அடித்தளமாக அமைகின்றது.
வரிசை 105:
விஷூக்கனி வரப் போகும் வருடத்தின் செழுமையைக் குறிக்கின்றது - ஆன்மீகமாகவும், செல்வங்களாகவும். உணவு, விளக்கு, பணம், அறிவு - இவையாவும் நம் வாழ்வை நிறைக்க வேண்டும். விஷூக்கனியை தன்னுள் ஈர்த்துக் கொண்டு இவையாவும் வருடம் முழுதும் நமக்குக் கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொள்வர். விஷூக்கனி பார்வைக்கான விருந்து மட்டுமன்று. இக்காட்சி அவரவர் மனது மற்றும் செயல்களில் பிரதிபலிக்க வேண்டும். இப்படிப்பட்ட சிறப்பான வருட ஆரம்பம், இறைவனின் ஆசியுடன் கூடிய காட்சி அவரவருக்கு மட்டுமே உரியது அல்ல. இதனை அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையாகவும் சமூகத்தில் பரப்புவது அவரவர் கடமையாகும்.
== கனிக்காணல் ==
|