செஞ்சி வட்டம்

செஞ்சி வட்டம் , தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக செஞ்சி நகரம் உள்ளது.

இந்த வட்டம் மேலக்கூர், வல்லம், சத்தியமங்கலம் மற்றும் செஞ்சி என நான்கு உள் வட்டங்களும், 166 வருவாய் கிராமங்களும் கொண்டது.[2]மேலும் இவ்வட்டத்தில் செஞ்சி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

இவ்வட்டத்தில் அனந்தபுரம் பேரூராட்சி உள்ளது.

மக்கள்தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 423,942 ஆகும். அதில் 213,509 ஆண்களும், 210,433 பெண்களும் உள்ளனர். 100,430 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 92% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 72.43% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 986 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 44361 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 934 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 94,919 மற்றும் 8,468 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.57%, இசுலாமியர்கள் 3.61%, கிறித்தவர்கள் 5.17%, சமணர்கள் .02% மற்றும் பிறர் 0.38% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செஞ்சி_வட்டம்&oldid=2986207" இலிருந்து மீள்விக்கப்பட்டது