டாக்கா மத்திய சிறை

டாக்கா மத்திய சிறை (Dhaka Central Jail) வங்காளதேசத்தின் கேரனிகஞ்ச் துணை மாவட்டத்தில் இருக்கும் ராசேந்திரபூர் கிராமம், தேகாரியா ஒன்றியத்தில் அமைந்துள்ளது. [1] 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதியன்று இச்சிறை திறக்கப்பட்டது. [2][3] டாக்கா மத்திய சிறை 31 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு 4590 சிறைக் கைதிகளை சிறை வைக்கமுடியும். [4] 12 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பழைய டாக்கா மத்திய சிறையிலிருந்த கைதிகள் 2016 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் இங்கு மாற்றப்பட்டனர். [5][6] சிறை திறக்கப்பட்டதில் இருந்து இச்சிறையில் எரிவாயு இணைப்புகள் இல்லாமல் விறகு பயன்படுத்தி உணவு சமைக்க வேண்டிய சிக்கல், மோசமான நீர் இணைப்புகள் மற்றும் பார்வையாளர் மையத்தில் இடப்பற்றாக்குறை உள்ளிட்ட பல சிக்கல்கள் இருந்து வருகின்றன. [7]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டாக்கா_மத்திய_சிறை&oldid=3300534" இலிருந்து மீள்விக்கப்பட்டது