'''தமிழகப் [[பழங்குடிகள்]]''' [[தமிழ்நாடு|தமிழ் நாட்டு]] மக்கள் தொகையில் 3.5% உள்ளனர் (2001 கணக்கெடுப்பு). தமிழக்த்தில்தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட வெவ்வேறு [[பழங்குடிகள்]] உள்ளனர். [[இருளர்]], [[காடர்]], [[குறும்பர்]], [[தோடர்]] போன்றோர்கள் பழங்குடிகளில் சிலர். தமிழ் நாட்டில் 30 மாவட்டங்களில் பழங்குடிகள் வாழ்கிறார்கள். பழங்குடிகள் பெரும்பாலும் காடும்[[காடு]]ம் காடுசார்ந்த நிலங்களிலும் வாழ்கின்றனர். இவர்கள் பணம் சார்ந்த பொருளாதாரத்தை அதிகமாக பயன்படுத்துவதில்லை. இவர்கள் தங்களுக்கென தனி மொழியும், குடும்ப மற்றும் குமுகப் (சமூகப்) பழக்க வழக்கங்களையும் கொண்டவர்கள். பெரும்பாலோருடை மொழிகள் தமிழுடன்[[தமிழ்|தமிழு]]டன் நெருங்கிய தொடர்புடையது என்றும் [[திராவிட மொழி]]க் குடும்பத்தைச் சேர்ந்ததென்றும் அறிஞர்கள் கருதுகிறார்கள். முதன் முதல் எட்கர் தர்ஸ்டன் என்பாரும், பின்னர் அனந்த கிருஷ்ண அய்யர், முனைவர் அய்யப்பன் போன்றோரும் பழங்குடிகளை பற்றிய ஆய்வுகள் செய்துள்ளனர்.