நம்பிக்கை அறிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
சி சேர்க்கை
வரிசை 4:
 
''நம்புகிறேன்'' ("I believe" ) எனப் பொருள்படுகின்ற "credo" என்னும் சொல் ({{lang-la|[[credo]]}}) கிறித்தவ நம்பிக்கை அறிக்கையைக் குறிக்க பொதுவாகப் பயன்படுகிறது.
{{christianity}}
 
மிகப் பெரும்பான்மையான கிறித்தவ சபைகள் ஏற்றுக்கொள்கின்ற [[நிசேயா நம்பிக்கை அறிக்கை]] மற்றும் [[திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை]] ஆகிய இரண்டும் "நம்புகிறேன்" ({{lang-la|[[credo]]}}) என்னும் சொல்லோடுதான் தொடங்குகின்றன. ஒரே சமய நம்பிக்கை கொண்டவர்கள் தம்மை "அடையாளம்" கண்டுகொள்ள உதவுகின்ற "உரைகல்லாக" நம்பிக்கை அறிக்கை உள்ளது. எனவேதான் நம்பிக்கை அறிக்கை "symbol" ({{lang-el|σύμβολο[ν]}}, ''sýmbolo[n]'') எனவும் அழைக்கப்படுகிறது.
 
வரிசை 11:
==சமயங்களில் நம்பிக்கை அறிக்கைகள்==
 
கிறித்தவ சமயத்தில் பெரும்பான்மையாக வழக்கத்திலுள்ள நம்பிக்கை அறிக்கை [[நிசேயா நம்பிக்கை அறிக்கை]] ஆகும். இது கிபி 325இல் நிசேயாவில் கூடிய பொதுச்சங்கத்தால் உருவாக்கப்பட்டது. அது [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டு]] நூல்களாகிய [[நற்செய்தி|நற்செய்தி நூல்கள்]], [[திருமுகம்|திருமுகங்கள்]] ஆகியவற்றின் அடிப்படையிலும், ஓரளவுக்குப் [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டு நூல்களின்]] அடிப்படையிலும் அமைந்தது. ஒரே கடவுள் தந்தை, மகன் ([[இயேசு கிறித்து]]), தூய ஆவி என்னும் மூன்று ஆள்களாக உள்ளார் என்னும் மூவொரு கடவுள் கொள்கை இந்நம்பிக்கை அறிக்கையில் அடங்கியுள்ளது. எனவே, ஒருவர் உண்மையிலேயே கிறித்தவ சமயத்தை ஏற்கிறாரா என்றறியும் உரைகல்லாக இந்த நம்பிக்கை அறிக்கையில் அடங்கியுள்ள கோட்பாடுகளை அவர் ஏற்கும்போது தெரியலாம். <ref>[http://www.spurgeon.org/~phil/creeds/nicene.htm Johnson, Phillip R. "The Nicene Creed."] 1715 மேஆகத்து 20092011 பார்க்கப்பட்டது</ref>
 
மிகப்பெரும்பான்மையான கிறித்தவ சபைப் பிரிவுகள் [[நிசேயா நம்பிக்கை அறிக்கை|நிசேயா நம்பிக்கை அறிக்கையைத்]] தம் அடிப்படைக் கொள்கைத் தொகுப்பாக ஏற்றுக்கொண்டுள்ளன. இருப்பினும், ஒரு சில கிறித்தவப் பிரிவுகள் இந்நம்பிக்கை அறிக்கையை ஏற்பதில்லை.
வரிசை 43:
 
பழைய உரோமை நம்பிக்கை அறிக்கை பின்னர் சிறிது விரித்து எழுதப்பட்டு, [[திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை]] என்னும் பெயர் பெற்றது.
 
===நிசேயா நம்பிக்கை அறிக்கை===
{{Main|நிசேயா நம்பிக்கை அறிக்கை}}
கிபி 325இல் நிசேயா நகரில் கூடிய பொதுச்சங்கம் இந்த நம்பிக்கை அறிக்கையை உருவாக்கியது. கிறித்தவர்களின் அடிப்படை நம்பிக்கை இந்த அறிக்கையில் வெளிப்படுத்தப்படுகிறது. குறிப்பாக, இயேசுவின் இறைத்தன்மையும் அவர் ஒரு படைப்புப்பொருள் அல்ல, மாறாகக் கடவுளுக்கு நிகரானவர் என்னும் உண்மையும் இந்த அறிக்கையில் உள்ளது. <ref>[http://www.spurgeon.org/~phil/creeds/nicene.htm Kiefer, James E. "The Nicene Creed."] 15 ஆகத்து 2011 பார்க்கப்பட்டது</ref>
 
===திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை===
{{Main|திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை}}
இந்த நம்பிக்கை அறிக்கை கிட்டத்தட்ட எல்லா கிறித்தவ சபைகளாலும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, திருவழிபாட்டின் போது இது அறிக்கையிடப்படும். கத்தோலிக்க திருச்சபையின் ஞாயிறு மற்றும் பெருவிழாத் திருப்பலியின்போது நிசேயா நம்பிக்கை அறிக்கைக்குப் பதிலாக இந்த அறிக்கை பல இடங்களில் அறிக்கையிடப்படுகிறது. இது மறைக்கல்வியிலும் பயன்படுகிறது. [[உரோமன் கத்தோலிக்க திருச்சபை]] [[லூதரனியம்|லூதரன் சபை]], [[ஆங்கிலிக்கம்|ஆங்கிலிக்க சபை]], [[மேற்கு மரபுவழி திருச்சபை]], பிரஸ்பிட்டேரியன் சபை, மெதடிஸ்ட் சபை, காங்க்ரகேஷனலிஸ்டு சபை போன்ற பல கிறித்தவ சபைப்பிரிவுகள் இந்த நம்பிக்கை அறிக்கையை ஏற்று தம் வழிபாடுகளில் பயன்படுத்துகின்றன.
 
===கால்செதோனிய நம்பிக்கை அறிக்கை===
{{Main|கால்செதோனிய நம்பிக்கை அறிக்கை}}
 
கிபி 451இல் கால்செதோனியா நகரில் நடந்த பொதுச்சங்கத்தில் இந்த நம்பிக்கை அறிக்கை உருவானது. இதில் [[இயேசு கிறித்து]] கடவுளாகவும் மனிதராகவும் உள்ளார் என்னும் உண்மையும் இரு தன்மைகள் இருப்பினும் ஒரே ஆளாக இருக்கிறார் என்னும் உண்மையும் தெளிவாகச் சேர்க்கப்பட்டன.
 
===அத்தனாசியுஸ் நம்பிக்கை அறிக்கை===
{{Main|அத்தனாசியுஸ் நம்பிக்கை அறிக்கை}}
 
ஒரே கடவுள் தந்தை, மகன், தூய ஆவி என மூன்று ஆள்களாக உள்ளார் என்னும் மூவொரு கடவுள் கொள்கை (Trinitarian doctrine), மற்றும் இயேசு கிறித்து கடவுளும் மனிதரும் ஆவார் என்னும் கொள்கை இந்த நம்பிக்கை அறிக்கையில் விளக்கம் பெறுகின்றன. திரித்துவமாக விளங்கும் கடவுள் தந்தை, மகன், தூய ஆவி என்னும் மூன்று ஆள்களாக இருப்பினும் அம்மூவரும் தம்முள் சம மாண்பு கொண்டுள்ளனர் என்பது வெளிப்படையா இந்த நம்பிக்கை அறிக்கையில் உள்ளது. உண்மைக் கொள்கையை ஏற்காதோர் "புறம்பாக்கப்பட்டோர்" (anathema) என்னும் கூற்று இந்த நம்பிக்கை அறிக்கையில் உள்ளது. அக்கூற்று மேலே கூறப்பட்ட [[நிசேயா நம்பிக்கை அறிக்கை|நிசேயா நம்பிக்கை அறிக்கையிலும்]] [[திருத்தூதர் நம்பிக்கை அறிக்கை|திருத்தூதர் நம்பிக்கை அறிக்கையிலும்]] காணப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆரியுஸ் என்பவர் இயேசு கிறித்து பற்றிக் கூறிய தப்பறைக் கொள்கையை அத்தனாசியுஸ் (கிபி 296/298 - 373) தீவிரமாக எதிர்த்தார். அவரே இந்நம்பிக்கை அறிக்கையை உருவாக்கினார் என்றொரு மரபு உண்டு. ஆனால் அத்தனாசியுஸ் காலத்திற்கு ஒரு நூற்றாண்டுக்குப் பின்னரே அது உருவானது என வரலாற்றாசிரியர் கூறுகின்றனர்.
 
===திரெந்து நம்பிக்கை அறிக்கை===
{{Main|திரெந்து நம்பிக்கை அறிக்கை}}
 
இந்த நம்பிக்கை அறிக்கையில், புரடஸ்தாந்து சீர்திருத்தத்திற்குப் பின் கத்தோலிக்க சபையில் சீர்திருத்தம் கொணரக் கூட்டப்பட்ட திரெந்து பொதுச்சங்கம் (1545-1563) தொகுத்தளித்த கொள்கை அடங்கியுள்ளது.
 
===இறைமக்களின் நம்பிக்கை அறிக்கை===
{{Main|இறைமக்களின் நம்பிக்கை அறிக்கை}}
 
இப்பெயரில் [[ஆறாம் பவுல் (திருத்தந்தை)|திருத்தந்தை ஆறாம் பவுல்]] 1968, சூன் ஆம் நாள் நவீன காலத்துக்கு உரிய ஒரு நம்பிக்கை அறிக்கையை வெளியிட்டார். உரோமையில் கிறித்தவ சமயம் பரவிட துணைபுரிந்த புனித பேதுரு மற்றும் புனித பவுல் ஆகியோர் கிறித்துவின் பொருட்டு மறைச்சாட்சிகளாக கிபி 68இல் உயிர்துறந்தனர் என்னும் மரபின்படி 1968ஆம் ஆண்டு அவர்களின் வீர மரணத்தின் பத்தொன்பதாம் நூற்றாண்டு நினைவு கொண்டாடப்பட்டது. அக்கொண்டாட்டத்தின் இறுதியில் திருத்தந்தை ஆறாம் பவுல் "இறைமக்களின் நம்பிக்கை அறிக்கையை" வெளியிட்டார். அதை அறிமுகப்படுத்தும்போது, "இந்த நம்பிக்கை அறிக்கை நிசேயா நம்பிக்கை அறிக்கையைச் சிறிது விரித்துக் கூறுவதோடு, நவீன காலத்தின் தேவைக்கேற்ப சில புதிய கருத்துகளும் அதில் அடங்கியுள்ளன" என்று கூறினார் <ref>[http://www.vatican.va/holy_father/paul_vi/motu_proprio/documents/hf_p-vi_motu-proprio_19680630_credo_en.html இறைமக்களின் நம்பிக்கை அறிக்கை]</ref>.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நம்பிக்கை_அறிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது