ஆனந்த குமாரசுவாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
கலாயோகி '''ஆனந்த கெந்திஷ் குமாரசுவாமி''' ([[ஆகஸ்டு 22|ஆகஸ்ட் 22]] [[1877]] - [[செப்டம்பர் 9]] [[1947]], [[கொழும்பு]] [[இலங்கை]]), கீழைத்தேயக் கலைகளுக்கும் அவற்றின் ஊடுபொருளாக அமைந்த இந்து மதங்களுக்கும் சிறந்த தூதுவராக விளங்கியவர். சிறந்த ஓவியர், சிற்பி, கட்டடக்கலைஞர், கலை விமரிசகர், ஆராய்ச்சியாளர், நூலாசிரியர்.
 
[[படிமம்:Anandacoomaswamy.jpg|frame|right|கலாயோகி ஆனந்த கே. குமாரசுவாமி்]]
==வாழ்க்கைச் சுருக்கம்==
[[சேர் முத்து குமாரசுவாமி]], எலிசபெத் பீவி (Elizabeth Clay-Beevi) என்போரின் ஏக புத்திரன். [[கொழும்பு|கொழும்பிலே]] பிறந்தார். தாயார் [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] கெண்ட் என்னும் ஊரைச் சேர்ந்தவர். தாயாருடன் [[1879]] ஆம் ஆண்டு [[ஏப்ரல்]] மாதம் இங்கிலாந்து சென்றார். இரண்டு வயதாகுமுன் தந்தையை இழந்து தாயின் பராமரிப்பிலே இங்கிலாந்தில் வளர்ந்து [[லண்டன்]] பல்கலைக்கழகத்திலே BSc தேர்வில் முதல் வகுப்பிற் சித்தியடைந்தார். பின்பு அதே பல்கலைக்கழகத்தில் [[1905]] இல் DSc (Geology) பட்டத்தையும் பெற்றார். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் போது அங்கு அவருடன் கல்வி பயின்ற எதெல் மேரி (''Ethel Mary'') என்பாரைத் திருமணம் புரிந்து கொண்டார்.
 
எதெலுடன் இலங்கை திரும்பிய ஆனந்த குமாரசுவாமி [[1903]] ஆம் ஆண்டு [[மார்ச்]] மாதம் முதல் [1906]] [[டிசம்பர்]] வரை [[இலங்கை]]யிற் கனிப்பொருள் ஆய்வுப் பகுதியின் தலைவராக விளங்கினார். எதெலுடனான மணவாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. சிறிது காலத்தின் பின்னர் எதெல் நாடு திரும்பினார். பின்னர் ஆனந்த குமாரசுவாமி அவர்கள் ரத்னா தேவி எனும் இலங்கைப் பெண்ணைத் மணம் புரிந்தார். இவருக்கு நாரதா, ரோஹினி என இரு பிள்ளைகள் பிறந்தனர். இவர்களில் நாரதா பின்னர் ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார். இந்தத் துக்கம் தாளாது ரத்னா தேவியும் சிறிது காலத்தில் காலமானார்.
வரிசை 18:
சகோதரி நிவேதிதையுடன் இணைந்து பௌத்த புராணக்கதைகளையும் தொகுத்துத் தந்துள்ளார். 'பிரபுத்த பாரதா' என்ற சஞ்சிகையில் 1913, 1914, 1915 ஆம் ஆண்டுகளில் [[தாயுமானவர்]] பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் சிலவற்றை வழங்கினார்.
==பொஸ்ரனில் சேவை==
1917 முதல் [[அமெரிக்கா|அமெரிக்க ஐக்கிய நாட்டிற்]] பொஸ்ரன் நகரில் அமைந்திருந்த நுண்கலை நூதனசாலையிற் கீழைத்தேயப் பிரிவின் பணிப்பாளராகவும், பின்பு ஆராய்ச்சியாளராகவும் பணிபுரிந்தார். இங்கு அவர் Dona Lusa என்னும் ஆர்ஜண்டீனா பெண்மணியைச் சந்தித்து அவரைத் திருமணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு ராமா என்னும் பெயர் கொண்ட ஆண்குழந்தை பிறந்தது. ராமா பின்னர் [[இந்தியா]]வின் ஹரித்வாரில் உள்ள Gurukul பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்று அமெரிக்காவின் ஆல்பேர்ட் ஐன்ஸ்டைன் வைத்தியசாலையில் வைத்தியராக பயிற்சி பெற்று அமெரிக்காவில் வைத்தியராகத் தொழிலாற்றுகிறார்தொழிலாற்றியவர். ராமா குமாரசுவாமி [[ஜூலை 19]], [[2006]] இல் காலமானார்.
 
ஆனந்த குமாரசுவாமி அவர்கள் தமது எழுபதாவது வயதில் [[செப்டம்பர் 9]] [[1947]]) இல் [[அமெரிக்கா]]வில் பொஸ்ரன் நகரில் காலமானார்.
 
==வெளிவந்த நூல்கள்==
* ''Medieval Sinhalese Art'' (1908)
* ''Arts and Craft of India and Ceylon'' (1913)
* ''Bronzes from Ceylon'' (1914)
* ''Rajput Paintings'' (1916)
* ''The History of Indian and Indonesian Art'' (1927)
* ''The Dance of Siva'' (1917)
* ''Hinduism and Buddhism'' (1943)
* ''Buddha and the Gospel of Buddha''
* ''A new Approach to the Vedas'' (1932)
* ''Spiritual Authority and Temporal Power''
 
==வெளி இணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆனந்த_குமாரசுவாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது