'''சிங்கம்புணரி''' ([[ஆங்கிலம்]]:Singampunari), இது [[இந்தியா|இந்தியாவின்]][[தமிழ்நாடு]] [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இதன் ஊராட்சி ஒன்றியத்தில் 30 ஊராட்சிகள் உள்ளன.<ref>http://tnmaps.tn.nic.in/district.php?dcode=23</ref>
மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை வட்டார வழக்குகள் கலந்த இவ்வூர் கிராமியத்தோடு கூடிய நகரமாக விளங்குகிறது.விவசாயம் முதல் தொழிலாகவும், பனை மற்றும் தென்னை சார்ந்த தொழில்கள் பணத்தொழில்களாகவும் விளங்குகின்றன. நிலக்கடலை அதிகம் விளைவதால் இவ்வூரில் எண்ணெய் ஆலைகள் மிகுதியாக உண்டு. சிங்கம்புணரிக்கு நெடிய இலக்கிய வரலாறு உண்டு. இவ்வூரின் பெருமையைச் சிங்காபுரிப் பள்ளு என்னும் இலக்கியம் தெளிவுற விளக்குகிறது. ஸ்ரீசேவுகமூர்த்தி ஐயனார் கோயில், ஸ்ரீ சித்தர் முத்துவடுகேசர் கோயில் ஆகியன இங்கு புகழ் மிக்கவையாகும்.