சுனில் கில்னானி

சுனில் கில்னானி (Sunil Khilnani) என்பவர் அவந்தா இருக்கை பேராசிரியராகவும் இலண்டனில் உள்ள இந்திய நிறுவன கிங்க்ஸ் கல்லூரியில் இயக்குநராகவும் உள்ளார். இவர் இந்திய வரலாறு மற்றும் அரசியல் தொடர்பான நூல்களை எழுதியுள்ளார்.[1]

பிறப்பும் கல்வியும் தொகு

தில்லியில் பிறந்த சுனில் கில்னானி ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய கண்டங்களில் வளர்ந்தார். கேம்பிரிச்சில் சமூகம் அரசியல் சார்ந்த கல்வி பயின்று முனைவர் பட்டமும் பெற்றார்.

நூல்கள் தொகு

அறிவு புலத்தின் வரலாறு, அரசியல் ஆய்வு, நவீன இந்தியாவின் வரலாறு, தற்கால இந்தியாவின் அரசியல் நிலைமை ஆகியன இவர் எழுதிய நூல்களின் கருப்பொருள்களாக உள்ளன. இந்தியா பற்றிய கருத்து, சிவில் சொசைட்டி, ரீஇன்கார்னேசன்[2] போன்ற சில நூல்களை எழுதியுள்ளார்.

விருதுகள் தொகு

இந்திய அரசு 2005 ஆம் ஆண்டில் சுனில் கில்னானிக்கு பிரவாசி பாரதிய சம்மான் விருதை வழங்கியது. 2010 இல் பெர்லின் பரிசு இவருக்குக் கிடைத்தது.

மேற்கோள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 2016-05-13.
  2. http://www.thehindu.com/opinion/interview/sunil-khilnani-we-exaggerate-the-lives-of-our-historical-subjects/article8375055.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனில்_கில்னானி&oldid=3555249" இலிருந்து மீள்விக்கப்பட்டது