24 மனை தெலுங்குச்செட்டியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
[[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] வீழ்ச்சிக்குப் பிறகு, தஞ்சாவூரும் மதுரையும் நாயக்க மன்னர்கள் வசம் வந்தது. இந்த சமயம் [[தெலுங்கு]] பேசும் [[திராவிடர்|திராவிட]] இனமக்கள் பலர் மதுரை, தஞ்சாவூர்,கோவை போன்ற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வரத்தொடங்கினர். இப்படி வந்தவர்களில் ஒரு பிரிவினர்தான் 24 மனை தெலுங்குச் செட்டியார்கள். இவர்கள் வீட்டில் தெலுங்கு மொழியில் பேசினாலும், தமிழ்ப் பண்பாட்டில் 24 மனை தெலுங்குச் செட்டியார்களின் வாழ்வியல் முறையும், கலாச்சாரமும் பிரிக்க முடியாத ஒன்றாகி விட்டது. இவர்கள் தங்கள் குல தெய்வமாக காமாட்சி அம்மனை வழிபடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஞாயிறு அன்று காஞ்சியில் இச்சமூகத்தின் சார்பில் ஆராதனை விழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. [[தமிழ்நாடு]] முழுக்க இச்சமூகத்தினர் பரவி இருக்கிறார்கள் என்றாலும் [[மதுரை]], [[தேனி]], [[திருச்சி]], [[கோயம்புத்தூர்]], [[திருநெல்வேலி]], [[இராமநாதபுரம்]] மற்றும் [[சென்னை]] பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு உள்ளனர். இவர்கள் [[தமிழ்நாடு அரசு]] வெளியிட்டுள்ள [[தமிழ்நாடு சாதிகள் பட்டியல்|தமிழ்நாடு சாதிகள் பட்டியலில்]] பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
 
==திருமண உறவுமுறை மற்றும் குலதெய்வ வழிபாடு ==
 
24 மனை தெலுங்குச் செட்டியார்களில் 24 மனை என்பது 24 கோத்திரத்தைக் குறிப்பிடுகிறது. இதில்சிலர் 8வீடு கோத்திரம்என்றும் பெண்குறிப்பிடுவார்கள். வீடு என்றும்இதில் 16 கோத்திரம்(பதினாறு) கோத்திரங்கள் ஆண் வீடு என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.8 இந்த(எட்டு) இருகோத்திரங்கள் பிரிவுகளுக்கிடையேபெண் திருமணவீடு உறவுஎன்றும் வைத்துக் கொள்கிறார்கள்வகைப்படுத்தபட்டுள்ளன. ஒரே பிரிவில் இருப்பது சகோதர உறவாக கொள்ளப்பட்டுள்ளது. இச்சமூகத்தின் தலைவர் பெரியதனத்தார், நாட்டாமை அல்லது சாதித் தலைவர் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தலைமையில்தான் இச்சாதியினரின் திருமணங்கள் நடத்தப்படுகின்றன.
 
16 ஆண் வீடு கோத்திரங்கள்: 1 மும்முடியர் 2. கோலவர் (கோலயவர்) 3. கணித்தியவர் 4. தில்லையவர் 5. பலிவிரியர் 6. சென்னையவர் 7. மாதளையவர் 8. கெந்தவங்கவர் 9. ராஜபைரவர் 10. வம்மையர் 11. கப்பவர் 12. தரிசியவர் 13. வஜ்யவர் 14. கெந்தியவர் 15. நலிவிரியவர் 16. சுரயவர்
 
8 பெண் வீடு கோத்திரங்கள்: 1. மக்கடையார் 2. கொரஹையவர் 3. மாரட்டையர் 4. ரெட்டையர் (கவலையர் / ரெக்கையர்) 5. பில்லிவங்கவர் 6. தவ்ளையர்
7. சொப்பியர் 8. லொட்டையவர்
 
இந்த சமூகத்தினர் 16 வீடு மற்றும் 8 வீடு ஆகிய இந்த இரு பிரிவுகளுக்கிடையே திருமண உறவு வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் 16 (ஆண்) வீட்டைச்சேர்ந்த கோத்திரப் பிரிவினர் தங்களுக்குள் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை. அது போல 8 (பெண்) வீட்டைச்சேர்ந்த பிரிவினரும் தங்களுக்குள் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை. இதன் காரணம் ஒரே பிரிவில் இருப்பவர்கள் சகோதர உறவாக கருதப்படுவதே ஆகும்.
 
இச்சமூகத்தின் தலைவர் பெரியதனத்தார், நாட்டாமை, செட்டுமை அல்லது சாதித் தலைவர் என்று அழைக்கப்படுகின்றனர். பல கிராமங்களில் இவர்கள் தலைமையில் இச்சாதியினரின் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். நகர்ப்புறங்களில் அவ்வழக்கம் கிடையாது.
 
24 மனை தெலுங்குச் செட்டியார்களின் குலதெய்வ வழிபாடு கூட அவரவர் கோத்திர அடிப்படையிலேயே அமைந்துள்ளது. ஒவ்வொரு கோத்திரத்தாரும் தங்களுக்குள் ஒரு தெய்வத்தை குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு, அத்தெய்வத்துக்கு சொந்தமாக ஒரு கோவிலையும் அமைத்துக் கொண்டுள்ளார்கள். சிவன், பெருமாள், காமாட்சியம்மன், அங்காள பரமேஸ்வரி, காளியம்மன், குங்குமகாளியம்மன், வீரமாத்தியம்மன், மதுரைவீரன் ஆகிய தெய்வங்கள் பல கோத்திரத்தவரின் குலதெய்வங்கள் ஆகும்.
 
== சமூகப் பிரமுகர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/24_மனை_தெலுங்குச்செட்டியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது