தமிழிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 13:
சங்கம் மருபிய நூலான [[சிலப்பதிகாரத்தில் தமிழிசை|சிலப்பதிகாரம் தமிழிசை]] பற்றி பல விரிவான விளக்கங்களைத் தருகிறது. [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தின்]] [[அரும்பதவுரை]]யும், [[அடியார்க்கு நல்லாருரை]]யும் மேலும் பல பயனுள்ள குறிப்புக்களைத் தருகின்றன. இக் காலத்தில் எழுதப்பெற்ற [[மணிமேகலை]], [[திருமந்திரம்]], [[சீவக சிந்தாமணி]] ஆகிய நூல்களிலும் தமிழிசை பற்றிய செய்திகள் உள்ளன. இதே காலப் பகுதியிலேயே தோன்றிய [[காரைக்கால் அம்மையார்]] அருமையான தமிழிசைப் பாடல்களை ஆக்கி உள்ளார்.
 
பக்தி காலத்தில் (கிபி 700 - 1200) தமிழிசையை [[அப்பர்]], [[திருஞான சம்பந்தர்]], [[சுந்தரர்]] முதலான [[நாயன்மார்கள்|நாயன்மார்களினது]] [[தேவாரம்|தேவாரங்களும்]], பன்னினு [[ஆழ்வார்|ஆழ்வார்களினது]] [[நாலாயிரத்திவ்ய பிரபந்தமும்]] வளப்படுத்தின. இக் காலத்தில் இயற்றப்பெற்ற [[திவாகரம்]], [[பிங்கலம்]] போன்ற நிகண்டுகளிலும் தமிழிசைச் சொற்களுக்கு விளக்கங்கள் உள்ளன. [[பட்டினத்தார்]], [[இடைக் காட்டுச்சித்தர்]] ஆகியோரும் இக் காலத்தவரே.
 
பக்தி காலத்தைத் தொடர்ந்த இடைக் காலத்தில் தமிழிசை நலிவுற்று இருந்தது. எனினும் கிபி 15 ம் நூற்றாண்டில் தோன்றிய அருணகிரிநாதர் [[திருப்புகழ்|திருப்புகழ்]] இயற்றினார். இதில் உள்ள [[இசை]]த்[[தாளம்|தாளங்கள்]] தனித்தன்மை பெற்றவை. [[குமரகுருபரர்]], [[முத்துத் தாண்டவர்]] ஆகியோர் இக் காலத்தைச் சேர்தவர்கள்.
"https://ta.wikipedia.org/wiki/தமிழிசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது