சாலமோனின் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
சி சேர்க்கை
வரிசை 4:
[[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டின்படி]], இக்கோவில் [[இசுரயேல்|இசுரயேலின்]] மன்னராக ஆட்சிசெய்த [[சாலமோன்]] காலத்தில் கட்டப்பட்டது. எனவே, கிமு 10ஆம் நூற்றாண்டில் கோவில் கட்டப்பட்டிருக்க வேண்டும்.<ref name="Stevens">Stevens, Marty E. [http://books.google.co.uk/books?id=0P9gcFR1MSAC&dq=Temples,+tithes,+and+taxes:&source=gbs_navlinks_s Temples, tithes, and taxes: the temple and the economic life of ancient Israel], pg. 3. Hendrickson Publishers 2006, ISBN 1565639340</ref>
 
ஒருவேளை, [[இசுரயேல்|இசுரயேலர்]] [[எருசலேம்|எருசலேமைக்]] கைப்பற்றுவதற்கு முன்னர் அங்கிருந்த "எபூசியர்" நிறுவியிருந்த திருத்தலத்தின்மீது இக்கோவில் கட்டப்பட்டிருக்கலாம்..<ref>''Peake's commentary on the Bible''</ref>
 
 
==யாவே கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்==
{{main|எருசலேம் கோவில்}}
ஒருங்கிணைந்த இசுரயேல் அரசு "தெற்கு அரசு" (யூதா) என்றும், "வடக்கு அரசு" (இசுரயேல்) என்றும் கிமு 10ஆம் நூற்றாண்டில் பிரிந்ததைத் தொடர்ந்து அக்கோவில் இசுரயேலரின் கடவுளாகிய "யாவே" கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. கோவிலின் உள்ளே "உடன்படிக்கைப் பேழை" என்னும் பெட்டகமும் வைக்கப்பட்டது.]].<ref>Achtemeier, Paul J. and Roger S. Boraas. The HarperCollins Bible Dictionary. San Francisco, CA: HarperSanFrancisco, 1996. p. 1096.</ref>
 
==அகழாய்வுச் சான்றுகள்==
வரிசை 25:
*குறிப்பேடு
 
இசுரயேலின் கடவுளாகிய யாவேயின் உறைவிடமாக முதலில் கருதப்பட்டது "உடன்படிக்கைப் பேழை" ஆகும். அது "திரு உறைவிடத்தின்" உள்ளே சந்திப்புக் கூடாரத்தில் வைக்கப்பட்டது. இசுரயேலின் பல பிரிவுகளை ஒன்றிணைத்தபின் தாவீது அரசர் உடன்படிக்கைப் பேழையைத் தம் புதிய தலைநகராகிய [[எருசலேம்|எருசலேமுக்குக்]] கொண்டு வந்தார். அங்கு ஒரு கோவில் கட்டியெழுப்புவதும் அக்கோவிலின். உள்ளே உடன்படிக்கைப் பேழையை வைப்பதும் அவருடைய எண்ணமாய் இருந்தது. இவ்வாறு உடன்படிக்கைப் பேழைக்கு நிலையான உறைவிடம் அளிக்க விரும்பிய தாவீது, கோவில் கட்டுவதற்காகப் "போரடிக்கும் களம் இருக்கும் இடத்தை விலைக்கு வாங்கினார்" (1 குறிப்பேடு 21:18-24).
 
ஆனால், தமக்குக் கோவில் கட்டுவது தாவீது அல்ல, தாவீதின் மகனாகிய சாலமோனே அக்கோவிலைக் கட்டுவார் என்று யாவேக் கடவுள் தாவீதிடம் கூறினார். கீழ்வரும் விவிலியப் பகுதிகள் சாலமோன் கட்டிய கோவில் பற்றிய விவரங்களைத் தருகின்றன:
வரிசை 34:
==கோவில் கட்ட ஏற்பாடுகள்==
 
சாலமோன் மன்னர் தீர் நாட்டு மன்னராகிய ஈராம் என்பவரை அணுகி, கோவில் கட்டத் தேவையான கேதுரு மரங்கள், கட்டடக் கலைஞர்கள் வேண்டுமென்று கேட்டுப் பெற்றார். ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை வைப்பதற்கென்று கோவிலின் உட்புறத்தில் "கருவறையை" அவர் அமைத்தார் (காண்க: 1 அரசர்கள் 6:19). கடவுள் மக்களுக்குக் கொடுத்த கட்டளைகள் எழுதப்பட்ட இரு கற்பலகைகள் உடன்படிக்கைப் பேழையின் உள் இருந்தன. இவ்வாறு, சாலமோன் "கடவுள் என்றென்றும் தங்கி வாழ உயர் இல்லம் ஒன்றை அவருக்காகக் கட்டினார்"; அக்கோவிலை அர்ப்பணம் செய்தார் (காண்க: 1 அரசர்கள் 1 அரசர்கள் 8:14-21).
 
சாலமோன் கட்டிய கோவில் எங்கே இருந்தது என்பதைத் துல்லியமாக அறிய இயலவில்லை. இன்று "பாறைக் குவிமாடம்" (''Dome of the Rock'') என்று அழைக்கப்படுகின்ற "கோவில் மலை" (''Temple Mount'') பகுதியில் அக்கோவில் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அம்மலை எங்கே இருந்தது என்பது குறித்து இரு கருத்துகள் உள்ளன. இன்று பொன்முலாம் பூசப்பட்டு விளங்குகின்ற குவிமாடத்தின் கீழே உள்ள பாறை இருக்கும் இடத்தில் சாலமோன் கோவிலின் கற்பீடம் இருந்தது என்பது ஒரு கருத்து. மற்றொரு கருத்துப்படி, சாலமோன் கோவிலின் திருத் தூயகம் மேற்கூறிய பாறையின் மேல் அமைந்திருந்தது.
 
அண்மையில் இன்னொரு கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சாலமோன்சாலமோனின் கோவில் பாறைக் குவிமாடத்திற்கும் பொன்முலாம் பூசப்பட்ட குவிமாடத்திற்கும் இடையே இருந்திருக்கலாம்.<ref>[http://www.meridianmagazine.com/sci_rel/080815temple.html New Proposed Location for Solomon's Temple]</ref>
 
==2 அரசர்கள் நூல்==
 
கிமு 9ஆம் நூற்றாண்டில், யூதா அரசர் யோவாசு காலத்தில் சாலமோனின் கோவில் சீரமைக்கப்பட்டது. அதற்காக மக்களிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்டது (காண்க: 2 அரசர்கள் 12:4-16).
 
ஆனால், இசுரயேல் அரசன் யோவாசு "ஆண்டவரின் இல்லத்திலும் அரசமாளிகையின் கருவூலங்களிலும் காணப்பட்ட எல்லாப் பொன்னையும், வெள்ளியையும் தட்டுமுட்டுச் சாமான்கள் அனைத்தையும் கவர்ந்து கொண்டார்" (2 அரசர்கள் 14:14). இது நடந்ததது கிமு 8ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆகும்.
 
யூதா அரசன் ஆகாசு கிமு 8ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கோவில் கருவூலத்தைக் கொள்ளையடித்தார். 2 அரசர்கள் 16:8 கூறுவதுபோல, "ஆகாசு ஆண்டவரின் இல்லத்திலும் அரண்மனைக் கருவூலங்களிலும் இருந்த பொன்னையும் வெள்ளியையும் எடுத்து அசீரிய மன்னனுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்தார்."
 
அசீரிய மன்னனின் விருப்பத்துக்கு இணங்க, ஆகாசு மன்னன் சாலமோனின் கோவிலில் பல மாற்றங்களைப் புகுத்தினார். ஆனால் அவை விவிலிய ஆசிரியருக்கு ஏற்புடையனவாக இல்லை (காண்க: 2 அரசர்கள் 16:10-18).
 
==யூதா அரசர் எசேக்கியா காலத்தில் சாலமோனின் கோவில்==
 
யூதா அரசர் எசேக்கியா கிமு 715இல் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். அவரது ஆட்சியிலும் எருசலேம் கோவில் முக்கிய இடம் பெற்றது. மக்கள் சிலைவழிபாட்டில் ஈடுபடா வண்ணம் எசேக்கியா தடுத்தார்.<ref>Peter J. Leithart, 1&2 Kings, Brazos Theological Commentary on the Bible p. 254 (2006).</ref>
 
எசேக்கியா காலத்தில் அசீரிய மன்னன் சனகெரிபு (''Sennacherib'') எருசலேமை முற்றுகையிட வந்தபோது எசேக்கியா கோவில் கருவூலத்தைச் சூறையாடி அசீரிய மன்னனுக்குப் பரிசுகள் கொடுக்கவில்லை; மாறாக, அவர் கடவுளின் இல்லமாகிய கோவிலுக்கு சென்று இறைவேண்டல் நிகழ்த்தினார்.(2 அரசர்கள் 18:23; 19:1; 19:1-14).<ref>Peter J. Leithart, 1&2 Kings, Brazos Theological Commentary on the Bible p. 258 (2006).</ref>
 
==யூதா அரசன் மனாசே காலத்தில் சாலமோனின் கோவில்==
 
கடவுள் முன்னிலையில் நேர்மையாக நடந்துகொண்ட எசேக்கியா மன்னரின் மகன் மனாசே தம் தந்தையைப் போல நடக்காமல், எருசலேம் கோவிலில் பிற தெய்வங்களின் சிலைகளை நிறுவினார். "தொழுகை மேடுகளை" கட்டியெழுப்பினார் (2 அரசர்கள் 21:3-7; 4-9). முற்காலத்தில் சாலமோனும் இவ்வாறே யாவேக் கடவுளுக்குப் பிரமாணிக்கமாய் இராமல் தவறு செய்தார் (காண்க: 1 அரசர்கள் 11:7).
 
தொழுகை மேடுகள் கட்டலாகாது என்னும் தடையை (காண்க: இணைச் சட்டம் 12) மீறிய சாலமோனுக்கு அளிக்கப்பட்ட தண்டனை, அவர்தம் அரசு தெற்கு மேற்கு என்று இரண்டாகப் பிளவுபடும் என்பதாகும். மனாசே செய்த தவற்றுக்குத் தண்டனை மக்கள் நாடுகடத்தப்படுவர் என்பதாகும்.<ref>Peter J. Leithart, 1&2 Kings, Brazos Theological Commentary on the Bible p. 263 (2006).</ref>
 
==மனாசே அரசரின் பேரன் யோசியா காலத்தில் சாலமோனின் கோவில்==
 
கிமு சுமார் 621ஆம் ஆண்டில் மனாசே அரசனின் மகன் ஆமோனுக்கு மகனாகப் பிறந்த யோசியா என்பவர் எருசலேம் கோவிலிலிருந்து பிற சமய வழிபாட்டுப் பொருள்களையெல்லாம் அகற்றினார் (2 அரசர்கள் 22:3-19; 23:11-12). எருசலேமில் மட்டுமே வழிபாடு நிகழும் என்னும் சட்டத்தையும் யோசியா கொண்டுவந்தார்.
 
==நெபுகத்னேசர் எருசலேம் கோவிலைச் சூறையாடியது==
 
கிமு சுமார் 598ஆம் ஆண்டில், யோயாக்கின் அரசரின் குறுகிய ஆட்சியின் போது, பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் எருசலேமை முற்றுகையிட்டுத் தாக்கினார்.
 
பத்தாண்டுகளுக்குப் பிறகு நெபுகத்னேசர் மீண்டும் எருசலேமை முற்றுகையிட்டார். 30 மாதங்களுக்குப் பிறகு நகரச் சுவர் தகர்க்கப்பட்டதும் கிமு 587இல் எருசலேம் கோவிலும், அதோடு நகரத்தின் பெரும்பகுதியும் தீக்கு இரையாயின (2 அரசர்கள் 25).
 
==சாலமோன் கோவிலின் கட்டட அமைப்பு==
[[File:SolomonsTemple.png|thumb|right|300px|விவிலிய அடிப்படையில் சாலமோனின் கோவில் தோற்ற வரைவு.]]
மெசபொத்தாமியாவிலும் பண்டைய எகிப்திலும் பெனீசியர் காலத்திலும் இருந்த கோவில்களின் அமைப்பு அகழ்வாய்வுகள் வழியாகத் தெரிகிறது. ஆனால், அவற்றுள் எந்த ஒரு கோவிலையும் அப்படியே தழுவாமல், ஆனால் பலவற்றிலிருந்தும் பல அம்சங்களைத் தெரிந்து, அவற்றை இசைவுறப் பொருத்தி சாலமோன் கோவில் கட்டப்பட்டது.
==ஆதாரங்கள்==
 
சாலமோன் கோவிலின் பொது கட்டட அமைப்பு எகிப்து திருத்தலங்களின் அமைப்பைப் பெருமளவு ஒத்திருக்கிறது.<ref name=Finkelstein>''[[The Bible Unearthed]]'' என்னும் நூலை எழுதிய Finkelstein என்பவர் கருத்துப்படி, சாலமோனின் கோவிலின் அமைப்பு அக்காலத்து பெனீசிய கோவில்களைப் பெரிதும் ஒத்துள்ளது. பெனீசியர் வரைந்த வரைவைக் கொண்டு சாலமோனின் கோவில் கட்டப்பட்டிருக்கலாம் என்று அகழ்வாய்வுச் சான்றுகள் உள்ளன.</ref>
 
==சாலமோனின் கோவில் கட்டடத் தோற்றம் பற்றிய ஊகம்==
 
அக்காலத்தில் எழுப்பப்பட்ட சாலமோனின் கோவில் எவ்வாறு தோற்றமளித்திருக்கும் என்பதை நிர்ணயிக்க நமக்குத் துணையாக இருப்பவை விவிலியத்திலிருந்து அக்கோவில் பற்றிக் கிடைக்கின்ற செய்திகளும், பெனீசிய கோவில்கள் பற்றிய அகழ்வாய்வு ஆதாரங்களிலிருந்து மறுவமைப்பு செய்யக்கூடுமான ஊகங்களும் ஆகும். விவிலிய ஆசிரியர்கள் கட்டடக் கலை அல்லது பொறியியல் வல்லுநர்கள் அல்ல என்பதால் விவிலியத்திலிருந்து கட்டட நுணுக்கம் பற்றிய தகவல்கள் எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், அவர்கள் சாலமோனின் கோவில் பற்றிக் குறித்துள்ள திட்டம் மற்றும் அளவைகளை அடிப்படையாகக் கொண்டு, பண்டைய கோவிலைப் போல பிற்காலத்தில் பல கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.
 
சாலமோனின் கோவில் கட்டடத் தோற்றம் வெவ்வேறு முறைகளில் மறுபதிவு (''reconstruction'') செய்யப்பட்டுள்ளது. கீழே தரப்படும் மறுபதிவு ''Easton's Bible Dictionary'', மற்றும் ''Jewish Encyclopedia'' என்னும் நூல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
 
==சாலமோனின் கோவில் "கருவறை"==
 
''Kodesh Hakodashim'' (''Holy of Holies'') என்பது கோவிலின் மிகத் தூய்மையான பகுதியைக் குறிக்கும். அது "கருவறை" என்னும் பெயருடையது (1 அரசர்கள் 6:19). "உட்பகுதி" (''Inner House'') என்னும் பெயராலும் அது அழைக்கப்படும் (1 அரசர்கள் 6:27). "திருத் தூயகம்" என்பதும் அதன் பெயர் (1 அரசர்கள் 8:6).
 
கருவறை மற்றும் கோவிலின் பிற பகுதிகளின் அளவைகள் ''cubit'' அலகு அடிப்படையில் கணக்கிடப்பட்டன. ஒரு ''cubit'' என்பது அரசர் காலத்தில் 52.5 செ.மீ.க்கு இணை. இதைத் தமிழ் விவிலியம் "முழம்" என்று பெயர்க்கிறது.
 
சாலமோனின் கோவில் கருவறையின் அளவைகள்: நீளம் = 20 முழம்; அகலம் = 20 முழம்; உயரம் = 20 முழம் (காண்க: 1 அரசர்கள் 6:20). அது பத்து முழம் உயரமான ஒரு மேடையில் நிறுவப்பட்டது. கருவறையின் கீழ்த்தளமும் அதன் சுற்றுச்சுவர் மச்சு வரையான பகுதியும் லெபனான் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட விலையுயர்ந்த கேதுரு மரத்தால் ஆனவை. கருவறையின் அடிப்பகுதியும் உட்பகுதியும் பசும்பொன் தகடுகளால் மூடப்பட்டிருந்தன (1 அரசர்கள் 6:21,30).
 
கருவறையில் ஒலிவ மரத்தால் ஆன, பத்து முழ உயரமான இரு கெருபுகள் (வானதூதர் போன்ற சிலை) வைக்கப்பட்டன. ஒவ்வொரு கெருபின் இறக்கை நீளம் ஐந்து முழம். அவை அருகருகே நின்றதால் அவற்றின் இறகுகள் கருவறையின் சுவர்களை இருபுறமும் தொட்டும், நடுவில் தொட்டும் இருக்குமாறு அமைந்தன (1 அரசர்கள் 6:23-28).
 
கருவறையின் நுழைவாயிலுக்கு இரட்டைக் கதவும் ஐங்கோண வடிவத்தில் கதவு நிலையும் நிறுத்தப்பட்டன. அவையும் தங்கத் தகடுகளால் மூடப்பட்டன (2 குறிப்பேடு 4:22). நீலம், ஊதா, கருஞ்சிவப்பு, மெல்லிய சணல் ஆகிய நூல்களினால் நெய்யப்பட்ட ஒரு திரை தொங்கவிடப்பட்டது (2 குறிப்பேடு 3:14). கருவறைக்கு சாளரங்கள் இல்லை (காண்க: 1 அரசர்கள் 8:12). அது "கடவுள் தங்கி வாழும்" இடம் என்ற வணக்கத்துக்குரிய தலம் ஆனது.
 
கருவறையில் தொங்கிய திரைச்சீலையின் நிறங்களும் பொருளுடைத்தன. நீலம் வானத்தைக் குறிக்கவும், கருஞ்சிவப்பு பூமியைக் குறிக்கவும், அவ்விரு நிறங்களின் கலப்பாகிய ஊதா விண்ணகமும் மண்ணகமும் சந்திப்பதைக் குறிக்கவும் அடையாளமாயின.
 
==குறிப்புகள்==
{{Reflist|2}}
==மூலங்கள்==
*{{cite journal |last=Draper |first=Robert |year=2010 |month=Dec. |title=Kings of Controversy |journal=National Geographic |volume= |issue= |pages=66–91 |publisher= |doi= |issn=0027-9358 |url=http://ngm.nationalgeographic.com/2010/12/david-and-solomon/draper-text |accessdate=2010-12-18 |ref=DRAPER_2010 }}
*{{Cite book|first=Israel |last=Finkelstein|coauthors=Neil Asher Silberman|title=David and Solomon: In Search of the Bible's Sacred Kings and the Roots of the Western Tradition|publisher=Free Press|year=2006|isbn=0-7432-4362-5 }}
*{{Cite book|first=Israel |last=Finkelstein|coauthors=Neil Asher Silberman|title=The Bible Unearthed: Archaeology's New Vision}}
* [[Benjamin Mazar]], ''The Mountain of the Lord'' (Doubleday, NY, 1975) ISBN 0-385-04843-2.
* [[Roland De Vaux]] (tr. John McHugh), ''Ancient Israel: Its Life and Institutions'' (NY, McGraw-Hill, 1961).
* Goldman, Bernard, ''The Sacred Portal: a primary symbol in ancient Judaic art'', Detroit : Wayne State University Press, 1966. It has a detailed account and treatment of Solomon's Temple and its significance.
* Young, Mike, ''Temple Measurements and Photo recreations'' [http://www.solomonstemple.com/the-temple/]
* [[William J. Hamblin|Hamblin, William]] and [[David Seely]], ''Solomon's Temple: Myth and History'' (Thames and Hudson, 2007) ISBN 0500251339
==மேல் ஆய்வுக்கு==
;21ஆம் நூற்றாண்டு ஆதாரங்கள்
* [[Margaret Barker]], "Temple Theology", London: SPCK 2004 (ISBN 028105634X)
* Andrew G. Vaughn, Ann E. Killebrew (eds), "[http://books.google.com.kh/books?id=yYS4VEu08h4C&pg=PT15&lpg=PT15&dq=Jerusalem+in+Bible+and+archaeology:+the+First+Temple+period++By+Andrew+G.+Vaughn,+Ann+E.+Killebrew&source=bl&ots=9n2IdXe40E&sig=EQNLjOihIUzjfhYLqbi_V6LYyQY&hl=km&ei=6St2S8SxKpHm7AOW8cmlCA&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CAYQ6AEwAA#v=onepage&q=&f=falseJerusalem in Bible and Archaeology: The First Temple Period]" (Society of Biblical Literature, 2003)
* Marty E. Stevens, "[http://books.google.com.kh/books?id=0P9gcFR1MSAC&printsec=frontcover&dq=Temples,+tithes,+and+taxes:+the+temple+and+the+economic+life+of+ancient+Israel&source=bl&ots=WuEy5YYD3W&sig=j021Sn-F4b0XPkF4w4PsHACr0iI&hl=km&ei=eYx3S8n8HozY7AOUsJGoCA&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CAYQ6AEwAA#v=onepage&q=&f=false Temples, Tithes and Taxes: The Temple and the Economic Life of Ancient Israel] (Hendrickson, 2006)
* William G. Dever, "[http://books.google.com.kh/books?id=6-VxwC5rQtwC&dq=What+did+the+biblical+writers+know,+and+when+did+they+know+it%3F&printsec=frontcover&source=bn&hl=km&ei=K9h4S5ihLZLc7APo_4miBg&sa=X&oi=book_result&ct=result&resnum=4&ved=0CBMQ6AEwAw#v=onepage&q=&f=false What Did The Biblical Writers Know and When Did They Know It]?" (Eerdman's, 2001)
* Floyd Nolen Jones, "[http://books.google.com.au/books?id=ZkBasQYRy4sC&pg=PA114&lpg=PA114&dq=Albright+biblical+chronology&source=bl&ots=VtWfDXqJjV&sig=nJ9g-S8-1nyDGsndD07aGrZW9Fo&hl=en&ei=2qDrTKOmKJOfcZLfvMcP&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CCIQ6AEwAQ#v=onepage&q=Albright%20biblical%20chronology&f=false The Chronology Of The Old Testament]" (New Leaf Publishing Group, 1993-2004)
 
;1945க்குப் பிற்பட்ட ஆதாரங்கள்
* Elizabeth Bloch-Smith, ''[http://books.google.com.kh/books?id=2nHLqnmLNckC&printsec=frontcover&dq=Scripture+and+other+artifacts:+essays+on+the+Bible+and+archaeology+in+honor&source=bl&ots=NVcOC0TVJC&sig=WdOXzpya-SGwtl-apyHP1JDxkCo&hl=km&ei=TtB4S5rlEJLm7AOvq-CmCA&sa=X&oi=book_result&ct=result&resnum=3&ved=0CA0Q6AEwAg#v=onepage&q=&f=false Who is the King of Glory?: Solomon's Temple and its Symbolism]'' in Michael D. Coogan, J. Cheryl Exum, Lawrence E. Stager (eds), "Scripture and Other Artifacts: Essays in Honor of Philip J. King" (Westminster John Knox, 1994)
*Gershon Galil, "[http://books.google.com.kh/books?id=QkgEaWG0_j4C&printsec=frontcover&dq=The+chronology+of+the+kings+of+Israel+and+Judah&source=bl&ots=KKvWtIBRpi&sig=VTibCqutlNABmLvwnjlGRfF_HRo&hl=km&ei=PxF6S-HuKIHg7AOLhOTSDA&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CBQQ6AEwBA#v=onepage&q=&f=false The Chronology of the Kings of Israel and Judah]" (Brill, 1996)
* Joseph Blenkinsopp, "[http://books.google.com.au/books?id=dRsIy5OAsm4C&pg=PA104&lpg=PA104&dq=Blenkinsopp+chronology+temple&source=bl&ots=1H8DubtNN2&sig=y9qnCW2A2dqpS5K4eGPIcr8YYoI&hl=en&ei=h5_rTMO4GoqmcNz13foO&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CBkQ6AEwAQ#v=onepage&q&f=false Sage, Priest, Prophet: Religious and Intellectual Leadership in Ancient Israel]" (Westminster John Knox Press, 1995)
*Jeremy Hughes, "[http://books.google.com.au/books?id=vPg2cvQLwHAC&printsec=frontcover&dq=Hughes+Secrets+times&source=bl&ots=D30R2BtXzA&sig=--KYKSl5xBEDWxtSDsQGJnPzoE8&hl=en&ei=bKDrTOS-D4m3cJ62sIwP&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CBUQ6AEwAA#v=onepage&q&f=false Secrets of the times: myth and history in biblical chronology]" (Sheffield Academic Press, 1990)
*Edwin R. Thiele, "[http://books.google.com.au/books?id=Wx4GsZH3dzAC&printsec=frontcover&dq=The+Mysterious+Numbers+of+the+Hebrew+Kings&source=bl&ots=GMi9xRxZEn&sig=LQEraVzOmYg87Q2DcWdSCuTEueM&hl=en&ei=iKHrTLbUOs7Icd-R2YwP&sa=X&oi=book_result&ct=result&resnum=4&ved=0CDkQ6AEwAw#v=onepage&q&f=false The Mysterious Numbers of the Hebrew Kings]" (Zondervan, 1983)
* Watson E. Mills, Roger Aubrey Bullard (eds), "[http://books.google.com.au/books?id=goq0VWw9rGIC&pg=PA148&lpg=PA148&dq=Mercer+Dictionary+Bible+chronology&source=bl&ots=D1FXgWYT2Z&sig=ah1a23KgGaTgY5BrPwAHx-FiSWE&hl=en&ei=bqLrTPj_KsLXcZnIlckP&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CBkQ6AEwAA#v=onepage&q=Mercer%20Dictionary%20Bible%20chronology&f=false Mercer dictionary of the Bible]" (Mercer University Press, 1990)
 
;1945க்கு முற்பட்ட ஆதாரங்கள்
* Paine, T. O. (1870). S [http://books.google.com/books?id=9xZBVIIWamoC olomon's temple: Including the tabernacle; first temple; house of the king, or house of the forest of Lebanon; idolatrous high places; the city on the mountain ... the oblation of the holy portion; and the last temple]. Boston: H.H. & T.W. Carter
 
[[பகுப்பு:யூதம்]]
"https://ta.wikipedia.org/wiki/சாலமோனின்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது