பி. கே. பரமேசுவரன் நாயர்

மலையாள இலக்கியவாதி

பி.கே. பரமேஸ்வரன் நாயர் (P. K. Parameswaran Nair) (1903-1988) இவர் ஓர் சுயசரிதையாளரும், விமர்சகரும், கட்டுரையாளரும், இலக்கிய வரலாற்றாசிரியரும் ஆவார். இவர் மலையாள இலக்கிய வரலாற்றை எழுதினார். [1] மகாத்மா காந்தியின் சுயசரிதை எழுதுவதிலும் இவர் பெயர் பெற்றவராவார். [2]

படைப்புகள் தொகு

இவர் ஒரு சுயசரிதையாளராகவும், விமர்சகராகவும், கட்டுரையாளராகவும், இலக்கிய வரலாற்றாசிரியராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ச. வே. இராமன் பிள்ளையை, 'சாகித்யபஞ்சனன்' பற்றிய வாழ்க்கை வரலாறுகளை இவர் எழுதியுள்ளார். அவை மலையாளத்தின் இலக்கிய தலைசிறந்த படைப்புகளாக விளங்குகின்றன. மேலும் மகாத்மா காந்தியை பற்றிய இவர் நூலும் உன்னதமானது. இவர் வால்டேர், நெப்போலியன், போன்ற சிறந்த ஆளுமைகளை பற்றி எழுதியுள்ளார். சாகித்திய அகாதமி வெளியிட்டுள்ள இவரது 'மலையாள இலக்கிய வரலாறு' ஆங்கிலம் தவிர கிட்டத்தட்ட அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சுமார் பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் சேகரிக்கப்பட்ட பல கட்டுரைகளும் விமர்சன ஆய்வுகளும் இவரிடம் உள்ளன. சொற்களிலும் செயல்களிலும் ஒரு காந்தியவாதியான இவர், காந்திய கொள்கைகளை மக்களிடையே பரப்புவதற்காக மகத்தான சேவையைச் செய்தார். மேலும், 'கேரள காந்தி சமாரக நிதி' யுடன் அதன் பல நடவடிக்கைகளில் குறிப்பாக 'காந்திஜியின் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துக்கள்' என்ற ஏழு தொகுதிகளின் வெளியீட்டில் நெருக்கமாக தொடர்புடையவராக இருந்துள்ளார்.

நினைவு தொகு

இவரது நினைவாக 1991 ல் பரமேசுவரன் நாயர் சமாரகா அறக்கட்டளை என்ற அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டது. அறக்கட்டளை அதன் கடந்த இருபத்தி எட்டு ஆண்டுகளின் தொடக்கத்தில் மலையாள இலக்கியத்தில் சிறந்த வாழ்க்கை வரலாற்றாசிரியருக்கு பரமேசுவரன் நாயர் சமாரக விருதையும், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25 ஆம் தேதி மலையாள இலக்கியத்தில் சிறந்த விமர்சனத்திற்கு பேராசிரியர் குப்தன் நாயர் சமாரக விருதையும் வழங்கி வருகிறது.

குறிப்புகள் தொகு

  1. https://www.amazon.com/P.-K.-Parameswaran-Nair/e/B00M7HFKCW
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2020-07-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கே._பரமேசுவரன்_நாயர்&oldid=3563184" இலிருந்து மீள்விக்கப்பட்டது