'''குருதி உறையாமை''' அல்லது '''இரத்தம் உறையாமை''' (Haemophilia அல்லது Hemophilia) என்பது, [[மனிதர்|மனித]] உடலில் [[குருதி]] உறையாமல் போகும் [[பரம்பரை நோய்|பரம்பரை நோயின்]] பெயராகும். [[மரபணு]] குறைபாடுகளின் காரணமாக (அல்லது, மிக அரிதான சமயங்களில், [[தன்னுடல் தாக்குநோய்]] (autoimmune disorder) காரணமாக இரத்தத்தை உறையச் செய்யும் [[திரவவிழைய]] (Plasma) காரணிகளின் செயல்பாடு குன்றுவதால், இந் [[நோய்]] உண்டாகிறது. [[உடல்|உடலில்]], உள் மற்றும் வெளிக் காயங்கள் ஏற்படும் போது இரத்தம் உறையாமல் தொடர்ந்து [[குருதிப்பெருக்கு]] ஏற்படுவதால் உயிர் அபாயம் உள்ள நோய்களில் இதுவும் ஒன்று.