இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 27:
ஆங்கிலேய மன்னராட்சி வரலாற்றில் எட்டாம் ஹென்றி மிகப் பெரிய புள்ளியாக விளங்கினார்
ஆறு முறை மணந்ததற்காக மட்டுமன்றி அவர் இங்கிலாந்து திருச்சபையை உரோமன் காத்தோலிக்க திருச்சபையிலிருந்து பிறித்து இங்கிலாந்து வரலாற்றில் அவர் முத்திரை பதித்துள்ளார்.போப்பாண்டவர் மேற்பார்வையில் அதுவரை இயங்கிய இங்கிலாந்து திருச்சபையை ஹென்றி தன் கட்டுக்குள் கொண்டுவந்து தன்னைத் தானே அதன் தலைமையில் அமர்த்தினார்.அஃதோடு, இங்கிலாந்தில் உள்ள அத்தனை காத்தோலிக்க சந்நியாச மடங்களை அவர் அடியோடு ஓழித்தார்.மேலும் அவர் தேவாலய வழிப்பாடு முறைகளை தமது இஷ்டம் போல் மாற்றி அமைத்தார்.இவை யாவும் செய்தும் அவர் ஒரு தீவிர காத்தோலிகர் என்பது ஆச்சரியம்
எட்டாம் ஹென்றியைப் பற்றிய வரலாற்றுச் சான்றுகள் அவர் ரம்யமான, வசீகரமான, கம்பீரமான தோற்றம் கொண்டவராக வர்ணிக்கின்றன.சர்வாதிகாரியாக அவர் இங்கிலாந்தை ஆண்டர்; அப்படிப்பட்ட ஆட்சியை நடத்திய கடைசி மன்னராக இதுவரை இருக்கக் கூடும்.
தனது அகம்பாவத்திற்காக மட்டுமின்றி தனக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்பதற்காகவும் அவர் ஆறுமுறை மணந்துகொண்டார். தனது நாட்டை ஆட்சி செய்ய ஒரு பெண்ணுக்கு போதிய வலிமை இல்லை என்று உறுதியாக் நம்பினார். ஆறு திருமணங்கள் புரிந்த சாதனையோடு அவர் புரடஸ்தந்தம்(ஆங்கிலம்: )இங்கிலாந்து தேசிய மதமாகுவதற்கு மறைமுகக் காரணமாகவும் இருந்ததால் அவர் இன்றும் ஆங்கில் உலகத்தில் பேசப்பட்டு வருகிறார். அவரது வாழ்க்கையின் பிற்பகுதியில் பார்ப்போருக்கு அறுவறுப்பை அள்ளி வீசும் அளவிற்கு பருமனாக வளர்ந்தார்; பல்வேறு நோய்கள் சங்கமிக்கும் கூடாரமாக விளங்கினார். ஆணவக்காரன்,பைத்தியக்காரன், காமவெறியன், ஈரமற்றவன், கொடுங்கோலன், தாழ்வு மனப்பான்மை கொண்டவன் என்று பலர் அவரைப்பற்றி பேசினர்.
[[Category:1491 பிறப்புகள்]]
|