ஞா. பொன்னு பிள்ளை

ஞா. பொன்னு பிள்ளை என்பவர் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கட்சியின் சார்பில் போட்டியிட்டு தேனி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். தேனி அருகிலுள்ள உப்பார்பட்டி எனும் ஊரைச் சேர்ந்த இவர் 1991 ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் உப்பார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக பல வருடங்கள் இருந்திருக்கிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞா._பொன்னு_பிள்ளை&oldid=3174932" இலிருந்து மீள்விக்கப்பட்டது