சிவகங்கை பூங்கா
சிவகங்கை பூங்கா தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் பெரிய கோயிலின் அருகே அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற பொழுதுபோக்குப் பூங்கா ஆகும்.[1]
வரலாறு தொகு
1871-72இல் தஞ்சாவூர் நகராட்சியால் பொது மக்களுக்காக இப் பூங்கா உருவாக்கப்பட்டது.[1] 11ஆம் நூற்றாண்டை சார்ந்த பிரகதீஸ்வரர் கோயிலின் கிழக்குப் பகுதி மற்றும் இதனுள் உள்ளடங்கிய சிவகங்கை குளம் அனைத்தும் அரசர் ராசராச சோழனால் கட்டப்பட்டது.ஆரம்ப காலகட்டங்களில் சரியாக பராமரிக்கப்படாததால் கூட்டம் அதிகமாகவும், காற்றோட்டம் இல்லாமாலும் காணப்பட்டது.ஆனால் தற்போது நன்கு பராமரிக்கப்படுகிறது.[1] 1994 உலக தமிழ் மாநாட்டிற்கு வழிவகுக்கும் நடவடிக்கையின் போது சிவகங்கைக் குளத்தில் மோட்டார் படகு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.[2]
வசதிகள் தொகு
சிவகங்கைப் பூங்காவில் பொம்மை ரயில், மோட்டார் படகு வசதிகள் மற்றும் சிறு விலங்கியல் தோட்டம் அமைந்துள்ளது.[3] தஞ்சாவூர் நகராட்சி நூலகம் கூட இப்பூங்காவில் அமைந்துள்ளது.[3]
மேற்கோள்கள் தொகு
உசாத்துணை தொகு
- Tourist Guide to Tamil Nadu, Chennai, Sura Maps, 2008, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7478-177-3.