முதலாம் ஸ்தேவான் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
சி திருத்தம்
வரிசை 14:
feast_day=ஆகத்து 2|
other=ஸ்தேவான்|}}
'''திருத்தந்தை முதலாம் ஸ்தேவான்''' (''Pope Saint Stephen I'') உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் 254 மே 12ஆம் நாளிலிருந்து 257 ஆகத்து 2ஆம் நாள் வரை ஆட்சி செய்தார்.<ref>[http://en.wikipedia.org/wiki/Pope_Stephen_I திருத்தந்தை முதலாம் ஸ்தேவான்]</ref>அவருக்கு முன் பதவியிலிருந்தவர் [[முதலாம் லூசியஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை முதலாம் லூசியஸ்]] ஆவார். திருத்தந்தை முதலாம் ஸ்தேவான் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க திருச்சபையின்]] 23ஆம் திருத்தந்தை ஆவார்.
 
*ஸ்தேவான் என்னும் பெயர் ({{lang-grc|Στέφανος}}; {{lang-la|Stephanus}}) கிரேக்கத்தில் "முடிசூடியவர்" என்று பொருள்படும். கத்தோலிக்க தமிழ் வழக்கில் "முடியப்பர்" என்று வரும்.
வரிசை 20:
==பிறப்பு==
 
திருத்தந்தை முதலாம் ஸ்தேவான் [[உரோமை|உரோமையில்]] பிறந்தவர் என்றாலும், அவருடைய பூர்விகம் கிரேக்க நாடு என்று கருதப்படுகிறது. அவர் முதலில் [[முதலாம் லூசியஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை லூசியசின்]] கீழ் உயர்திருத்தொண்டராக (''Archdeacon'') பணியாற்றினார். பின்னர் 254இல் உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு முன் பதவியிலிருந்த [[திருத்தந்தை]] முதலாம் லூசியஸ் நாடுகடத்தப்பட்டு இறப்பதற்கு முன் உரோமைத் திருச்சபையை இவரிடம் ஒப்படைத்தார் என்று "திருத்தந்தையர் நூல்" (''Liber Pontificalis'') தரும் செய்திக்குத் தகுந்த வரலாற்று அடிப்படை இல்லை என்று அறிஞர் கருதுகின்றனர்.
 
==திருமுழுக்கு அளிப்பது பற்றிய பிரச்சினை==
 
[[ஆப்பிரிக்கா]] மற்றும் [[ஆசியா|சிறு ஆசியா]] பகுதிகளில் ஒரு பிரச்சினை எழுந்தது. அதாவது, [[கிறித்தவம்|கிறித்தவ]] நம்பிக்கையை முழுமையாக ஏற்காமல் தப்பறைக் கொள்கைகளைத் தழுவியவர்கள் [[திருமுழுக்கு]] அளிக்கலாமா என்னும் சர்ச்சை கிளம்பியது. அத்தகையோர் [[திருமுழுக்கு]] அளித்தால் அதனால் பயனில்லை என்றும், அவ்வாறு [[திருமுழுக்கு]] பெற்றவர்களுக்கு மீண்டும் முறையான விதத்தில் திருமுழுக்கு அளிக்க வேண்டும் என்றும் சிலர் வாதாடினர். வட ஆப்பிரிக்க கார்த்தேஜ் நகர் ஆயராக இருந்த இறையியல் வல்லுநரான சிப்பிரியான் (இறப்பு: 258) இக்கருத்தை ஆதரித்தார்.
 
ஆனால் திருத்தந்தை முதலாம் ஸ்தேவான் ஆயர் சிப்பிரியானின் கருத்தை ஏற்கவில்லை. இதனால் இருவருக்கிடையே மோதல் ஏற்பட்டது. சில ஆயர்கள் சிப்பிரியானின் கருத்துக்கும் வேறு சிலர் ஸ்தேவானின் கருத்துக்கும் ஆதரவு தெரிவித்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_ஸ்தேவான்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது