சௌமியமூர்த்தி தொண்டமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →திருமணம் |
சிறி கலவரம் 1957 |
||
வரிசை 44:
அசிஸ் இ.இ.காவின் தலைவராக தெரிவான 1954 அட்டன் பொதுக்குழுவில் இலங்கையில் அப்போது இ.இ.காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இந்திய சார்பு குற்சாட்டுகளை எதிர்கொள்ளும் வகையில் இலங்கை இந்திய காங்கிரசினது பெயர் ''இலங்கை சனநாயக காங்கிரஸ்'' என்றும் இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிற் சங்கத்தினதும் பெயர் [[இலங்கை தொழிளாலர் காங்கிரஸ்]] என்றும் மாற்றப்பட்டது. அசிஸ் கட்சியில் இருந்து வெளியேறிய பிறகு சட்டச் சிக்கல்கள் காரணமாக இலங்கை தொழிளாலர் காங்கிரஸ்(இ.தொ.கா.)அரெ மட்டுமே சௌமியமூர்த்தியின் தலைமையில் கீழ் வந்தது. அதுமுதல் அவர் இறக்கும் வரையில் இ.தொ.கா.வின் தலைவராக பதவி வகித்தார்.
1956 இல் [[சர்வதேச தொழிளாலர் நிறுவனம்|சர்வதேச தொழிளாலர் நிறுவனத்தின்]] இலங்கை பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டார். மேலும் அதன் செயற்குழுவுக்கும் தெரிவு செய்யப்பட்டார் இப்பதவியை அவர் 1978 இல் அமைச்சராக பதவியேறும் வரையில் தொடர்ந்து வகித்து வந்தார்.
== அரசியல் முதிர்ச்சி ==
=== சிறி கலவரம் 1957 ===
[[1957]] இல் [[இலங்கை சுதந்திர கட்சி]] தலைமையிலான அரசின் போக்குவரத்து அமைச்சர் மைத்திரிபால சேனாநாயக்கா வகன எண்தகடுகளில் ஆங்கில எழுத்துக்கு பதிலாக சிங்கள் சிறி (ஸ்ரீ) எழுத்து பாவிக்கப்பட வேண்டுன் என பனித்தார். இதனால் இலங்கயின் வட்க்கு கிழக்கில் [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]] தலைமையில் சிறி-எதிர்ப்பு போராட்டம் வெடித்தது. தெற்கில் சிங்களவரால் தமிழ் பெயர் பலகைகளுக்கு தார் பூசப்பட்டது. இப்போராட்டத்துக்கு மத்திய மலை நாட்டில் இந்திய வம்சாவளியினர் வாழும் பகுதிகளிலும் ஆதாரவு கிடைத்தது. இதனால் அப்பகுதிகளில் சிங்கள-தமிழ் கலவரம் மூண்டது. இதன் போது அப்போதைய பிரதமரான [[எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா]]வின் வேண்டுகோளுக்கு இணங்க தொண்டமான் மத்திய மலைநாட்டின் நகரங்களுக்குச் சென்று நிலைமையை சீர் செய்தார். பின்னர் வெளியிட்ட ஊடக குறிப்பில் மலையக தமிழ் இளைஞ்ஞர்கள் அமைதிகாக்க வேண்ண்டு மெனவும், வடக்கு கிழக்கு தமிழர் பிரச்சினயிலிருந்து மலையக தமிழரது பிரச்சினை வேறுப்பட்டது எனவும் சுட்டிக்காட்டினார். மேலும் யூன் 1957 இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கு எழுதிய கடிதம் மூலம் இலங்கை சுதந்திர கட்சியையும் இலங்கைத் தமிழரசுக் கட்சியையும் பேச்சுகளுக்கு இணங்கச் செய்து, பின்னர் பௌத்த பிக்குகளின் எதிர்ப்பு காரணமாக கிழித்தெரியப்பட்ட [[பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம், 1957|பண்டா-செல்வா]] ஒப்பந்த்துக்கு வித்திட்டார்.
[[ஆகஸ்டு 4]], [[1960]] இல் [[சிறிமாவோ பண்டாரநாயக்கா]] ஆட்சியில் தொளிலாளர் பிரதிநிதியாக சௌமியமூர்த்தி பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டார்.
== ஆதாரங்கள் ==
|