திருவாலியமுதனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''திருவாலியமுதனார்''' பன்ன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
14:47, 30 மே 2011 இல் நிலவும் திருத்தம்
திருவாலியமுதனார் பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையில் அடங்கும் திருவிசைப்பா பாடிய அருளாளர்களில் ஒருவராவார். இவர் திருமயிலையில் வைணவ அந்தணர் குலத்தில் தோன்றியவர். சோழநாட்டில் சீகாழிப்பதிக்கு அருகிலுள்ள திருவாலிய நாட்டின் தலைநகர் திருவாலி நகரில் எழுந்தருளியிருக்கும் திருமாலிடத்து அன்பு பூண்ட காரணத்தினால் பெற்றோர்கள் இவருக்கு திருவாலியிலுள்ள திருமாலின் பெயராகிய அமுதன் என்பதை இணைத்து திருவாலியமுதன் என்று பெயரிட்டனர். வைணவ குலத்தில் தோன்றினாலும் சிவபிரானிடம் அன்பு கொண்டு சிவனடியாராக திகழ்ந்தார். சிதம்பரம் நடராசப் பெருமானை தம் குலதெய்வமாகக் கொண்டு சிவபக்தியில் திழைத்தார். இதன் காரணமாக நடராசப் பெருமான் மீது திருவிசைப்பா பதிகங்களைப் பாடியருளினார்.