தானியேல் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியேல் (நூல்) - தொடரும்
சி தானியேல் (நூல்) தொடர்ச்சி
வரிசை 4:
 
==தானியேல் நூல் பெயர்==
 
'''தானியேல்''' என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் דָּנִיֵּאל, (Daniyyel, Dāniyyêl) என்னும் பெயர் கொண்டது. "கடவுள் என் நடுவர்" என்பது அதன் பொருள். தானியேல் என்பவர் இந்நூலின் மைய கதாபாத்திரம் ஆவார்.
 
==தானியேல் நூலின் உள்ளடக்கம்==
 
'''தானியேல்''' என்னும் இந்நூல் யூதர்கள் வேற்றினத்து மன்னனால் ஒடுக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டபோது எழுதப்பெற்றது. கொடுங்கோல் மன்னனை வீழ்த்தி இறைவன் தம் மக்களை மீண்டும் முன்னிருந்தவாறே சிறப்புறச் செய்வார் என்பதை வற்புறுத்துமாறு இந்நூலில் எடுத்துக்காட்டுகளும் காட்சிகளும் கையாளப்பட்டுள்ளன.
 
இந்நூல் இரு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
 
'''பிரிவு 1:''' தானியேலும் அவருடைய தோழர்களும் கடவுள்மீது அசையாத நம்பிக்கை கொண்டு அவர்தம் கட்டளைகளுக்குப் பணிந்து நடந்ததால் தங்கள் எதிரிகளை மேற்கொண்டனர். இப்பகுதியில் காணப்படுபவை பாபிலோனிய, பாரசீகப் பேரரசுகளின் வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டுள்ளன.
 
'''பிரிவு 2:''' தானியேல் கண்ட காட்சிகள் பாபிலோனியப் பேரரசு தொடங்கி அடுத்துவரும் எல்லாப் பேரரசுகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் சுட்டிக்காட்டும் உருவகங்களாக அமைந்து, வேற்றினத்துக் கொடுங்கோலனின் வீழ்ச்சியையும் இறைமக்களின் வெற்றியையும் முன்னுரைக்கின்றன.
 
==நூல் அமைப்பில் பல மொழிகள்==
 
தானியேல் நூலின் ஒரு பகுதி எபிரேய மொழியிலும், மறு பகுதி அரமேய மொழியிலும் எழுதப்பட்டுள்ளன.
 
''எபிரேய மொழிப் பகுதி'':
<br>தானியேல் 1:1-2:3;
<br>தானியேல் 8:1-12:13.
 
''அரமேய மொழிப் பகுதி'':
<br>தானியேல் 2:4-7:28.
 
மேலும், தானியேல் நூலின் நாங்கு பகுதிகள் கிரேக்க மொழியில் மட்டும் காணப்படுகின்றன. அவை '''தானியேல்: இணைப்புகள்''' என்னும் இணைத்திருமுறை நூலில் இடம் பெற்றுள்ளன.
 
''நான்கு கிரேக்க இணைப்புகள்'':
<br>"அசரியாவின் மன்றாட்டு";
<br>"மூவர் பாடல்";
<br>"சூசன்னா";
<br>"பேலும் பறவைநாகமும்".
 
 
==தானியேல் நூலிலிருந்து குறிப்பிடத்தக்க ஒரு சிறு பகுதி==
 
'''தானியேல் 2:19-23'''
<br>தானியேல் விண்ணகக் கடவுளை வாழ்த்திப் போற்றினார்.
<br>அவர் கூறியது:
<br>கடவுளின் திருப்பெயர் என்றென்றும் வாழ்த்தப்படுவதாக!
<br>ஏனெனில், ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியன!
<br>காலங்களையும் பருவங்களையும் மாற்றுபவர் அவரே!
<br>அரசர்களை விலக்கி மாற்று அரசர்களை நிலைநிறுத்துபவர் அவரே!
<br>ஞானிகளுக்கு ஞானம் வழங்குபவர் அவரே!
<br>அறிவாளிகளுக்கு அறிவை அருள்பவர் அவரே!
<br>ஆழ்ந்த மறைபொருள்களை வெளிப்படுத்துபவர் அவரே!
<br>இருளில் உள்ளதை அறிபவர் அவர்!
<br>ஒளியும் வாழ்வது அவருடனே!
<br>எங்கள் தந்தையரின் இறைவா!
<br>உமக்கு நன்றியும் புகழும் கூறுகின்றேன்;
<br>ஏனெனில் எனக்கு ஞானமும் ஆற்றலும் தந்தவர் நீரே!
<br>நாங்கள் உம்மிடம் கேட்டதை இப்பொழுது எனக்குத் தெரியப்படுத்தியவர் நீரே!
<br>அரசனது காரியத்தை எங்களுக்கு அறிவித்தவரும் நீரே!"
 
 
==தானியேல் நூலின் உட்பிரிவுகள்==
{| class="wikitable"
|-
! பொருளடக்கம்
! அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை
! 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
|-
| 1. தானியேலும் தோழர்களும்
| 1:1 - 6:28
| 1289 - 1302
|-
| 2. தானியேலின் காட்சிகள்
அ) நான்கு விலங்குகள்
<br>ஆ)செம்மறியும் வெள்ளாடும்
<br>இ)வான தூதர்
| 7:1 - 11:45
7:1-28
<br>8:1 - 9:27
<br>10:1 - 11:45
| 1302 - 1312
1302 - 1304
<br>1304 - 1308
<br>1308 - 1312
|-
| 3. முடிவின் காலம்
| 12:1-13
| 1312 - 1313
|}
 
[[பகுப்பு:விவிலியம்]]
"https://ta.wikipedia.org/wiki/தானியேல்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது