ஞானப் பஃறொடை

ஞானப் பஃறொடை என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிற்றம்பல நாடிகள் என்னும் சைவ ஆசாரியரால் எழுதப்பட்டது. இந்த நூல் கிடைக்கவில்லை.

மதுரைச் சிவப்பிரகாசர் தாம் எழுதிய சிவப்பிரகாசம் 60 ஆம் பாடல் உரையில் இந்த நூலைக் குறிப்பிடுகிறார். சாத்திரக் கோவை என்னும் தொகுப்பு நூலிலும் இந்த ஞானப் பஃறொடை நூல் இல்லை. சாத்திரக் கோவை நூலில் சிற்றம்பல நாடிகள் கண்ட ‘மெய்கண்ட சாத்திர’க் கருத்துகள் பொன் போலப் போற்றப்பட்டுள்ளன. அதிலேயே இந்த நூல் இல்லை என்பது எண்ணத் தக்கது.

கருவிநூல் தொகு

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞானப்_பஃறொடை&oldid=1356447" இலிருந்து மீள்விக்கப்பட்டது