சி. ஜேசுதாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''ஜேசுதாசன்''' (1919 - [[மார்ச் 6]], 2002; [[சேனவிளை]], [[குமரி மாவட்டம்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]) தமிழ் நவீன இலக்கியத்தில் ஆழ்ந்த பாதிப்பை செலுத்திய கல்லூரி ஆசிரியர், திறனாய்வாளர், இலக்கிய வரலாற்றாசிரியர்.
== வாழ்க்கை == ஒரு கொத்தனாரின் மகனாக எளிய குடும்பத்தில் பிறந்தவர் ஜேசுதாசன். குளச்சல் உயர் நிலைப்பள்ளியிலும், [[திருவனந்தபுரம்|திருவனந்த புரத்திலும்]] தமிழ் பட்டப்படிப்பை முடித்த பேராசிரியர், தன் தமிழிலக்கிய முதுகலைப்பட்டத்தை அண்ணாமலை பல்கலை கழகத்தில் முடித்தார். சிறிதுகாலம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வேலை பார்த்தார். பின்பு திருவனந்தபுரம் பல்கலைகழக கல்லூரியில் சேர்ந்தார். அங்கு தமிழ் துறை தலைவராக இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப்பின் மனைவியின் சொந்த ஊரான புலிப்புனத்தில் ஒரு ஆங்கிலப்பள்ளியை நடத்திவந்தார். நாவலாசிரியை ஹெப்சிபா ஜேசுதாசனின் கணவர். ஹெப்ஸிபா ஜேசுதாசன் புத்தம் வீடு. மாநீ டாக்டர் செல்லப்பா போன்ற நாவல்களை எழுதிய நாவலாசிரியர். பேராசிரியர் அடிப்படையில் ஒரு ஆசிரியர். விமரிசனம் உட்பட அவரது பிற பங்களிப்புகள் எல்லாமே அந்த பணியின் பகுதிகள் மட்டுமேயாகும்.
கோட்டாறு குமாரசாமிபிள்ளை இவரது தமிழாசிரியர். அண்ணாமலைபல்கலையில் கா.சு.பிள்ளையிடம் தமிழ்கற்றார்
கல்லூரி ஆசிரியராக பேராசிரியர் ஜேசுதாசன் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையின் வழி வந்தவர் எனலாம். பொதுவாக அன்றைய தமிழ் பேராசிரியர்களின் குணம் நவீன இலக்கியம் மீதான் உதாசீனமாகும். பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை எந்த அளவுக்கு பழந்தமிழ் பயிற்சியும் ஈடுபாடும் கொண்டிருந்தாரோ அந்த அளவுக்கு நவீன இலக்கிய ஆர்வமும் ரசனையும் உடையவராக இருந்தார். [[புதுமைப்பித்தன்|புதுமைப்பித்தனை]] அங்கீகரித்த ஒரே மரபுவழி தமிழறிஞர் அன்று வையாபுரிப்பிள்ளை மட்டுமே. அவர் தமிழ் பற்று மிக்கவர், அதே சமயம் வெறி இல்லாதவர். சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் உள்ளவர். அறிவியல் பூர்வமான ஆய்வில் நம்பிக்கை கொண்டவர். இக்காரணங்களால் அவர் அன்றைய தமிழ்வெறி அலையில் தாக்குபிடிக்க முடியாமல் திருவனந்தபுரம் வர நேர்ந்தது. ▼
== பங்களிப்பு ==
▲கல்லூரி ஆசிரியராக பேராசிரியர் ஜேசுதாசன் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையின் வழி வந்தவர் எனலாம். பொதுவாக அன்றைய தமிழ் பேராசிரியர்களின் குணம் நவீன இலக்கியம் மீதான் உதாசீனமாகும். பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை எந்த அளவுக்கு பழந்தமிழ் பயிற்சியும் ஈடுபாடும் கொண்டிருந்தாரோ அந்த அளவுக்கு நவீன இலக்கிய ஆர்வமும் ரசனையும் உடையவராக இருந்தார். [[புதுமைப்பித்தன்|புதுமைப்பித்தனை]] அங்கீகரித்த ஒரே மரபுவழி தமிழறிஞர் அன்று வையாபுரிப்பிள்ளை மட்டுமே. அவர் தமிழ் பற்று மிக்கவர், அதே சமயம் வெறி இல்லாதவர். சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் உள்ளவர். அறிவியல் பூர்வமான ஆய்வில் நம்பிக்கை கொண்டவர். இக்காரணங்களால் அவர் அன்றைய தமிழ்வெறி அலையில் தாக்குபிடிக்க முடியாமல் திருவனந்தபுரம் வர நேர்ந்தது.
பேராசிரியர் அடிப்படையில் [[கம்பராமாயணம்]] மீது ஆழமான பிடிப்பு கொண்ட மரபார்ந்த தமிழறிஞர். அவரது வாழ்க்கையின் தொடக்கம் முதல் இறுதிக்கணம் வரை கம்பராமாயணம் அவருடன் இருந்தது. அதன் செவ்வியல் குணமும் கவித்துவ வீச்சும் அவரை கவர்ந்தன. அவரது மனநிலை பொதுவாக செவ்வியலுக்கு சாதகமானது. ஆனால் அவர் நவீன இலக்கியத்தை ரசித்தார், அதன் முக்கியத்துவத்தை கல்வி நிலையங்கள் ஏற்கச் செய்ய கடுமையாக போராடினார். இதற்கு காரணம் அவரது பரந்துபட்ட ரசனை மட்டுமல்ல, அதற்கு சாதகமான ஒரு சூழலும் அன்று திருவனந்தபுரத்தில் இருந்தது. [[நகுலன்]], [[மாதவன்]], [[நீலபத்மநாபன்]], [[காஸ்யபன்]], [[தட்சணாமூர்த்தி]] போன்ற தமிழ் எழுத்தாளர்களும் [[அய்யப்ப பணிக்கர்]], [[கே எஸ் நாராயணபிள்ளை]] போன்ற [[மலையாளம்|மலையாள]] எழுத்தாளர்களும் அன்று ஒரு கூட்டாக இயங்கினார்கள். நவீன தமிழிலக்கியத்தின் திருப்பு முனையாக கணிக்கப்படும் [[குருஷேத்ரம்]] என்ற தொகை நூல் (நகுலன் தொகுத்தது) அப்போது வெளியானது. அதில் பேராசிரியருக்கும் பங்கு உண்டு.
வரி 33 ⟶ 42:
பேராசிரியரின் விரிவான பேட்டி ''[[சொல்புதிது]]'' ஜனவரி 2002 இதழில் வெளிவந்தது. 'ஒரு மகத்தான விரிவான வகுப்பு அது. பேட்டி எடுத்தவர்களும் கொடுத்தவரும் மிக உயர்ந்த அறிவார்ந்த தளத்தில் இருக்கும்போது நடந்துள்ளது..'' என்று [[அசோகமித்திரன்]] விருட்சம் பிப்ரவரி 2002 இதழில் அதைப்பற்றி சொல்கிறார்.
இணைப்பு
ஜெயமோகன் கதை மத்துறு தயிர் http://www.jeyamohan.in/?p=12035 ,http://www.jeyamohan.in/?p=12085
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
|