மாரிகாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
[[படிமம்:Heavy Rain.jpg|thumb|right|240px|மழை]]
'''மாரிகாலம்''' அல்லது '''மழைக்காலம்''' என்பது ஒரு [[பருவ காலம்]] ஆகும். குறிப்பிட்ட இடம் அல்லது ஒரு [[நாடு]], ஒரு ஆண்டில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஒரு சில மாதங்கள், சராசரி [[மழைவீழ்ச்சி]]யை பெறும் காலமே மாரிகாலம் என அழைக்கப்படுகின்றது<ref>Glossary of Meteorology (2009). [http://amsglossary.allenpress.com/glossary/search?id=rainy-season1 Rainy season.] American Meteorological Society. Retrieved on 2008-12-27.</ref>. சிலரைப் பொறுத்த அளவில் மழைக்காலம் விரும்பத்தகாத காலமாக இருப்பதனால், [[தகுதிச் சொல்வழக்கு|தகுதிச் சொல்வழக்கின்படி]], இக்காலத்தை '''பசுமைக்காலம்''' என்றும் அழைக்கலாம். மழைவீழ்ச்சியின் காரணமாக [[மரம்]], [[செடி]], [[செடிகொடி|கொடி]]கள், மற்றும் [[பயிர்|பயிர்கள்]] பசுமையாக செழித்து வளர்வதனால், பசுமைக்காலம் என அழைக்கப்படலாம். இந்த மழைக்காலமானது, ஒவ்வொரு [[ஆண்டு]]ம், குறிப்பிட்ட காலங்களில் ஏற்படும் [[பருவப் பெயர்ச்சிக் காற்று]] மூலமாகவே ஏற்படுகின்றது. அக்காலங்கள் இடத்துக்கு இடம் வேறுபடும்.
==இலங்கையில் மாரிகாலம்<ref>[http://www.mysrilanka.com/travel/theland/rainfall.htm]</ref><ref name=Suppiah>[http://www.nice.org.uk/nicemedia/pdf/CG011publicinfoenglish.pdf Nice.org] {{Cite book|author=R. Suppiah and M. M. Yoshino |title=Rainfall Variations of Sri Lanka
Part 1: Spatial and Temporal Patterns |publisher=Springer-Verlag |location=Institute of Geoscience, The University of Tsukuba, Sakura-mura, Niihari-gun,
Ibaraki-ken, 305 Japan | year=1984 | journal=For Meteorology, Geophysics, and Bioclimatology| issue=34| pages=329-340}}</ref>==
[[இலங்கை]]யில் [[இந்தியப் பெருங்கடல்]], மற்றும் [[வங்காள விரிகுடா]]வில் இருந்து வரும் பருவப் பெயர்ச்சிக் காற்று காரணமாகவே மழை பெய்கின்றது. [[மே]] நடுப்பகுதியில் இருந்து [[ஆகஸ்ட்]]-[[செப்டம்பர்]] வரையான காலத்தில், இந்தியப் பெருங்கடலில் இருந்து பெறப்படும் [[தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று]] மழையைக் கொண்டு வருகின்றது. இலங்கையின் நடுப்பகுதியில் இருக்கும் [[மலை]]ப் பிரதேசங்களை இந்தக் காற்று கடக்க முயல்கையில், அங்கே பெரு மழைவீழ்ச்சியையும், [[தென்மேற்கு]]ப் பகுதிகளிலும் மழையையும் தரும். இக்காலத்தில் கிழக்கு, வடகிழக்குப் பகுதிகள் மிகக் குறைவான மழையைப் பெறும் அல்லது மழையற்ற வரண்ட காற்றைப் பெறும். இந்தக் காற்று தமிழில் '''கச்சான் காற்று''' என அழைக்கப்படும். இலங்கையின் உலர் வலயத்தில் பொதுவாக இந்தக் காலத்தில் மழை இருப்பதில்லை. <br />
"https://ta.wikipedia.org/wiki/மாரிகாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது