சுசீலா ரோகத்கி

சுசீலா ரோகத்கி (Sushila Rohatgi) என்பவர் (21 ஆகத்து 1921-9 ஏப்ரல் 2011) இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். ரோகத்தி இந்தியத் தேசிய காங்கிரசின் தலைவராக இருந்தார்.[1] இவர் இந்திய அரசில் மத்திய அமைச்சராக இருந்துள்ளார். மதன் மோகன் மாளவியாவின் கொள்ளுப்பேத்தியான இவர், உத்தரப் பிரதேசத்திலிருந்து இரண்டு முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 1985-ல் மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Members Bioprofile Rohatgi". loksabhaph.nic.in.
  2. "Veteran Congress leader Sushila Rohtagi passes away – The Hindu". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2014-06-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசீலா_ரோகத்கி&oldid=3719476" இலிருந்து மீள்விக்கப்பட்டது