சோ. பத்மநாதன்

சோ. பத்மநாதன் (பிறப்பு - செப்டம்பர் 14, 1939, சிப்பித்தறை, யாழ்ப்பாணம்) ஈழத்து எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். இவர் பலாலி ஆசிரிய கலாசாலையின் முன்னாள் (1993-1996) அதிபர். இவர் ஆபிரிக்க மற்றும் சிங்களக் கவிதைகள் பலவற்றை தமிழில் மொழிபெயர்த்தார். இவரது மொழிபெயர்புகளுக்காக 2001 ஆம் ஆண்டில் இலங்கை அரச இலக்கிய விருது இவருக்கு வழங்கப்பட்டது.

சோ. பத்மநாதன்
பிறப்புசெப்டம்பர் 14, 1939
சிப்பித்தறை, யாழ்ப்பாணம்
தேசியம்இலங்கைத் தமிழர்
கல்வியாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

இவரது நூல்கள் தொகு

  • காவடிச் சிந்து
  • வடக்கிருத்தல்
  • ஆபிரிக்கக் கவிதைகள்
  • தென்னிலங்கைக் கவிதை
  • நினைவுச் சுவடுகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோ._பத்மநாதன்&oldid=2716287" இலிருந்து மீள்விக்கப்பட்டது