சேனா சம்மத விக்கிரமபாகு
சேனா சம்மத விக்கிரமபாகு (Sena Sammatha Wickramabahu, சிங்களம்: සේනාසම්මත වික්රමබාහු) என்பவர் 1473ஆம் ஆண்டிலிருந்து 1511ஆம் ஆண்டு வரை கண்டி இராச்சியத்தை ஆட்சி செய்த மன்னர் ஆவார்.[1] இவரே 1469ஆம் ஆண்டில் கோட்டை இராச்சியத்துக்கு எதிராகக் கிளர்ச்சி மேற்கொண்டு கண்டி இராச்சியத்தை உருவாக்கியவர். இவரே கண்டி இராச்சியத்தின் முதல் மன்னர்.[2] இவருக்குப் பின் இவருடைய வாரிசான ஜயவீர ஆட்சிக்கு வந்தார்.
சேனா சம்மத விக்கிரமபாகு | |
---|---|
கண்டியின் அரசன் | |
ஆட்சி | 1473-1511 |
ஜயவீர |
ஆட்சிப் பிரதேசங்கள்தொகு
இவருடைய ஆட்சிக் காலத்தில் கண்டி இராச்சியத்தின் கீழ் கம்பளை, சிதுறுவான, தெநுவர, பலவிட்ட, மாத்தளை, பன்சிய பத்துவ, ஊவா முதலிய பிரதேசங்கள் இருந்து வந்தன.[3]
இவற்றையும் பார்க்கதொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ கண்டி மழை 250310 (ஆங்கில மொழியில்)
- ↑ கண்டி ராச்சியம் (சிங்களத்தில்)[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "கண்டி ராஜ்யம் (ஆங்கில மொழியில்)" (PDF). 2012-02-22 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2012-04-01 அன்று பார்க்கப்பட்டது.